Thursday, October 8, 2009
அக்டோபர் ஏழாம் தேதி நடை பெற்ற விலைவாசி எதிர்ப்பு உணவு உரிமை மாநாடு
Friday, May 1, 2009
மே தினம்
கரையான் தான் வாழ புற்றை கட்டுகிறது. கரையானை உண்ண வரும் பாம்பு கரையானை தின்ற பிறகு அங்கேயே தஙகிவிடுகிறது. பார்ப்பவர்கள் அந்த புற்றை கரையான் புற்று என்று கூறுவதில்லை, பாம்பு புற்று என்று கூறுகிறார்கள். பாம்பை நல்ல பாம்பு என்றும் கூறுகிறார்கள். அத்தோடு நில்லாமல் அந்த பாம்பிற்கு பாலும் வார்க்கிறார்கள். உழைப்பைச் சுரண்டி சேர்த்ததுதான் முதல். இரண்டாவதாக வந்த ஒன்றை முதல் என்று அழைக்கும் வினோதம் ஒரு புறம் இருக்கட்டும்.அந்த முதலுக்கு யார் சொந்தக்காரன் என்று கேட்டால் முதலை உருவாக்கிய உழைப்பாளியை கூறுவதில்லை, உழைப்பைச் சுரண்டிய முதலாளிதான் அதற்கு சொந்தக்காரன் என்று கூறுகிறார்கள். உழைப்பவனை அவன் உருவாக்கிய உற்பத்திச் சாதனத்திலிருந்து அன்னியப்படுத்திவிட்டு முதலாளியை பிரதான இடத்தில் வைக்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன? உழைப்பில்லாமல் முதல் இல்லை. ஆனால் முதல் இல்லாமல் உழைப்பு இருக்கும். முதல் உழைப்பைச் சார்ந்துதான் இருக்கும். ஆனால் உழைப்பு முதலைச் சாராமல் இருக்கமுடியும். இதனை எடுத்து உரைப்பதுதான் மே தினம்.
Sunday, March 8, 2009
செவி வழியாக பெண்ணின் மனக் குமுறல்கள்
Sunday, February 15, 2009
Interesting health tit-bits
- a phamplet on prostat cancer released by Lister Metropolis, Chennai.
Eating too much sugar, sweets, chocolates etc. cause diabetes is a common myth.
- a phamplet on Diabetes released by Lister Metropolis, Chennai.
Tuesday, February 10, 2009
தனி நபர் வருமானம் பற்றிய பொய்யான தோற்றம்
இன்னொரு வகையிலும் இந்த மார்தட்டல் எத்தனை தவறானது என்றும் பார்க்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள கால கட்டத்தில் விலைவாசி இருமடங்காக உயர்ந்துள்ளது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. 2000 டிசம்பரில் ரூ 16 க்கு விற்ற கடலை பயிறு 2000 டிசம்பரில் ரூ 37 க்கு விற்றதுவும் ரூ 37 க்கு விற்ற கடலை ஆயில் ரூ 77 ஆக உயர்ந்ததுவும், அதேபோல் அனைத்து விலைவாசிகளும் இருமடங்காக உயர்ந்தும் இருக்கும்போது சராசரி வருமானம் இருமடங்காக உயர்ந்தால் அதனை எப்படி உயர்வு என்று ஏற்றுக்கொள்ளமுடியும்? -- தினமணி 7-2-09
Thursday, February 5, 2009
ஊழல் உடைமை வர்க்கத்தினருக்கு ஆதரவான அதிகார வர்க்கம்
அதுமட்டுமா, தடயவியல் தணிக்கைமுறை மூலமாக ஊழல்களை மிகச் சுலபமாக கண்டுபிடித்து விடலாமாம். ஆனால் அதற்கான பயிற்சி பெற்ற தணிக்கையாளர்கள் மிக மிக குறைவாகவே உள்ளார்களாம். 6000 பேர் தேவையாக உள்ள நிலையில் வெறும் 400 பேர்தான் உள்ளார்களாம். இவர்களால் சராசரி 480 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளை மட்டுமே தணிக்கை செய்ய இயலுமாம். தொழில் அதிபர்களால் செய்யப்படும் ஊழலின் வேகத்த்திருக்கு இது போதவே போதாதாம். வருடத்திற்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறதாம். அரசாங்கமே தனது செலவில் தடயவியல் தணிக்கையாளர்களை பயிற்றுவிக்க பயிற்சி நிறுவங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவினால் தகுந்த பலன் கிடைக்கும் என்று தினமணி பத்திரிக்கையில் (2-2-09) அப்படி பயிற்சி அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் மயூர் ஜோஷி கூறுகிறார். மேலே கூறியபடி ஆளும்உடைமை வர்க்கத்தின் தலைமை இதனை செய்ய முன் வருமா?
ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? உத்திர பிரதேசத்தில் ஒரு ஆறு வயது சிறுமி 250 ரூபாய் திருடிவிட்டதாக கூறிக்கொண்டு அந்த ஒன்றரை அடி உயர சிறுமியை சுற்றி ஆறு போலீஸ்காரர்கள் நின்று கொண்டு அவளை முடியை பிடித்தும் காதை பிடித்தும் தூக்கி அடித்து கொடுமை படுத்தி உள்ளார்கள் ( தீக்கதிர் 4-2-09). வெட்கம் கெட்ட மானமில்லாத அதிகார வர்க்கம் சாதரண மக்களுக்கு எதிராக செயல்படவே நாங்கள் இருக்கின்றோம், ஊழல் புரியும் உடைமை வர்க்கத்தினருக்கு எதிராக செயல்பட அல்ல என்று தெளிவாகவே கூறுகிறார்கள்.
Saturday, January 31, 2009
வெறுப்பிற்கு எதிராக கலை நிகழ்வுகள்
வெறுப்பிற்கு எதிராக நிகழ்வுகள் என்று சென்னை கலைக்குழுவினர் தங்களது இருபத்தைந்தாவது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடினார்கள். கூத்துப்பட்டரையினர் தங்களது கொட்டைமுழக்கி நிகழ்ச்சியை துவங்கினார்கள். அவர்களது பல்வேறு விதமான முரசுகள், தப்பட்டைகள் ஒருங்கிணைந்து அடிக்கப்படும்போது மிகுந்த உற்சாகத்தை ஊட்டுகின்றது.
நேற்றைய விழாவிலேயே மிக வியப்பாகவும், பராட்டும்படியும் இருந்த நிகழ்ச்சி ப்ரீத்தி ஆத்ரேயவின் குழுவினர் அளித்த தற்கால நடனம் அல்லது அபிநய கோர்வைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. காதுக்குள்ளே சேதி வந்தபின்னே அதை கவனிக்க மறுப்பது நியாயமில்லே என்று வெற்றி வளவன் பாடியபடி செய்திகளை காதில் வாங்கிக்கொண்டால் அவை சும்மாவா இருந்துவிடுகின்றன. நாளும் நம் காதுகளில் விழிகின்ற செய்திகள் நமக்கு எவ்வாறெல்லாம் அதிர்ச்சியையும், கவலையையும், கோபத்தையும், இன்னும் எத்தனை வகையான உணர்வுகளை ஏற்ப்படுத்துகின்றன? அவற்றை எல்லாவற்றையும் நம்மால் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்துவிட முடிகின்றதா? அவை நம்மை படுத்தும் பாட்டை சமாளித்தும் சம்மாளிக்கமுடியாமலும் போகின்ற நிலைமைகளை எத்தனை யதார்த்தமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அபினயித்துக்காடினார்கள். முடிவில் எத்தனை பரிவோடு ஆறுதல் கூறினார்கள். அத்தனை உணர்பூர்வமாக செய்வது அவர்களை பாதிக்காமல் இருக்கும் அளவு பயிற்சி எடுத்திருப்பார்கள் என எண்ணுகின்றேன். ஒலி பதிவு செய்தவரும் மிக பிரமாதமாக உள்ளடக்கத்திற்கு ஏற்றவகையில்செய்திருந்தார். அதில் பங்கேற்றிருந்தவர்களின் ஈடுபாடு நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. ப்ரீத்தி ஆத்ரேயவின் பாவங்கள் மனதில் பதியும் வண்ணம் அழுத்தமாக இருந்தது. இன்னும் மனதைவிட்டு அகலவேயில்லை.
பிரசன்னா ராமசாமியின் கருத்தாக்கத்தில் உருவான ரோகிணியும் நிகிலாவும் பங்கேற்ற நவீன நடனமும் பாராட்டும்படி இருந்தது. அந்த நிகழ்வு மனுஷ்யபுத்திரனின் நான்கு வரி கவிதைக்கு உருவம் தந்தது. நிகழ்வுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட சுகுமாரனின் கவிதை ஒன்று மிருகங்கள் பண்புள்ளவையாக உள்ளன. தங்கள் மலக்கழிவை மற்றொரு சக மிருகம் உண்ணுமாறு பலவந்தப்படுதுவதில்லை. ஆனால் மனிதன் மட்டும் அவ்வாறு மற்றொரு மனிதனின் வாயில் மலத்தை திணிக்கின்றான். மிருகத்தைவிட கேவலப்பட்டு நிற்கின்றான் என்கிற வகையில் இருந்த அந்த கவிதையை பிரசன்னா ராமசாமி வாசித்தார். வெறுப்பிற்கு எதிராக நிகழ்வில் அந்த கவிதை வாசிக்கப்பட்டது மிக பொருத்தமான ஒன்றாக இருந்தது.
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் விரிவுரையாளர் தவராஜ் ஹோபர்ட் ஈழத்து நாடகப் பாடல்கள் பாடியது மிக இனிமையாக இருந்தது. அவரின் குரல் மிக நளினமாகவும் உச்சரிப்பு வெகுவாக பாராட்டும்படியும் இருந்தது.
ஹிந்து பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் என் ராம் வாசித்த உறுதிமொழி வெறுப்பிற்கு எதிரான நிகழ்வுகளை உறுதியாக கண்டிப்பதாகவும் அதற்கு எதிராக அணிதிரள வேண்டிய அவசியத்தையும் அவ்வாறு அணிதிரள்வோம் என்றும் உறுதிபட இருந்தது. இன்றைக்கு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கவலையுடன் கவனிக்கும் எவரும் இந்த உறுதிமொழி தற்போது எத்தனை அவசியம் என்பதை உணர்வார்கள். என் ராமின் தலைமையில் அனைத்து கலைஞர்களும் உறுதி மொழி ஏற்று கையொப்பமிட்டனர்.