Tuesday, August 25, 2020

Marx and Science – II

Peoples Democracy Vol. XLIII No. 18 May 05, 2019

T Jayaraman

MARX'S use of the term science clearly encompassed the social as well as the natural sciences, obvious from his use of terms such as the “science of political economy.” Marx nowhere spells out explicitly the differences between the meanings of the term science in the two domains, but his constant criticism of the classical political economists before him and his contemporaries, provide many pointers to what these are. Foremost among these is the class standpoint that is inherent in any study of society and therefore the content of the social sciences. In the case of the natural sciences the greatest effort has to be expended in the initial stages of its historical development to distinguish reality from illusion. As Marx elegantly phrases it, the aim of science is to discover the essence underlying the appearance, and so it is too in the social sciences. And in the realm of political economy that was precisely the goal of his studies in Capital. But more importantly Marx also recognised that what was illusion in the case of the natural sciences, was not only illusion but also ideology when it came to the social sciences. Holding on to the wrong conceptual framework or understanding of the social world was ideology, or false consciousness, the opposite of science. And the roots of why science was set aside, by individuals, groups or classes, in favour of ideology lay in their class bias. The science of society therefore had also to have a theory of ideology, of how and why ideology differed from the sciences, and what gave rise to the different ideologies from the viewpoint of different classes in society. 

This was not to argue that no such problem affected the natural sciences at all. Marx and Engels especially recognised this in the reception accorded to Darwin's theory of evolution in their day. In their characteristically gleeful exchanges in their correspondence, they remarked on how scientists read their own class bias into their interpretation of Darwin's work, how scientists who had till the other day spoken of the harmony in nature, suddenly turned to talking about competition and struggle as fundamental to nature's working. Yet this did not mean sinking into the mess of relativism, of declaring that there was no science at all, or declaring that in bourgeois society all science was simply bourgeois ideology. Darwin's theory of evolution was science, even if Darwin himself or his fellow scientists were confused about its interpretation, confusions that could only be settled with further development of the science.

The problem however was posed differently in the social sciences. While ideology originated from the viewpoint of a hegemonic class in society, which could not comprehend its own eventual end, science belonged to the class that could see how to transform the existing social and economic order to transcend the current mode of production. As ideology, bourgeois economic theory tended constantly, for Marx, to descend to the “vulgar”, meaning the abandoning of the quest for the essence beyond the appearance. On the other hand, it could only be an exploited class whose deepest self-interest lay in the transformation of the current economic, social and political order that could adopt a truly scientific attitude which would encompass the necessity of such a transformation. Throughout the history of Marxist thought, especially in the 20th century, the question of the class origins of and the hegemony of the ruling class viewpoint in social thought has been uncritically and incorrectly applied to the natural sciences without regard to the specific differences between the two, differences that Marx and Engels were keenly aware of. 

But the real key to Marx's perspective on science, encompassing both the natural and social world, is the philosophical standpoint of materialist dialectics that was Marx's mature world-view. He drew much from Hegel's dialectics, including his early acquaintance with it, moving on later to an unsparing critique, inspired a great deal by Feuerbach, but returning to rework it in materialist fashion, especially in the Grundrisse and then in Capital.  Marx firmly avoided both Feuerbach's mechanical outlook as well as Hegel's constant slide into idealism. But Marx's materialist dialectics was no mere juxtaposition or formal combination of elements of one and the other. It was an internally unified worldview where dialectics and materialism were necessary aspects of each other. This materialist dialectics encompassed the study of nature as well as society and its logic can clearly be seen at work in Capital, though Marx regrettably never put down in writing his  promise to “discover the rational kernel within the mystical shell” of Hegel’s dialectics.

It is in this context that the significance of Engels' comparison of Marx's achievements to that of Darwin, that we quoted at the beginning of this article, emerges most clearly. The key dialectical category in both theories is development, a term that captures the sense of growth and accumulation as well as increasing diversification that is characteristic of both political economy and biological evolution. Going deeper, in both cases this development arises from a process of reproduction, in the one through the cycle of production and circulation and in the other through simple biological reproduction. But this reproduction, and this is the key insight of dialectics, is also the expression or manifestation of the unity of essence and appearance.  So, in the case of capitalism it is the cycle of production and circulation as simple and extended reproduction from which arises the accumulation of capital. Similarly, the evolution of the diversity and multiplicity of the biological world arises from the action of the environment on the process of biological reproduction. In both cases the dialectical unity of necessity and chance is realised through this cycle of reproduction. Closer study of the similarities and differences between Marx's view of capitalist growth and accumulation and the Darwinian explanation of evolution should deepen our understanding of why Marx wrote to Engels after reading the Origin of Species, “this is the book that contains the basis in natural history for our view.”

Marx and Engels' viewpoint of materialist dialectics is perhaps even more significant in understanding Engels' observation that Marx “discovered the special law of motion governing the present-day capitalist mode of production.” What does the law of motion mean here? Many commentators have implied that there is an implicit determinism or teleology in Marx's view of the necessity of overcoming the capitalist mode of production. The unwary may suspect that Engels' language here is another manifestation of this. But such a misreading can only arise from ignoring the dialectical meaning of “the law of motion”.  For Marx and Engels it refers really to the contradiction between capital and labour and the unity of these two opposites in the capitalist mode of production. In materialist dialectics, motion is contradiction, whether it is mechanical motion (being there and not there at the same time) or motion in a more general sense. But contradiction remains abstract unless its nature is made explicit by the specific character of the unity of the opposites in the contradiction. When, as in the case of capital and labour, the opposites have their own capacity to act too, there can be no determinism or teleology.

In this bicentennial year, grasping Marx's view of science in its profound dialectical sense remains an indispensable aspect of the struggle for socialism and communism

Marx and Science – I

 Peoples Democracy Vol. XLIII No. 17 April 28, 2019

T Jayaraman

IT is a remarkable fact that at Marx's funeral, his life-long friend and comrade-in-arms Friedrich Engels chose to eulogise his friend's commitment to revolution in terms of his passion for science. Engels noted, “Science was for Marx a historically dynamic, revolutionary force. However great the joy with which he welcomed a new discovery in some theoretical science whose practical application perhaps it was as yet quite impossible to envisage, he experienced quite another kind of joy when the discovery involved immediate revolutionary changes in industry, and in historical development in general. For example, he followed closely the development of the discoveries made in the field of electricity and recently those of Marcel Deprez.”  But to note only this part of Engels' speech, would be to limit Marx's vision of science. Engels' brief oration begins in fact with Marx's contribution to the study of society, but characterised quite deliberately as a contribution to a science of society. Engels says: “Just as Darwin discovered the law of development of organic nature, so Marx discovered the law of development of human history: the simple fact, hitherto concealed by an overgrowth of ideology, that mankind must first of all eat, drink, have shelter and clothing, before it can pursue politics, science, art, religion, etc.; that therefore the production of the immediate material means, and consequently the degree of economic development attained by a given people or during a given epoch, form the foundation upon which the state institutions, the legal conceptions, art, and even the ideas on religion, of the people concerned have been evolved, and in the light of which they must, therefore, be explained, instead of vice versa, as had hitherto been the case.

“But that is not all. Marx also discovered the special law of motion governing the present-day capitalist mode of production, and the bourgeois society that this mode of production has created. The discovery of surplus value suddenly threw light on the problem, in trying to solve which all previous investigations, of both bourgeois economists and socialist critics, had been groping in the dark.”

In the light of these passages, we must note at least four significant dimensions of Marx’s view on science. The first is Marx's characterisation of science as a “historically dynamic, revolutionary force.”  The second, closely related to the first, is his emphasis of the role of science in production and how the advance of productive techniques itself develops science. The third is Marx and Engels' view of science as the mode of cognition of reality, encompassing both the natural and social worlds. And the fourth is the profoundly materialist viewpoint of regarding science as the foundation for all other modes of understanding of the natural and social, including the aesthetic and the moral.

What is the significance of the third aspect, especially when one normally uses the term science mostly in relation to our cognition of the natural world?  Marx's views on science in relation to the natural world as well as his views on the science of the social world are in fact profoundly related. One does not quite appreciate the depth of Marx's profound understanding of science of his day and his vision of what science should be, a vision that is exemplified by his study of political economy, unless one appreciates also his unified view of the sciences. This was a vision that was built on the insights of both the materialist and the dialectical tradition in philosophical thought that he brought together in a unique kind of unification that marks his study of Capital. We shall return, farther on in this note, to this question of the relation between dialectical materialism and science in Marx's view, after we comment on the first two aspects in more detail.

Why is science a historically dynamic force? Marx's answer to this is not a simple one, but a carefully nuanced account. First, in a fundamental sense, science is a revolutionary force as an integral aspect of humanity's mode of understanding nature and the significance that this has in enhancing humanity's capacity for its mastery over nature. Second, scientific advance has a dialectical relationship with production, with particularly spectacular results in the era of capitalism. On the one hand, Marx notes, even the first, sporadic appearance of machinery in the seventeenth century, though it did not play a fundamental role in the era of manufacture (and Adam Smith was indeed correct, he adds, in assigning it a subordinate role in relation to the division of labour), was of “the greatest importance, because it supplied the great mathematicians of that time with a practical basis and an incentive towards the creation of modern mechanics.” But it is under the conditions that develop subsequently, that science comes into its own, as one of the determining features of the development and entry of machinery into the production process in a sustained manner and the subsequent advance of technology.

Science, especially the science of mechanics, is indispensable in replacing the worker's hands and the worker's simple tools with the machine. In Marx's words: “The principle of machine production, namely the division of the production process into its constituent phases, and the solution of the problems arising from this by the application of mechanics, chemistry and the whole range of the natural sciences, now plays the determining role everywhere.”  Subsequently, it is the demands of production that drive the development of science. Science is not merely the product of the “disinterested” labour of the mind, but draws its motive force from the expansion of industrial production. In criticism of Feuerbach's view, Marx notes that he “speaks in particular of the perception of natural science; he mentions secrets which are disclosed only to the eye of the physicist and chemist: but where would natural science be without industry and commerce? Even this ‘pure’ natural science is provided with an aim, as with its material, only through trade and industry, through the sensuous activity of men”.

More sweepingly Marx notes elsewhere, “Mankind always takes up only such problems as it can solve; since, looking at the matter more closely, we will always find the problem itself arises only when the material conditions necessary for its solution already exist or are at least in the process of formulation.”

Thirdly, this is not a one-sided story. Nature's objective laws need to be discovered and understood and without such progress, even the inventions that humanity needs most cannot be conjured into existence by sheer will. Agriculture is the prime example in this regard. Without the necessary developments in geology, chemistry and physiology, “the sciences that directly form the specific basis of agriculture rather than of industry”, which take place especially in the later decades of the nineteenth century, productivity in agriculture could not rapidly increase, as industry had earlier. From this observation in the Theories of Surplus Value, it is clear that he recognised that the development of science was not merely an immediate response to economic demand as in a reductionist, or crude materialist, view. Some contemporary Marxist writers have missed this dialectical subtlety and as a result have extended this misunderstanding to argue that science (and technology) is somehow a class product and that capitalism calls forth the science and technology it needs without any objective constraints due to nature

மார்க்சியம் – புதிய சகாப்தம், புதிய சூழ்நிலை, புதிய தேவைகள்


மார்க்சிஸ்ட் ஜூலை 2020

(சீன கம்யூனிஸ்ட் கட்சியின்   மத்தியக் கமிட்டி  வெளியிடும்  கோய்ஷி என்ற பத்திரிக்கையின் குழுவில் உள்ள  லிஜே எழுதிய இக்கட்டுரை ஆங்கில மார்க்சிஸ்ட் (2018  ஜனவரி – மார்ச்) இதழில்  மறுபிரசுரமானது.)

[வரலாற்றின் பல்வேறு கட்டங்களிலும் சரக்கு உற்பத்தி முறையில் தொடர்ந்து மாற்றங்கள் நேர்ந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது எல்லா சமூகங்களிலும் மானுட வரலாற்று வளர்ச்சியில் இயல்பானதும் தவிர்க்க இயலாததும் ஆகும்.

அவ்வாறு உற்பத்தி சக்திகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப சந்தையும் மாறிவந்திருக்கிறது. நிலவுடைமை கட்டத்திலும் சந்தை இருந்தது. முதலாளித்துவ அமைப்பிலும் சந்தை உள்ளது. சோசலிச அமைப்பிலும் சந்தை இருக்கிறது. லாப விரிவாக்கத்திற்காக சந்தையை பயன்படுத்திக் கொள்வதையும், சந்தையை கட்டுப்படுத்துவதையும் முதலாளித்துவ கட்டத்தில் பார்க்கிறோம். சோசலிசத்தின் கீழ் சந்தை என்பது மக்களின் தேவைகளை மையப்படுத்தி உற்பத்தி பொருட்களை வினியோகிப்பதற்கான சாதனமாக இருக்கிறது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உள்ள ஒரு அங்கமாக அது உள்ளது.

விவசாயம், வணிகம், தொழில் உற்பத்தி, அரசு முதலாளித்துவம் மட்டுமல்லாமல் வணிக மற்றும் ஊக மூலதனமும், தொழில் மூலதனமும் உள்ளடக்கிய உலக நிதி மூலதனம் இப்போது உருவாகியுள்ளது. முதலாளித்துவ அமைப்பானது ஒருங்கிணைந்து ஆழமாகவும், விரிவாகவும் வளர்ச்சிபெற்று நீண்ட காலத்திற்கு நிலைத்துள்ளது.

வணிக முதலாளித்துவம் மற்றும் தொழில் உற்பத்தி முதலாளித்துவம் இச்சமூகத்தை வரலாற்று வழியில் வேறுபடுத்திக் காட்டுகிறது. குறிப்பாக அது வளர்ந்த நாடுகளுடைய தொழில் புரட்சிக் காலத்திற்கு பிறகான நிதி மூலதனத்தின் வளர்ச்சியில் அந்த வேறுபாட்டைக் காட்டுகிறது. பல்துறை வளர்ச்சி கொண்ட சமூகம், ஊடக வளர்ச்சி ஆகியவற்றை சாதித்த வளர்ந்த நவீனமான, சிக்கலான முதலாளித்துவமாக அது மாறியுள்ளது.

நவீனமான, வளர்ந்த முதலாளித்துவத்தின் இயக்கம், அதன் சித்தாந்த ஆதிக்கம் மற்றும் அதனை வீழ்த்துவதற்கான புரட்சிகர செயல்பாடு போன்றவைகளில் முக்கிய பங்களிப்பைச் செய்தவர் அந்தோனியோ கிராம்சி. அவர் இதே சொற்களில் குறிப்பிடவில்லை என்றாலும், 19 ஆம் நூற்றாண்டில் நடந்தது போன்ற புரட்சிகர எழுச்சிகளை தவிர்ப்பது எப்படி என முதலாளித்துவம் உணர்ந்துகொண்டதை சுட்டிக்காட்டுகிறார். அக்காலத்தில் முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறியும் புரட்சிகள் தவிர்க்க முடியாததைவையாக இருந்தன.

முதலாளித்துவமானது வெளிப்படையான ஒடுக்குமுறையை கொண்டு வர்க்க ஆட்சியை நிலைநாட்டுவதோடு மட்டுமல்லாமல் சிவில் சமூக நிறுவனங்களை பயன்படுத்தி மக்களின் தத்துவ நோக்கை முதலாளித்துவ அமைப்புக்கு சாதகமாக திருப்புவது என்ற வழிமுறையை கைக்கொண்டது என்பதுதான் அவரது எழுத்துக்களின் மையமாக அமைந்தது.

தொழில் துறை நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவாக்குதல்;. பொருளாதார கட்டமைப்பை நிலைப்படுத்த அரசின் தலையீட்டை பயன்படுத்திக் கொள்ளல்;. ஜனநாயக அரசாங்கம் என்ற ஏற்பாட்டைக் கொண்டு, முதலாளித்துவ அரசானது தன்னுடையை நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக ஆக்கிக் கொள்வது;. மற்றும் குறைந்தபட்ச சம்பள உயர்வு மூலம் தொழிலாளி செலுத்திய உழைப்புச் சக்திக்கு உரிய ஊதியத்தை அளிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என அது இயங்குகிறது என்பது அவர் போதனையின் வெளிச்சத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியவை.

சோசலிச சக்திகளும் தன்னை மேம்படுத்திக் கொள்கின்றன. சோவியத் அமைப்பு என்பது சோசலிசத்தின் முதல் முன்மாதிரி ஆகும். அதனால் கிடைத்த படிப்பினைகளை நாம்  எடுத்துக் கொள்கிறோம். மீண்டும் பழைய வடிவிலான சோசலிசம் சாத்தியமில்லை. அது தன்னை மேம்பட்ட வடிவத்தில் காண்பது தவிர்க்க இயலாதது.

இந்த கட்டுரை சீன மார்க்சிஸ்டுகள் எவ்வாறு தொடர்ந்து தம்மை மேம்படுத்திக் கொண்டு செயல்படுகிறார்கள் என புரிந்துகொள்ள உதவும்.

– டி.கே. ரங்கராஜன்]

1. சந்தை

சந்தைக்கும் சரக்கிற்கும் நீண்ட வரலாறு உண்டு. அவ்வரலாற்றில்  சீனத்திற்கும்  மற்ற நாடுகளைப்போல் பெரும் பங்குண்டு.  முதலாளித்துவம்  சரக்கு  உற்பத்தியையும்  சரக்கு சார்ந்த  பொருளாதாரத்தையும்  தனது நாடுகளில்  மட்டுமன்றி உலகம் முழுவதும்  கொண்டு சென்றது. அப்படி கொண்டு  செல்கையில், ஒருங்கிணைந்த  தேசிய  சந்தை,  பிராந்திய  நாடுகளின் கூட்டு சந்தை மற்றும் உலகமயமான  பொருளாதாரம் இவற்றையும் பரவலாக்கியது.

இப்படியான நிலைமையில்,  சந்தைப் பொருளாதாரம்தான் ஒருங்கிணைந்தது;  அணுக எளிமையானது; திறமையானது  என்றும்  பிரகடனம் செய்யப்பட்டது.  இப்பிரகடனம்  உலகமயமாக்கப்பட்ட  பொருளாதாரம், பிராந்திய  நாடுகளின்  பொருளாதார கூட்டமைப்பு,  சர்வதேச  நிதி மற்றும்  வர்த்தகம் இவை உலகெங்கும்  பாய்வதற்கு  உதவியது.  மேலும், மூலதனம்,  தொழில்நுட்பம், தொழில்  வல்லுனர்கள்,  தகவல் இவையாவும்  உலகமெங்கும்  பாய்வதற்கும்  இப்பிரகடனம்  வழி வகுத்தது.

இப்படிப்பட்ட  உலகளாவிய  நிலைபாட்டினால் சந்தைப் பொருளாதாரம்  என்பது முதலாளித்துவ அமைப்பிற்கு மட்டுமே  உரியது என்ற  பரவலான  கருத்து நிலவுகிறது. இக்கருத்துடையோர், சீனாவும் தனது சந்தைப்  பொருளாதாரத்தை  மேலும் வளர்ச்சி  அடையச் செய்ய  முதலாளித்துவ அமைப்பில்  உள்ளதுபோல்  அனைத்தையும்  தனியார்மயமாக்குதல் என்ற வழிமுறையைக்  கையாள வேண்டும் என்று ஆலோசனை  தெரிவிக்கிறார்கள். இப்படிச்  செய்வதன் மூலம், முதலாளித்துவ  அமைப்புகளிலிருந்து  பிரிந்திருத்தலை அது கைவிடவேண்டுமென ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.

இவர்கள்  கூறுவது  உண்மையில்  சரியா  என ஆராய்வோம்.

21-ம் நூற்றாண்டில்  நடந்த மூன்று மிகப்பெரிய  நிகழ்வுகள்  முதலாளித்துவ சந்தைப்  பொருளாதாரத்தின்  சர்வாதிகாரப் போக்குக்கு  முற்றுப்புள்ளி  வைத்தன.

ஒன்று, சீனா தனது இரண்டாவது சீர்திருத்த நடவடிக்கையில் தீவிரமாக  இறங்கியது.   இதன்மூலம்  தனது சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை  மேலும்  விரிவடையச் செய்தது.  சோசலிசத்தை அமல்படுத்திக்கொண்டே  எடுத்த இந்த தனித்துவமான நடவடிக்கை  பெரும் வெற்றியை  கொடுத்தது.   இந்த நடவடிக்கை சீனாவை உலக அளவில்  இரண்டாவது  பெரும்நாடு என்ற   இடத்திற்குச் செல்ல வழி வகுத்தது.

இரண்டாவது, இக்கால கட்டத்தில்  வளரும்  நாடுகளில்  சந்தைப் பொருளாதாரம்  மிக வேகமான  வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது.  இவ்வளர்ச்சி உலக பொருளாதார நிலமைகளை மாற்றியமைத்தது மட்டுமின்றி  உலகப் பொருளாதார  வளர்ச்சிக்கு   புதிய  இயந்திரங்களாகவும்  செயல்பட்டன.

மூன்றாவது, 2008ஆம் ஆண்டில் தொடங்கிய  பொருளாதார  மந்த நிலையால்  அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி முன்நின்ற பல மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பிய  யூனியனும்  தொடர்ந்து  பொருளாதார  தேக்க நிலையில்  சிக்கிக் கொண்டிருந்தன.

ஒருசேர நடைபெற்ற இந்த மூன்று  நிகழ்வுகளின்  விளைவு,  சீனாவில் உள்ள  ஹாங்சோ என்ற நகரத்தில் 2016ல்  ஜி-20  உச்சி மாநாடு நடப்பதற்கு வழிவகுத்தது. ஜி-20  அமைப்பின்  தலைமைப்  பொறுப்பையும் சீனா  ஏற்றிருந்தது.  இம்மாநாட்டில் சீன அதிபர்  அனைத்து நாடுகளும்  தேக்கநிலையை  உடைத்து   முன்னேற  பரிந்துரைகளை வைத்தார்.  இப்பரிந்துரைகளை   ஒருமித்த   கருத்தாக  ஜி-20 மாநாடு ஏற்றது.

இதன்மூலம்  வளர்ந்த  மேற்கத்திய நாடுகள்  மத்தியில்  சீனாவின்  மதிப்பு  மேலும் உயர்ந்தது.  சந்தைப் பொருளாதாரத்தை  ஏற்படுத்தவும்   விரிவுபடுத்தவும் முதலாளித்துவத்தால்  மட்டுமே  முடியும் என்ற   கோட்பாடு   தவறு என்பது    நிரூபணமானது.

ஒவ்வொரு நாடும்  சுதந்திரம்  அடைந்த பிறகு,  சீனா உட்பட  அனைத்து  வளரும் நாடுகளும்  தங்கள்  நாட்டு  யதார்த்த நிலைமைகள், கோட்பாடுகள்,  அம்சங்கள்  இவைகளை  கணக்கிலெடுத்து  தங்களது  சந்தைப் பொருளாதாரத்தை சுதந்திரமாக நிர்மாணித்துக் கொண்டன. இப்படி நிர்மாணிக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரம் உள்நாட்டிற்கேற்ப ஒன்றிணைக்கப்பட்டதாகவும், வெளியுலகத்திற்கு  திறக்கப்பட்டதாகவும்   அமைக்கப்பட்டன.

இதன்மூலம் சந்தை பொருளாதாரம் என்பது பல்நோக்குடனும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை  நம்மால்  பார்க்க முடிகிறது.

சந்தைப் பொருளாதாரத்தினுள்  புதைந்துள்ள  விதிகளை  ஒரு புதிய  பரிமாணத்தில்  இது வெளிப்படுத்துவது  மட்டுமின்றி  21வது நூற்றாண்டில்  மார்க்சியத்தின் மறுமலர்ச்சியையும், வளர்ச்சியையும் இப்போக்குகள் உணர்த்துகின்றன.

மிக முக்கியமாக சீனநாடு புதிய  சகாப்தத்தை  உருவாக்க ஒரு பரந்த மேடை  கிடைத்துள்ளது என்பதையும்   இந்நிகழ்ச்சிப் போக்கிலிருந்து கண்டுணர முடிகிறது. 

2. மூலதனம்

சரக்கு, சந்தை  இவற்றிற்கு உள்ளது போலவே  பணம்,  பணப்பரிவத்தனை,  கடன்,  உழைப்பு இவை எல்லாவற்றிற்கும்  ஒரு வரலாறு  உண்டு. இவை அனைத்தும் முதலாளித்துவ  உற்பத்தியுடன்  பின்னிப் பிணைந்துள்ளதால் மூலதனம்  பெருகுவதற்கு  பலமான  அடித்தளம்  அமைந்தது.

முதலாளித்துவம், உள்நாட்டு  சந்தையின்மீது தனது ஆதிக்கத்தை  செலுத்திவருகிற அதே வேளையில்,  மூலதனத்தின்  சக்தியை  கையாண்டு  உலக பொருளாதாரத்தையும், அதன் நடத்தை விதிமுறைகளையும் தனது வசமாக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.  மூலதனத்தை  விஞ்ஞானம்,  தொழில்நுட்பம்,  தொழில்புரட்சி  இவற்றுடன்  இணைத்து  இதனைச் செய்தது.

உலக பொருளாதாரத்தின்  தலைமை யார் கையில்  இருக்கவேண்டும் என்பது  முன்னேறிய  முதலாளித்துவ நாடுகளுக்கு  இடையே நடக்கும்  போட்டியில்  தீர்மானிக்கப்படுகிறது. யாரிடம்  அதிக மூலதனம்  உள்ளதோ, நிதிவளம் உள்ளதோ  அவர்களே  தலைமை ஏற்பார்கள். இது வலுவான  நாடே  ஆதிக்கம் செலுத்தும்  என்ற பொருளாதார   கோட்பாடின்  வெளிப்பாடே  ஆகும்.   

இப்படிப்பட்ட சூழ்நிலையில்  அங்குள்ள  முதலாளித்துவ  ஆட்சியில்  தொழிலாளி வர்க்கம் தனக்கு  பயன் இல்லை என்பதை  உணர்ந்து  ஒரு சமூகப்  புரட்சி மூலம்  அரசியல்  அதிகாரத்தை  கைப்பற்றுமேயானால்  அவர்கள் செய்ய வேண்டிய  முதல்  முக்கிய நடவடிக்கை   உடமையாளர்களிடம்  இருந்து உடமைகளை  எடுப்பதே ஆகும்.

இது சரியானதும்,  நியாயமான  நடவடிக்கையும்  ஆகும்.  ஏனெனில்  மூலதனம்  சமூக  சொத்தின்  ஒரு வடிவமே  என்பதும்  அது தொழிலாளர்களாலேயே  உண்டாக்கப்பட்டது என்பதனாலும் ஆகும். (சீனத்தில் புரட்சி மூலம்  அதிகாரத்தை கைப்பற்றிய பின்) இனி அடுத்தது  என்ன? என்ற கேள்வி எழுந்தது.  பல காலமாக  பதில் அளிக்கப்படாத  இக்கேள்விக்கு  பதில் அளிக்க வேண்டிய  பொறுப்பு  சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியின்  தோள்களில்  விழுந்தது.   ஒரு கடினமான  செயல்முறை ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளின்    அடிப்படையில்  பொருளாதார சீர்த்திருத்தம்  மற்றும்  சீனப்பொருளாதாரத்தை  திறந்து விடுவது என்ற நடவடிக்கை  தீர்மானிக்கப்பட்டு  கையாளப்பட்டது.

சீனப் பண்பியல்புகளுடன் கூடிய சோசலிசம்  என்ற நடவடிக்கைக்கு  மிகப்  பெரிய வெற்றி கிடைத்தது. சீனக் கம்யூனிஸ்ட்  கட்சி தனது நவீன மயமாக்கல்  மற்றும் புத்துணர்ச்சி கொண்ட தேசத்தைக் கட்டமைக்கும் தன்னுடைய இலக்கை அடையவேண்டுமென்றால்   மூலதனத்தின்  சக்தியை  புறந்தள்ளக் கூடாது என்பதை  உணர்ந்தது.

மூலதனம்   என்பது   வர்க்கத்துடனும்   சமூக  அமைப்புடனும்  பின்னிப்   பிணைக்கப்பட்டிருந்தாலும்,   அதை யார் பயன்படுத்துகிறார்கள், எந்த  அமைப்பின் கீழ்  அது செயல்படுகிறது,   அது யாருக்கு  சேவை செய்கிறது என்பவையும் முக்கியமாக  கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

இந்த மூலதனத்தின் ஆக்க சக்தியை உருவாக்குவதற்கும், கையாளுவதற்கும், பயன்படுத்துவதற்குமான அவசியம் சோசலிசத்திற்கு உள்ளது என்பது மட்டுமல்ல; அதற்கான திறனும் சோசலிசத்திடம் உண்டு. முன்பு முதலாளித்துவம்  மூலதன  சக்தியை எவ்வாறு  கையாண்டதோ,  அதேபோல  இன்று  சோசலிசம்  மூலதன  சக்தியை  உருவாக்குவது,  பயன்படுத்துவது என்பதன் மூலம்  மார்க்சியத்தை  உயர்த்திப் பிடிப்பதையும்,  அதை காலத்திற்கு ஏற்ப விரிவுபடுத்துவதையும்   செய்து வருகிறோம்.

சோசலிசத்தின்  மூலம்  மூலதனத்தின்  சக்தியை   உருவாக்குவதும், பயன்படுத்துவதும் மிகப்புதியதொரு  முயற்சி  என்று நாங்கள்  நினைக்கிறோம்.  மேலும் இவ்வகையில் மார்க்சியத்தை  உயர்த்திப் பிடிப்பதும், வளர்த்தெடுப்பதற்குமான  பயிற்சியாகவும்   நாங்கள் பார்க்கிறோம்.

இவ்வாறு  செய்யும்போது  மூன்று பெரிய,  முக்கியமான  சிக்கல்களை  தீர்க்க  வேண்டியுள்ளது.

ஒன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாங்கள் மூலதனத்தை  கையாளும்போதும், விரிவுபடுத்தும்போதும், பயன்படுத்தும்போதும் அதற்குள்  சிறைபடாமல் கவனமாக  இருக்க வேண்டியுள்ளது.

இரண்டு, சர்வதேச தளத்தில் பார்க்கும்போது, ஒவ்வொரு சோசலிச நாடும் அந்நிய மூலதனத்தை  கையாள வேண்டியுள்ளது மட்டுமின்றி, அதற்கு ஒத்துழைக்கவும்  வேண்டியுள்ளது.  மேலும்,  சோசலிச நாடுகள்  உலகம் முழுவதும் முதலீடு செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.  இவ்வாறு  செய்யும்பொழுது,  தனது நாட்டு  நிதித்துறை  பாதிக்கப்படாமல் உறுதிப்படுத்த வேண்டும். நிதித்துறையும், மூலதனமும் ஆபத்துக்கு ஆளாகாமல் பாதுகாத்திடவும் வேண்டும்.

மூன்றாவதாக, மூலதனம்  தன்னை வளர்த்துக்  கொண்டு  போகும் சூழ்நிலையில் வருமானத்தில் உருவாகும் ஏற்றத்தாழ்வையும், பகிர்வினையும் சரிப்படுத்த வேண்டியுள்ளது. மூலதனம்  விரிவடையும்போது  ஏற்படக்  கூடிய  தவறான  போக்குகளையும்  களைய வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதன் பொருள் என்னவெனில்,  நடுத்தர வர்க்கம் என்பதை  மேலும்  மேலும் விரிவுபடுத்துவதும்,  வளர்ச்சியின்  பலனை  அனைவருடன்  பகிர்ந்து கொள்வதன் மூலம்  வறுமை மற்றும் சுரண்டலை  ஒழித்து  அனைவரும்  செழிப்புடன்  வாழ வகை  செய்வதும் ஆகும்.

இப்படிச் செய்வதன் மூலமே உழைப்புக்கும் மூலதனத்திற்கும் உள்ள அடிப்படையாக உள்ள உறவை  மாற்றியமைக்க முடியும். மேலும்  மூலதனத்திற்கு  உழைப்பு  அடிமைப்படுவதை மாற்றி உழைப்பிற்கு  மூலதனத்தை  அடிமைப்படுத்திட முடியும்.

அத்தகைய  அதிசய நிகழ்வை  சீன பண்பியல்பை உள்ளடக்கிய  சோசலிசத்தினால்தான் நிகழ்த்திட முடியும்.

மேற்கண்ட  வரலாற்று  முன்மொழிவை  21ஆம் நூற்றாண்டில் மார்க்சியத்தை விரிவாக்க நாங்கள் எடுத்துள்ள முயற்சியில், சமகால சீனப் பொருளாதாரத்தோடு  நிரூபித்தாக வேண்டும்.   

3. சட்டத்தின் ஆட்சி

மனிதகுலம் வாழ்க்கையில் ஏற்படுத்திய  விதிமுறைகளிலிருந்து  சட்டம் இயற்றிய  விதிமுறைகளுக்கு  மிக அதிகமாக  மாறிய  போக்கினை நம் காலத்தில் காணலாம்.

இந்த மாற்றம்  முதன்முதலில்  பூர்ஷ்வா புரட்சியின் மூலமே  ஏற்பட்டது. இந்த மாற்றத்தின்  மூலம்    சமூகத்தின் மீது முதலாளித்துவம் தனது  ஆதிக்கத்தைச் செலுத்தியது மட்டுமின்றி, தனது புரட்சிகர  கோட்பாடுகளை, இறைஇயல், மதகுருமார்கள், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் இவர்களை அனுசரிக்கவும்  முறைப்படுத்தியது.  இவ்வாறு தனது கோட்பாடுகளை  இந்த அமைப்புகள் பின்பற்ற பல நிறுவனங்களை அமைத்து  முதலாளித்துவம் வளர்வதற்கு  உகந்த நிலையை  உருவாக்கியது.  பல நூற்றாண்டு பரிணாம  வளர்ச்சியில்  முதலாளித்துவ  பிரச்சாரத்தால்  அதற்கு உகந்த  சமூக விஞ்ஞானமும்  சட்டதிட்டங்களும்  இறுதியில்  நடந்தேறியுள்ளது.

இச்செயல்முறை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இரண்டு  முக்கிய  மாற்றங்களும்  நடந்தேறின.  ஒன்று முதலாளித்துவத்தின்  கோட்பாடுகள்  சித்தாந்தமாக்கப்பட்டதும் இரண்டு  ஏகபோகங்கள் ஆட்சி மறைமுகமாக   ஏற்பட்டதும்  ஆகும் (பூர்ஷ்வா சர்வாதிகாரம்). 

இவ்வாறு  முதலாளித்துவ  கோட்பாடுகள்  சித்தாந்தமாக   ஆக்கப்பட்ட நிலையில்,  இதற்கு வலுவான  ஆதரவு கொடுப்பதற்கு  கல்வி முறைகளையும்,   பிரச்சார மேடைகளையும் உருவாக்கினார்கள்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட முதலாளித்துவ  சித்தாந்தம்  தனக்கே  உரித்தான  வர்க்க  குணாம்சங்களை  வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  மாறாக, முதலாளித்துவம் என்பது  உலகத்தின் மறையாகவும், உலகம் முழுவதும்  உள்ளதாகவும், உலகைப்  பிரதிபலிப்பதாகவும்,  விரிந்து  கிடப்பதாகவும்   கற்பிக்கப்பட்டது.  தனது சர்வாதிகார போக்கை  முக்காடிட்டு மறைத்துக் கொண்டே  நாட்டின் விதிகளை  தனக்கேற்ற  சட்டமாக  மாற்றிக் கொண்டது.

இவ்வாறு  சட்டத்தின்  ஆட்சி என்ற  அமைப்பின் கீழ்  பூர்ஷ்வா  சர்வதிகாரம்  தன்னை மறைத்துக் கொண்டே அனைவருக்கும் பொதுவானதாகவும்,  நீக்கு போக்குடன் இருப்பதாகவும் காட்டிக் கொண்டது. மேலும் பாரபட்சமின்றி  தேர்தல்களை நடத்துவதாகவும், சீரான நிர்வாக அமைப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  நியாயத்துடன் விதிமுறைகளும், நடவடிக்கைகளும்  கையாளப்படுவதாகவும்,  சட்டத்தின்  அங்கீகாரத்திற்கு  உட்பட்டே  நடப்பதாகவும்  காட்டிக் கொண்டது. 

ஆனால் சோசலிச சட்டத்தின் ஆட்சி  முதலாளித்துவ சட்டத்தின்  ஆட்சியை அப்படியே பிரதியெடுத்து  நடத்தக் கூடியது அல்ல. மாறாக, 1. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை 2. சட்டத்தின்  ஆட்சி  3. மக்களே எம் நாட்டின  தலைவர்கள்   என்ற நிலை  ஆகிய மூன்றையும்  சமநிலைக்கு  கொண்டு வர  வேண்டியுள்ளது.  எப்படியாயினும், மனிதகுலம் ஏற்படுத்திய வாழ்க்கை நெறிமுறைகளிலிருந்து  சட்டம் ஏற்படுத்திய  நெறிமுறைகளுக்கு  மாற்றிக்கொள்வதில் பல நடைமுறை சிக்கல்களை இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது  படிப்படியாகவும்  நீண்டகாலம்  பிடிக்கும்  செயல்முறையாகவும் இருக்கும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின்  18வது  மத்திய கமிட்டி  தனது தீர்மானத்தில்  கூறிய  வழிகாட்டுதலின்  அடிப்படையில், விரிவான  சட்டத்தின்  ஆட்சியை  அமல்படுத்த நீடித்தகாலத்திற்கு ஈடுபட வேண்டியுள்ளது; அதில் முழு முயற்சியையும் செலுத்தவேண்டியுள்ளது. எங்களுடைய இந்த முயற்சியானது மார்க்சியத்தை  21ம் நூற்றாண்டிற்கேற்ப  விரிவுபடுத்தவும்,  சமகால  சீனத்திற்கு  ஏற்ப எடுக்கும் நடவடிக்கையும் ஆகும்.

எங்களது  நாட்டில்  சட்டத்தின் ஆட்சியை  அமல்படுத்துகிறபோது  மூன்று முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண  வேண்டியுள்ளது.

1. சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைமை 2. சீன அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்தி பிடிப்பது  3. சட்டத்தின்  மீது   உள்ள நம்பிக்கை   ஆகிய மூன்றுக்கும் உள்ள உறவினை  சமச்சீராக   கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  சிலர்  சட்டத்தின்  அதிகாரம் பெரிதா? அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்   அதிகாரம்    பெரிதா? என்று கேட்கிறார்கள். இது தவறு.   ஆட்சி அதிகாரம், சட்டம்  இவற்றிற்கிடையே இணக்கமான உறவிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது, சட்டத்தின்   ஆட்சிக்கும், மக்கள் ஜனநாயக  சர்வாதிகாரத்திற்கும் இடையிலான உறவையும் சமப்படுத்தவேண்டியுள்ளது.

சீனாவின் அரசியல்  அமைப்பில் உள்ள  நான்கு அதிமுக்கியமான  கொள்கை பிரகடனத்தில்  தேசிய  நிர்வாகத்தின்  அடித்தளமே  மக்கள் ஜனநாயகத்தின்  சர்வாதிகாரம் என்பதாகும்.  இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் சட்டத்திலும் உள்ளது,  சீன அரசியல்  அமைப்பு சட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.  இந்த  கொள்கையில்  எந்த ஊசலாட்டத்திற்கும்  இடம் கொடுக்க முடியாது.

எனவே, மக்கள்  ஜனநாயக  சர்வாதிகாரத்தை   சட்டத்தின்  உணர்வுகளோடு  இணைந்து எடுத்துச் செல்வதுதான் சரியான  பாதையாக  இருக்குமேயன்றி, மற்றது அல்ல.

மூன்றாவது  சட்டத்தின்  அதிகாரத்தினையும் மக்களின் முக்கிய நிலமைகளையும்  கணக்கில் கொண்டு  சமச்சீராக  கொண்டு  செல்லவேண்டியுள்ளது.  சோசலிசத்தின்  சட்ட ஆட்சியில்  மக்களே  முதன்மையானவர்கள் ஆவர்.   அதன் குறிக்கோளே  மக்களை   பாதுகாப்பது,  முன்னேற்றுவது,  அவர்களோடு   இணைந்து மக்களின்   தேவைகளை பூர்த்தி செய்வது.

இதுவே  முதலாளித்துவ  சட்ட ஆட்சிக்கும் சோசலிச  சட்ட ஆட்சிக்கும் உள்ள அடிப்படை  வேறுபாடு. 

4. பகிர்ந்தளித்தல்

செல்வத்தின் பெருக்கம் மற்றும்  செல்வம் அல்லாத பொருள்களின்  பெருக்கம்  அனைத்தும்,  எல்லா மக்களுக்கும், எல்லா சமூகத்தினருக்கும்  சமமாக  பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது உலகில் உள்ள மக்களின் விருப்பம் ஆகும். இந்த விருப்பத்தின்  பின்னணியில்  ஒரு சோசலிச சமுதாயத்தில்   கையாளப்படும்  பகிர்ந்தளித்தலுக்கும், முதலாளித்துவ சமுதாயத்தில் ஏற்படும்   பகிர்ந்தளித்தலுக்கும்  உள்ள வேறுபாட்டினை  காணலாம்.  முதலாளித்துவ சமுதாயத்தில்  அரசியல்,  சமூகம்  மற்றும் பல விசயங்களையும்   பகிர்ந்தளிப்பதற்கு  நிபந்தனை உண்டு. அதாவது சொந்த  நலன்களையே   நோக்கும் சிறுபான்மையினராக உள்ள பெரு முதலாளி மற்றும் நிலப்பிரபுக்களை திருப்திப்படுத்துவதே அந்த நிபந்தனையின் மையம் ஆகும்.

ஆனால் சோசலிசத்தில்  பகிர்ந்தளிப்பது  என்பது  இதற்கு மாற்றாக  மக்களை  மையப்படுத்திய   அணுகுமுறையாக  இருக்கும்.

சீர்த்திருத்தத்தை முன்னெடுத்துக் கொண்டே ஒரு ஆழமான  பொருளாதார  விரிவாக்கத்தை மேற்கொண்டு,  புதிய கோட்பாடுடைய  முன்னேற்றத்தின் பாதையில் பெறும் நலன்கள் அனைவருக்கும்  பகிர்ந்தளிக்கப்படும்.  இப்படிப்பட்ட  நடவடிக்கையினால்  காலம்காலமாக  சுயலாபக்காரர்கள்  ஏற்படுத்திய  தடைகள்  அகற்றப்படும்.

இவ்வாறு  பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய  நோக்கத்தை நிறைவேற்றிடவும், திட்டவட்டமான,  சமச்சீரான  நலன்களை   கிராமப்புறம் மற்றும்  நகர்ப்புறத்தில்  வாழும் மக்களிடையே உறுதி செய்யவும்  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளால்  கிராமப்புற,  நகர்ப்புற  மக்களிடையே  ஒருங்கிணைந்த  முன்னேற்றம்,  நியாயமற்ற  வருமானத்தை கைப்பற்றி பகிர்ந்தளித்தல்,  நடுத்தர வர்க்கத்தை  விரிவுபடுத்துதல்  மற்றும் கிராமப்புற மக்கள் மற்றும்  அடித்தட்டு மக்களின்  வருமானத்தை   அதிகரித்தல்  ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள்  எடுக்கப்படுகின்றன.

பகிர்ந்தளிப்பது என்பது சோசலிசத்தின் ஒரு அடிப்படையான அம்சமாகும். சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியின்  நெஞ்சார்ந்த  கொள்கை  என்பது தன் மக்களுக்கு  மனப்பூர்வமாக  சேவை செய்வதே ஆகும்.

சோசலிச நவீனமயமாக்கலின்  அடிப்படை நோக்கம் என்பது  இறுதியில்  மக்களின்  முழுமையான  முன்னேற்றமாகும்.  முன்னேற்றத்தின்  கொள்கை  என்பதே மக்களுக்காக,  மக்களின்  உதவியுடன்  பெறப்படும் நன்மைகள்  அனைத்தும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.   பகிர்ந்தளித்தல் என்பது  கொள்கை மட்டுமல்ல;  தேவையும் கூட. இந்த செயல் நடைமுறையால் சமூகத்தை  கீழ்நிலையிலிருந்து  மேல்நிலைக்கு   முன்னேற்ற முடியும்.

இந்த பகிர்ந்தளித்தல்  ஒரே நாளில்  நடக்கக்கூடியது அல்ல. ஆகவே  இத்தருணத்தில்  மக்களின்  எதிர்பார்ப்புகளுக்கு  அதிகமாக  உறுதி அளித்துவிடக் கூடாது.  அதேநேரத்தில்  பகிர்ந்தளித்தல்  என்பது ஒரு வெற்று முழக்கமாகிவிடுவதும்  கூடாது.  அதேசமயத்தில் பகிர்ந்தளிப்பது என்பது  சமூக நிலைகளிலுள்ள  வேறுபாடு  மற்றும் பன்முகத் தன்மைகளை  கணக்கில் கொண்டு  செய்யப்படும் என்பதை  முன் எச்சரிக்கையுடன்  உறுதி செய்ய வேண்டும். எல்லோருக்கும்  என்ற அடிப்படையிலோ  அல்லது  எல்லோருக்கும்  ஒரேமாதிரி என்ற  அடிப்படையிலோ பகிர்ந்தளிப்பது தவறாக முடியும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்தில்  ஏற்படக்கூடிய  வெவ்வேறு  நிலைகளுக்கு ஏற்ப  பகிர்ந்தளிப்பதிலும்  வெவ்வேறு மாறுபட்ட  நிலைகள் ஏற்படும்.  இந்நிலையில்  சமூகத்திலுள்ள  ஒவ்வொரு  அடுக்கு மக்களுக்கும், மக்கள் பகுதிக்கும்,  குறிப்பாக  குறைந்த  வருமானமுள்ள  பகுதியில்  உள்ளவர்கள்  மகிழ்ச்சி  அடையவும்,   ஆதாயம்  பெறவும் திருப்தி  அடைவதற்குமான நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.  இதன்மூலம்  சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட்  கட்சிக்கு, சீன நாட்டிற்கு, சீன சமூகத்திற்கு பற்று உடையவர்களாக  இருப்பது மட்டுமன்றி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கும்  முன்வருகிறார்கள். 

இவ்வாறு  பகிர்ந்தளிப்பது  என்ற நடவடிக்கை மூலம்  மார்க்சியத்தை   21ஆம் நூற்றாண்டிற்கேற்ப  முன்னேற்றி சமகால சீனத்தில்  அமல்படுத்திப் பார்ப்பது என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம்.

5. சகவாழ்வு

பலவிதமான சமூக அமைப்பு மற்றும் சமூகச் சூழல், வரலாறு,  கலாச்சாரம்  இவைகளிலும் பலவிதமான பின்னணி  உடைய நாடுகள் அனைத்தும்  ஒருவருக்கொருவர்  இணைக்கமாக இருப்பது  இன்றைய முக்கிய  தேவையாகும்.  இதன்மூலம்  மனித குலத்திற்கு  தேவையான  பகிர்ந்தளிர்ப்புடன் கூடிய எதிர்காலத்தை  நிர்மாணிக்க முடியும்.  ஒருவருக்கொருவர்  ஒத்துழைப்புடனும்,  அமைதியான சூழலுடனும்  வளர்ச்சிப் போக்கினை  நிறுவிட  முடியும்.  இவ்வாறு  செய்வதன்மூலம்  பலம் மிகுந்த  நாடே  உலக நாடுகள் அனைத்தின் மீதும்  பொருளாதார   கலாச்சார  மேலாதிக்கம்   செலுத்தும்  என்ற காலம்  காலமாக  இருந்த எண்ணத்தை அடியோடு அகற்றிட முடியும்.

இந்த சமாதான  சகவாழ்வு  என்பது  சோசலிசத்திற்கும்  முதலாளித்துவத்திற்கும் இடையே  ஊசலாடுகிறது. முதலாளித்துவமும்  சோசலிசமும் வெவ்வேறு காலகட்ட வளர்ச்சி நிலைகளில் உள்ள போதிலும், அவற்றின் சமூக அமைப்புகள் வேறுபட்டிருக்கும்போதும், இவை இரண்டுக்குமான சகவாழ்வு தேவைப்படுகிறது. அவ்வாறு  சகவாழ்வு  வாழ்கின்ற இன்றைய  காலகட்டத்தில் இவ்விரு  வெவ்வேறான  சித்தாந்தங்களுடைய  சமூக  அமைப்புகள் ஒன்றோடொன்று  போட்டியிட்டுக் கொண்டே, ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொரு சமூக அமைப்பு கற்றுக் கொள்வதையும்  பார்க்க முடிகிறது.  சமூக வளர்ச்சியில்,  வரலாற்றில்  இப்படிப்பட்ட  புதுமையான  நிகழ்ச்சி இதுவரை   ஏற்பட்டதில்லை.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்  முதலாளித்துவம்  தோன்றியதிலிருந்து  இன்று பலவிதமாக மாறுபட்டுள்ளது.  ஒரேமாதிரியான  உற்பத்தி  முறையோ  அல்லது சமூக அமைப்போ உலகில்  ஆதிக்கம்  செலுத்த முடியும்  என்ற காலமும்  கரையேறிவிட்டது. ஆகவே இன்றைய காலகட்டத்துடன் இணைந்து வாழ  பனிப்போர் திட்டங்களை அறவே ஒழிப்பதும்  என்னை எதிர்ப்பவர் தோல்வியுற வேண்டும் என்ற  போக்கை  கைவிடலும் அவசியமாகிறது.

முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையில்  யார் யாரை  அழிப்பது என்ற  கேள்விக்கே  இடமில்லை.  பல வருடங்களாக மேற்கத்திய நாடுகள்  சோசலிச நாடுகளை தோற்கடிக்கவும்  அல்லது மாற்றியமைக்கவும்  முயற்சிகளை  மேற்கொண்டன.  இந்த முயற்சியில்  சோவியத் யூனியனிலும்  கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும்  சோசலிசத்தை அகற்றி வெற்றி கண்டனர்.  இதனால் உலக அளவில்  சோசலிச சக்திகளுக்கு  தற்காலிக   பின்னடைவு ஏற்பட்டது.  ஆனால்  இக்கால கட்டத்திலும்  சீனப் பண்பியலோடு கூடிய  சோசலிசத்தின் வளர்ச்சியை  தடுத்து நிறுத்துவதில் அவர்கள் தோற்றுப்போனார்கள். சோசலிசத்தினுடைய  உருக்கு போன்ற சக்திக்கு  இது ஒரு சான்றாகும்.

இன்றைக்கு  மிகச் சிக்கலாக  இருக்கக்கூடிய உலக  வரைபடத்தில்  சோசலிசமும்  முதலாளித்துவமும்  தங்களது  வலுவில்  சமமாக  பொருந்தியுள்ளன.  இரண்டிற்குமே  ஒரு மிகுந்த  சக்தியுடைய தலைமையும், பல  ஆதரவு சக்திகளும்  உள்ளன.

இந்த நிலைமை ஏற்பட  நேரடியான  போரையோ  அல்லது பனிப்போரையோ  காரணமாக  காட்ட முடியாது.  நீண்டகால,  சமாதான  வளர்ச்சியுடன்  சீனப் பண்பியல்போடு கூடிய சோசலிசம்  நிறுவப்பட்டதும்,  சீர்திருத்தமும்,  பொருளாதாரத்தை   திறந்துவிட்டதும் இதற்கான காரணங்கள் ஆகும்.  இந்த சீன வளர்ச்சியின்மூலம் பனிப்போர் காலத்தில் ஏற்பட்ட “சோசலிசம்  முடிந்துவிட்டது” என்ற கோட்பாடு  முறியடிக்கப்பட்டது.

இவ்வாறு  சமாதான சகவாழ்வு என்பதன் மூலமும்,   சீன அரசின்  வலுவும்  வளர்ச்சியும் இணைந்து  சீனாவை  உலக மேடையின்  நடுமையத்திற்கு  இட்டு வந்துள்ளது.  முதலாளித்துவத்தின்  அமைப்புகளை  இறுதியாக  சோசலிசமாக  மாற்றுவது என்பது   பல சரித்திர   கட்டங்களை உள் அடக்கிய  நீண்ட கால நிகழ்ச்சியாகும்.

ஒரு முக்கியமான  கட்டத்தில் சோசலிச நாடுகள்  அனைத்தும்  தங்கள் நாட்டிற்கு ஏற்புடைய  சீர்த்திருத்த  நடவடிக்கைகளில்  இறங்க வேண்டும். தங்கள்  நாட்டினை  திறந்துவிடல்  வேண்டும். இதன்மூலம்  உலக முதலாளித்துவத்தை  சமமாக  சந்திக்க  இயலும்.

இப்படிச் செய்வதன் மூலம்  மேற்கத்திய  நாடுகள்  சோசலிசத்தை பின்பற்றி வரும் நாடுகளை முற்றுகையிடுவதையும், கட்டுப்படுத்துவதையும்  உடைத்தெறிய முடியும்.

பொதுவாகச் சொன்னால், முதலாளித்துவமும்  சோசலிசமும்  சகவாழ்வு  வாழ்வது  சம்பந்தமாக  நான்கு முக்கிய  குறிக்கோள்களை மனதில்  கொள்ள வேண்டும்.

ஒரு சோசலிச நாடு தான் செல்லும்  பாதையில்,  கோட்பாடுகளில், தன்னுடைய  அமைப்பில்,  கலாச்சாரத்தில்  அசையா நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.  இவைகளில்  உங்களுக்கே  நம்பிக்கை இல்லையெனில்   உங்கள்மீது  நம்பிக்கை வைத்து  வருவார்கள்  என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இரண்டாவது  சோசலிச நாடு  சுயச்சார்பு உடையதாக  இருக்கவேண்டும். இதற்கான  முயற்சியை தன் கையில் இறுகப் பற்றி எடுக்க வேண்டும். எக்காரணம்  கொண்டும்  மற்றவர்களை  சார்ந்து  இருக்கக்கூடாது. தன் நாட்டினுடைய  இறையாண்மை,  பாதுகாப்பு,  வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்  இவை எதற்கும்  பிறநாட்டை  சார்ந்திருக்கக் கூடாது.

மூன்றாவது ஒரு சோசலிச நாடு வெளி உலகிற்கு  தனது நாட்டை   முழுவதும் திறந்து விடவேண்டும்.  உலக நாடுகளுடன் விரிவான  தொடர்பு  வைத்திடல்  வேண்டும்.   இதன்மூலம்  ஒருவருக்கொருவர்  கற்றுணர வேண்டும்.

நான்காவது  ஒரு சோசலிச நாடு தனது  சர்வதேச தொடர்புகளை  மேம்படுத்திக் கொள்ளுதல்  மிகவும்  அவசியம்.  இதன்மூலம்  தனது செல்வாக்கை  உலகளவில்  உயர்த்திக் கொள்ள முடியும்.

மேற்சொன்ன  நான்கு  கோட்பாடுகளையும்  சோசலிச  நாடுகள் கையாள்வதே  வெற்றிக்கு  திறவுகோலாக  அமையும். நீண்டகாலமாக  அனுகூலங்களற்ற நிலையில்  இருக்கும் சோசலிச  நாடுகள்  தங்கள் நாடுகளின்  பண்பியல்பிற்கு ஏற்ப சோசலிச  நடவடிக்கைகளை  வளர்த்திட வேண்டும்.  அவ்வாறு  வளர்ப்பதற்கு  நாட்டிற்கேற்ற  சீர்த்திருத்தங்களையும்,  நாட்டை திறந்து விடுவதையும்  மேற்கொள்ள  வேண்டும்.   

இக்கட்டுரையில்  கூறப்பட்ட  ஐந்து முக்கிய விசயங்கள்:- 1. சந்தை 2. மூலதனம்  3. சட்டத்தின்  ஆட்சி  4. பகிர்ந்தளித்தல்  5. சகவாழ்வு  இவைகளின்  சுருக்கம்  யாதெனில்  ‘மார்க்சியம் நிச்சயமாக மறுமலர்ச்சி பெறும் என்பதும்,  எங்களது  சீனக் கனவின் அடிப்படையில் சீன  தேசம்  புத்தெழுச்சி  பெறும் என்பதுமாகும்.

மார்க்சியம் சீனாவில் வளர்வதற்கு  தேவையான அடித்தளமும்  நம்பிக்கையும்  உள்ளது.

இதற்கான  தரக்குறியீடு  என்பது 21ஆம் நூற்றாண்டிற்கான  மார்க்சியத்தை  சமகால  சீன நாட்டில் பொருத்தி அதை  வளர்ச்சி  அடையச் செய்வதும் ஆகும்.   மேலும் சீனப் பண்பியல்களோடு தத்துவம்,  சமூக விஞ்ஞானம்,  ஆய்வு  முதலியவற்றை  மேற்கொள்ளுவதும்  ஆகும்.

தமிழில்: கே.ராமசுப்பிரமணியன்

சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

 பிரகாஷ் காரத்

கேள்வி: தொடர்ச்சியான பல நடவடிக்கைகளின் மூலம் சீனாவை இலக்கு வைத்து அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் அமைதி, ஸ்திரத் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆக்ரோஷமானதொரு சக்தி என சீனாவை சித்தரிக்கும் வகையில் சர்வதேச அளவிலான பிரச்சாரத்தையும் அமெரிக்கா நடத்தி வருகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? தனக்கு விரோதமான இத்தகைய பிரச்சாரத்தை சீனா எவ்வாறு காண்கிறது?

சீனாவிற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு பின்னணி உள்ளது. சீனாவின் வலிமை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அதைக் கட்டுப்படுத்தி வைக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கி தனது முக்கிய எதிரி சீனாதான் என்று அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கு நிர்ணயித்தது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க ராணுவப் படைகளை களமிறக்குவதற்கான திட்டங்களை தீட்டியதோடு, ஆசிய-பசிஃபிக் பகுதிக்கான போர்த்தந்திரம் ஒன்றையும் இறுதிப்படுத்தியது.

‘ஆசியப் பகுதிக்கே முன்னிலை’ என்ற கொள்கையை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம்தான் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் கடற்படையில் 60 சதவீத படைகள் ஆசிய-பசிஃபிக் பகுதிக்கு நிலைமாற்றப் பட்டன.

எனினும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சீனா பொருளாதார ரீதியாக வலிமையடைந்ததோடு, அதன் உலகளாவிய அணுகல் திறனும் பெருமளவிற்கு அதிகரித்தது.

ட்ரம்ப் அமெரிக்க அதிபரான உடனேயே, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சீன நாட்டுப் பொருட்கள் அனைத்தின் மீதான சுங்க வரியை  அதிகரித்ததோடு சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தையும் தொடங்கினார். கூடவே அமெரிக்காவில் தயாராகும் நுண்ணிய சிப்கள் மற்றும் இதர கருவிகள் ஹுவேயி போன்ற சீன நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்காதவாறு செய்யவும் அவர் முயன்றார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சீனாவின் மீதான தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. கூடவே சீன நாட்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகவும் பல்வேறு தடை உத்தரவுகளையும் அது விதித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகை மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி ஹுவேயி நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டுமென தனது கூட்டாளிகளை சம்மதிக்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

வலுவானதொரு பொருளாதார சக்தியாக சீனா உருவாகி வருவதாலேயே இவை அனைத்தும் நடைபெறுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக இன்று சீனா மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தையும் விஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே செயல்படும் திறன் வாய்ந்த இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பமான ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வரும் தொழில்நுட்ப வலுமிக்க ஒரு சக்தியாகவும் சீனா மாறிக் கொண்டு வருகிறது. உயர்தொழில்நுட்பத் துறையில் இதுவரையில் ஏகபோகத்தை அனுபவித்து வந்த அமெரிக்காவிற்கு இந்த அம்சமே மிகவும் அச்சமூட்டும் விஷயமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கிய பிறகு, இந்தப் பெருந்தொற்றினை வெற்றிகரமாக சமாளித்து, மிக விரைவாக பொருளாதாரத்தையும் மீட்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. அதே நேரம் தனது நாட்டுப் பொருளாதாரத்திற்கு மிகப் பிரம்மாண்டமான வகையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள பெருந்தொற்றினை சமாளிப்பதில் அமெரிக்கா தவறியுள்ள நிலையில் ட்ரம்ப்பிற்கு பயமேற்பட்டுள்ளது. அவரது இந்தப் பயம்தான் சீனாவின் மீதான கண்டனங்களும் தாக்குதல்களும் மீண்டும் ஒரு முறை அரங்கேற வழிவகுத்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளில் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இந்தப் பெருந்தொற்று வெடித்தெழுவதற்கு முன்பாகவும் கூட சீனா அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. பொருளாதாரத் துறையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு உருவாகும் எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதன் கண்ணோட்டத்தின்படி அமெரிக்கா ஒரு மேலாதிக்க சக்தியாக நடந்து கொள்கிறது என்பதே ஆகும். ஐரோப்பாவில் உள்ள பெரும் நாடுகளான ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆசியாவில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளுடன் வழக்கமான பொருளாதார உறவுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அமைதியான வகையில் நிகழ்ந்து வரும் தனது முன்னேற்றம் வேறு எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் சீனா தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. தனது நாட்டை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பாதையை மேலும் மேலும் அதிகமான அளவில் ட்ரம்ப் பின்பற்றி வரும் அதே நேரத்தில் வெளிப்படையான வர்த்தகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வளத்திற்கான வழியாக, அனைத்து நாடுகளுக்கும் உரியதாக இருக்கிறது என உலகமயமாக்கலை சீனா உயர்த்திப் பிடிக்கிறது.

தற்போது நிலவி வரும் மையமான முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலானது என நமது கட்சி எப்போதுமே கூறி வந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா உருப்பெற்றுள்ள நிலையில் சோஷலிச சக்திகளின் வலிமையை எவ்வாறு நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்? தற்போதைய உலகளாவிய சக்திகளின் பலாபலனில் சீனாவின் செல்வாக்கு எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் எனக் கருதுகிறீர்கள்?

ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை மையமானதொரு முரண்பாடாகவே நமது கட்சி கருதுகிறது. சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. அனைத்து வகையிலும் வலுவானதொரு நாடாக சீனா தன்னை வளர்த்துக் கொண்டு, உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது மாறியுள்ள சூழ்நிலையே மிகவலுவான ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிற்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகையதொரு சூழலில் இருந்துதான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார, போர்த்தந்திர ரீதியான அதிகாரம் நீண்ட காலமாகவே சரிந்து வரும் அதே நேரத்தில் சீனா தனது வலிமையையும் செல்வாக்கையும் தொடர்ந்து உறுதியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற பின்னணியில்தான் அமெரிக்க – சீன மோதல் என்பது நடைபெறுகிறது. உலகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் (பிஆர்ஐ – பண்டைக் காலத்தில் சீனாவின் பட்டு வர்த்தகர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணித்த பாதையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வழியாக புதிய நெடுஞ்சாலைகள், கடல் வழிகள் ஆகியவற்றின் மூலம் இந்த நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது; அதன் மூலம் சீனாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் அந்த நாடுகளின் ஒப்புதலுடன் சீனா மேற்கொண்டுள்ள (கடல்வழி) பாதை மற்றும் (நெடுஞ்) சாலை திட்டம் – மொ-ர்) சீனாவின் பூகோள ரீதியான, அரசியல் ரீதியான வீச்சு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கான வலுவான வெளிப்படாக அமைகிறது.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க-சீன நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் என்பது சர்வதேச அரசியலின் தீர்மானகரமான, முக்கியமான ஓர் அம்சமாக இருக்கும். புதியதொரு பனிப்போர் உருவாகி வருகிறது என்ற பேச்சு வெளிப்படத் தொடங்கியுள்ள போதிலும் கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய மோதலைப் போன்றதாக இதைச் சித்தரிப்பது பொருத்தமானதாக இருக்காது. அந்த நேரத்தில் ஏகாதிபத்திய முகாம் என்பது பல நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் தலைமையிலான ஒரு குழு என்பதாக இருந்தது. மறுபுறத்தில் சோவியத் யூனியன் தலைமையில் சோஷலிச முகாமைச் சேர்ந்த நாடுகள் இருந்தன. அதே போன்று அப்போது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கணிசமான பொருளாதார உறவுகள் என்று எதுவும் நிலவவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்பது முற்றிலும் மாறானதாகும். அமெரிக்காவுடன் மட்டுமின்றி அதன் நேட்டோ கூட்டாளி நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் கூட சீனா விரிவான பொருளாதார உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா விளங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் மிகப்பெரும் முதலீடுகளை செய்துள்ளன.

அதேபோன்று அமெரிக்காவின் தலைமையில் அல்லது சீனாவின் தலைமையில் நாடுகளின் குழுக்கள் என்பதும் இப்போது இல்லை. சீனாவிடமிருந்து ‘விலகிக் கொள்வது’ பற்றி அமெரிக்கா பேசி வந்தாலும் கூட, அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளி நாடுகளாலோ அவ்வாறு செய்வது எளிதான ஒன்றல்ல. அமெரிக்க-சீன மோதல் அதிகரித்து வரும் பின்னணியில் சீனாவுடனான பொருளாதார உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தப் பிராந்திய குழுவைச் சேர்ந்த நாடுகளின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள வலதுசாரி சக்திகள் விரும்பிய வகையில் உருவாக இயலாது.  ‘இந்திய-பசிஃபிக்’ பகுதி என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடலையும் உள்ளிட்ட பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர்த்தந்திர ரீதியான, ராணுவ ரீதியான முஸ்தீபுகள் இந்தப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

எனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலை ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணியில்தான் காண வேண்டும். சோவியத் யூனியன் சிதறுண்டு போனதற்குப் பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தே வருகிறது. எனினும் சோஷலிச சீனாவின் அதிகரித்துக் கொண்டே வரும் வலிமையானது எதிர்காலத்தில் வெளிப்படவிருக்கும் முரண்பாட்டின் மீது தாக்கம் செலுத்தவும் செய்யும்.

ஏகாதிபத்திய தாக்குதலுக்கு பதிலடி தருகையில் ஒரு சில தருணங்களில் சீனா சமரசம் செய்து கொள்வதைப் போலத் தோன்றுகிறது. சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்தும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது. 1960களில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்த திருத்தல்வாத கருத்துக்களை எடுத்துக் கூறி வந்ததையும்  நாம் பார்த்தோம். இப்போது சீனாவும் கூட அதே பாதையில்தான் செல்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியுமா?

இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையேயான சமாதானபூர்வமான சகவாழ்வு என்பது போன்ற கருத்தோட்டங்களை பற்றிப் பேசும்போது அதன் வரலாற்றுப் பின்னணியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே, அதாவது முதலாளித்துவம் மற்றும் சோஷலிசம் ஆகிய இரண்டு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டம் என்பது அடிப்படையில் தவறானதொரு கருத்தோட்டம் அல்ல. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை உருவாக்கிய வழியைத்தான் நாம் விமர்சித்தோம். இந்த இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதான பூர்வமான போட்டி, சமாதானபூர்வமான வகையில் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது  ஆகியவற்றோடு இணைந்த வகையில்தான் இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை அது முன்வைத்தது. இந்த மூன்று கருத்தோட்டங்களைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்தது.

சோஷலிசம் என்பது வலுவானதொரு சக்தியாக இருக்கும் காலத்தில் சமாதானபூர்வமான சகவாழ்வு மற்றும் சமாதானபூர்வமான போட்டி ஆகியவற்றின் மூலம் சோஷலிசத்தின் மேன்மை நிரூபிக்கப்பட்டு விடும்; அதன் மூலம் சமாதானபூர்வமான சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழி திறக்கும் என்ற மாயையை அது பரப்பி விடுகிறது. இத்தகைய கருத்தோட்டமானது ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. அதன் விளைவாக முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்டங்களை அது புறக்கணித்து விடுகிறது. ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் எந்தவொரு காலத்திலும் சோஷலிசத்தோடு இணக்கமாக இருந்து விட முடியாது என்பதை அங்கீகரிக்கவும் இக்கருத்தோட்டம் தவறுகிறது. எனவேதான் இத்தகைய கருத்தோட்டங்களை நாம் திருத்தல் வாதம் என்று அடையாளப்படுத்தி விமர்சித்தோம்.

இன்றைய நிலைமை என்ன? நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமானதாக மாறியுள்ளது. மீதமுள்ள சோஷலிச நாடுகளும் கூட சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்க சூழலையும், முந்தைய சோஷலிச நாடுகளுக்குள் மூலதனத்தின் அதிகாரத்தை மேலும் முன்னேற்றி, தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தீவிரமாகப் பாடுபட்டு வரும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு நிலையில்தான் இருந்து வருகின்றன.

இத்தகையதொரு சூழ்நிலையில், இரு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவது சரியான ஒன்றே ஆகும். ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தனது உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேலும் வளர்ப்பது;, மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேலும் உயர்த்துவது ஆகியவற்றில்தான் அது கவனம் செலுத்தி வருகிறது. அதன் ராணுவ, பாதுகாப்பு வலிமை உள்ளிட்டு அனைத்து வகையிலும் சீனாவை வளர்த்தெடுப்பதற்கான அமைதியானதொரு சூழலும் அதற்குத் தேவைப்படுகிறது. சோஷலிசத்தின் தொடக்க நிலையில்தான் சீனா உள்ளது என்றே சீன கம்யூனிஸ்ட் கட்சி வகைப்படுத்தியுள்ளது. ஐம்பது ஆண்டுக் காலத்திற்குள் அதனை ஓரளவிற்கு நல்ல வளமானதொரு நாடாக வளர்த்தெடுப்பது என்பதையே அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அது தற்போது கிட்டத்தட்ட எட்டியுள்ளது. முக்கியமான முதலாளித்துவ நாடுகள் மற்றும் நிதி மூலதனத்துடன் விரிவான உறவுகளை அது ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாகவே இது சாத்தியமானது. இந்தச் செயல்பாட்டின் ஊடேயே, சந்தைப் பொருளாதாரத்தை அது வளர்த்தெடுத்துள்ளதோடு, தனியார் மூலதனம் வளரவும் அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய மூலதனம் மேலாதிக்கம் செய்து வரும் ஓர் உலகத்தில் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்ப செயல் அறிவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க இத்தகைய செயல்முறை தேவைப்படுகிறது என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தனித்துவமான சீன அடையாளங்களோடு கூடிய சோஷலிசத்தை கட்டுவது குறித்த மதிப்பீட்டை நாம் மேற்கொள்ளும்போது சீனா தொடர்ந்து முன்னேறி வருவதையும், மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது என்பதையும், வறுமையை அகற்றுவதில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏகாதிபத்தியத்துடனான சமரசப் போக்கின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என இவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடக் கூடாது.

எனினும், சமாதானபூர்வமான சகவாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சோஷலிச அமைப்பும் வளர்ந்தோங்கி வருவதை ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்கள், சீர்குலைவு முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு எப்போதும் இருந்து வருவது அவசியமாகும்.  ‘ஏகாதிபத்தியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்பு கைவிட்டிருந்தது. நமது கட்சியின் 20வது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தில் இத்தகைய போக்கு ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடவும், ஒரு சர்வதேச கண்ணோட்டத்தை கைவிடுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் எச்சரிக்கை செய்திருந்தோம்.

இறுதியாக, முன்னேற்றம் அடைந்ததொரு சோஷலிச நாடாக சீனா தன்னை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதையே உலக அளவில் சோஷலிசத்தின் எதிர்காலம் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. அவ்வகையில் அவர்களது இத்தகைய முயற்சிகளுக்கான நமது ஒற்றுமையுணர்வையும், ஆதரவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன மக்களுக்கும் நாம்  தெரிவித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

மார்க்சிஸ்ட் ஆகஸ்ட் 2020


இந்திய-சீன எல்லை பிரச்சினை:

 இந்திய-சீன எல்லை பிரச்சினை:

காலனித்துவ காலச் சுமை

--------------          ----------------    --------

இந்திய-சீன எல்லைத் தகராறு பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்தே நீடித்து வரும் பிரச்சினை என்பதை சீனா உலகிற்கு நினைவூட்டிக் கொண்டே வந்துள்ளது. சீனா பலவீனமான நாடாக இருந்த காலத்தில் கூட, பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் சீனத்தின் மீது திணித்த இடைக்கால ஏற்பாடான எல்லை வரையறைகளை ஏற்க மறுத்து வந்துள்ளதை சீன அரசியல்- வரலாற்று அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

1914 இல் சிம்லாவில் பிரிட்டிஷ் இந்தியா வுக்கும்,திபெத்துக்கும் இடையேயான எல்லையை வரையறுப்பதற்காக நடத்தப்பட்ட   மாநாட்டில் திபெத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அன்று பலவீனமாக இருந்த சீனாவுக்கு நிர்ப்பந்தமளித்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கு சாதகமாக எல்லையை நிர்ணயிபப்பதும், திபெத்துக்கு கூடுதல் சுயாட்சியை கொடுக்க வைப்பதுமே மாநாட்டின் நோக்கமாகும்.


முதலில்சீனாவிடமிருந்து திபெத்தை பிரித்து விட்டு, அடுத்து சியாங் ஜாங்கை பிரித்து பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லையில் இருந்து சீனாவை அப்புறப்படுத்துவதே பிரிட்டிஷாரின் திட்டமாக இருந்தது.ஏனெனில், அன்று பலவீனமாகவும், ஐரோப்பியர்களின் ஆணைப்படி ஆட்சி செய்து கொண்டிருந்த நாடாகவும் இருந்தது.இருப்பினும், சீன தூதுக் குழுவினர் பிரிட்டிஷாரின் சூழ்ச்சிகளுக்கு அடிபணிய மறுத்து விட்டனர். ஆனாலும் தனது நோக்கத்தில் உறுதியாக இருந்த பிரிட்டிஷார் பொறுக்கி எடுக்கப்பட்ட திபெத் தூதுக் குழுவினருடன் எல்லை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். இதுதான் மக்மோகன் எல்லைக் கோடு என்று அறியப்படுகிறது. வடக்கு எல்லைக்கு பிரிட்டிஷ் காலனித்துவ அரசில் பணிபுரிந்த அதிகாரி மக்மோகன் பெயர் சூட்டப்பட்டது.


தன்மீது திணிக்கப்பட்ட இடைக்கால எல்லை நிர்ணயிப்பை சீனா கடுமையாக மறுத்தது.மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சீனா சந்திக்க வேண்டியிருக்கும்.பேரழிவு ஏற்படும் என்று அன்றைய பிரிட்டிஷ் அயல்துறை செயலர் சீனாவை எச்சரித்தார்.


கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோவும் சரி-தேசியவாதியான சியாங் கே ஷேக்கும் சரி- இருவருமே மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். திபெத் சுதந்திரமான நாடு கிடையாது. எனவே,எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதற்கு உரிமை இல்லை என்று வாதிட்டனர்.



சுதந்திர இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டது.இது சுதந்திர இந்தியாவின் முதல் பத்தாண்டு காலம் நீடித்தது. எல்லையில் நிலவும் இக்கட்டான நிலைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவை இணங்கச் செய்ய சீனா முயற்சித்தது. ஆனால் நேருவோ இந்தியாவை காலிசெய்து வெளியேறி விட்ட பிரிட்டிஷ் காலனித்துவ அரசு மூலமாக பெற்ற மக்மோகன் எல்லைக் கோட்டிலேயே உறுதியாக நின்றார்.


சூ என் லாய் வருகை

____       ____

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியாக சூ என் லாய் 1960 இல் இந்தியாவுக்கு வந்தார்.அக்சாய் சின் பகுதியின் மீதான சீனாவின் உரிமையை இந்தியா அங்கீகரித்தால்,அருணாச்சலப் பிரதேசம் முதல் மக்மோகன் கோடு வரையிலான பகுதியில் இந்தியாவின் உரிமையை ஏற்றுக்கொள்ள சீன அரசு முன்வந்தது. நேரு இந்த சலுகையை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். எல்லைப் பிரச்சினையில் நெகிழ்வுத் தன்மையற்ற வெளியுறவு நிலைபாட்டை நேரு மேற்கொண்டார்.


இந்திய-சீன எல்லைத் தகராறு இன்றிருப்பது போல அன்று உணர்ச்சி கரமான பிரச்சினையாக மாறவில்லை. எல்லைப் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காணக் கூடிய வகையில், நேரு அன்று இணையற்ற மாபெரும் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மிகப்பெரிய பெரும்பான்மை பலம் இருந்தது. இந்தியா வின் எல்லா மாநில சட்டமன்றங்களும் காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.

திபெத் விடுதலையை ஆதரித்த ஜனசங்கம்(பாஜகவின் மூதாதைக் கட்சி), 

மற்றும் ராம் மனோகர் லோகியாவால் வழிநடத்தப்பட்ட சிறிய அளவிலான சோசலிச வட்டாரங்களும்தான் எல்லைப் பிரச்சினை தீர்வுக்கு எதிராக இருந்தனர்.


மேற்கத்திய நாடுகள், இந்தியாவின் வலதுசாரிகள் மற்றும் சமூக ஜனநாயக அரசியல் கட்சிகள் மத்தியில் திபெத் விடுதலைப் பிரச்சனை                             ஆக மாறியிருந்தது.தலாய் லாமா சீன அரசுக்கு எதிராக கலகக் கொடி உயர்த்தினார்;1959 ஆம் ஆண்டில் இந்தியாவிடம் அடைக்கலம் கோரினார்; இந்தியாவும் அவருக்கு புகலிடம் அளித்தது. இது பீகிங்கை கோபப் படுத்தியது.மேற்கு நாடுகளின்  தாராளமான நிதியுதவியுடனும்,இந்திய அரசின் ஆதரவுடனும்  வெளிநாட்டில் செயல்படும் திபெத் அரசு அமைக்கப் பட்டது.இந்திய-சீனா இருதரப்புமே கடுமையான நிலைபாடுகள் மேற்கொண்ட போதிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியானது இந்தியாவுடன் உடன்பாடுக்கு இடையூறாக திபெத் பிரச்சினையை குறுக்கிடவிடவில்லை.


அமெரிக்க சிஐஏ உளவு அமைப்பு 1956 முதல், திபெத்தில் சீனாவுக்கு எதிரான சதிவேலைகளில்  ஈடுபட்டதை தலாய் லாமாவின் அண்ணன் கியாலோ தாண்டப் ஒப்புக் கொள்கிறார்.இதனால் இந்தியா மீது சீனா சந்தேகப்பட்டது.எல்லைத் தாவாவுக்கு தீர்வு காண்பதில் சீனாவுக்கிருந்த ஆர்வம் குறைந்துவிட்டது.


 1962 இந்திய- சீனப் போருக்கு

பின்னர்,தோண்டப் தலைமையில் சிஐஏ நிதி மற்றும் பயிற்சியுடன் சீனாவுக்கு எதிராக கொரில்லா தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இதற்கு இந்திய அரசின் மறைமுக ஆதரவும் இருந்தது. எனினும் தோண்டப் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.

இந்தியா திபெத்தின் தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்பட்டு 1949 இல் இருந்த சுயாட்சி மண்டல நிலைக்கு திபெத் திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று சீனா கருதியது.இதுவே சீனா 1962 இல் இந்தியா மீது போர் தொடுத்ததற்கான முக்கிய காரணம்.


"முன்னேறுக" கொள்கை

____                _____


நேருவின் "முன்னேறுக"

( Forward Policy)கொள்கையானது, சீன மக்கள் விடுதலைப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பகுதிகளில்  இந்திய அவுட் போஸ்டுகளை அமைப்பதற்கு இந்திய ராணுவத்திற்கு பச்சைக் கொடி காட்டியது.இந்தியா உரிமை கோரும் அனைத்து பகுதிளில் இருந்தும் சீன ராணுவத்தை வெளியேற்றுவதே  இந்திய ராணுவத்தின் இலக்காக இருந்தது. இது தவறான கணிப்பாகி விட்டது.இது 1962 போர் மூள்வதற்கான காரணமாக இருந்தது. இந்திய- சீனப் போர் பற்றிய ஹெண்டர்சன் புரூக்ஸ் என்பவரின் அறிக்கை தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது.இந்த அறிக்கையில், நேருவின் "முன்னேறுக" கொள்கையை செயல்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்தின் நிலை இல்லை கூறப்டட்டுள்ளது. இரு பெரும் வலிமையான நாடுகளுக்கு இடையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நாடாக (Buffer State) திபெத்தை மாற்றுவதாகவே நேருவின் ராணுவ சாகசக் கொள்கை இருந்ததாக சீன அரசியல் - ராணுவ நோக்கர்கள் கருதுகின்றனர்.


திபெத் விடுதலை என்பதற்கு நேரு ஆதரவாக இருந்தார் என்பது உண்மைதான். இருப்பினும், திபெத் விடுதலைக்கு அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்று 1951 ஆம் ஆண்டில் அமெரிக்க வேண்டுகோள் விடுத்தபோது ,நேரு  அதை உடனடியாக நிராகரித்தார்.1954 இல் திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை இந்தியா அங்கீகரித்தது. எனினும் காலப்போக்கில் இந்த நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டு விட்டது.சீனாவிடம் இருந்து திபெத்துக்கு கூடுதல் சுயாட்சி கோரி தலாய் லாமா போராடுவதை இந்தியா ஊக்குவித்தது.

1959 இல் தலாய்லாமாவை பின்பற்றுபவர்கள் லாசாவில் நடத்திய கலகத்தில் நேரு அரசின் பங்கிருந்தது என்று சீனா குற்றஞ்சாட்டியது.


சி.ஐ.ஏ. வில் உயர் பொறுப்புகளை வகித்த புரூஸ் ரீடல் என்பவர் எழுதிய " மறந்து போன நெருக்கடி: திபெத், சி.ஐ.ஏ., மற்றும் இந்திய- சீனப் போர்"என்ற புத்தகத்தில் (2017) சி.ஐ.ஏ. திபெத்தில் சதி வேலைகளில் ஈடுபட்டும், மற்ற காரணங்களுமே சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்க காரணமாயிற்று என கூறப்பட்டுள்ளது.சோசலிச நாடுகளை பலவீனப் படுத்துவதற்காக அமெரிக்கா வின் "கெடுபிடி யுத்தத்தின்" ஒரு பகுதியே அமெரிக்கா திபெத்தில் மேற்கொண்ட மறைமுக நடவடிக்கைகள் என்று தலாய்லாமா ஒப்புக் கொண்டார். 1957- 61 காலத்தில் சி.ஐ.ஏ. திபெத் பிரிவினை வாதிகளை மிகவும் தீவிரமாக ஆதரித்தது.

இந்திய உளவு அமைப்புகளின் உதவியின்றி சி.ஐ.ஏ. இப்படி செயல்பட முடியாது என்று சீனா சந்தேகப்பட்டது.


லடாக் எல்லையில் இந்தியா-சீனா வுக்கு இடையிலான சமீபத்திய மோதலால் 1962 போர் போன்ற தீவிரமான மோதலாக உருவாகும் அபாயம் உள்ளதாக புரூஸ் ரீடல் கூறியுள்ளார்.இதனால் அமெரிக்கா வரும் சீனாவுடன் போர் நடத்தும் நிலமையை ஏற்படுத்திவிடும் என்று புரூஸ் ரீடல் சுட்டிக் காட்டுகிறார்.

இந்திய- சீனப் போரின் போது நேரு அமெரிக்காவின் உதவியை நாடினார்.

முற்றுகையிடப்பட்ட  இந்தியப் படைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா வும், பிரிட்டனும் விமானங்களில் ஆயுதங்களை அனுப்பின என்று புரூஸ் ரீடல் எழுதியுள்ளார்.ஆனாலும், இந்திய ராணுவத்தை தோல்வியிலிருந்து காப்பாற்றும் அளவுக்கு போதுமான ஆயுத உதவி வரப் பெறவில்லை.சமீபத்தில்,

வெளி உலகத்திற்கு வெளியிடப்பட்ட கென்னடி நிர்வாகத்தின் ஆவணங்களின் படி, சீன நிலைகளை குண்டு வீசித் தகர்த்தெறிவதற்காக 350 போர் விமானங்களுடன் பத்தாயிரம் அமெரிக்க விமானப்படை வீரர்களையும் அனுப்புமாறு நேரு அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தது தெரியவந்துள்ளது.


ஆனால், கென்னடி முடிவெடுப்பதற்கு முன்பாகவே சீனா கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆனால்,அவர்கள் உரிமை கோரும் அக்சாய் சின் பகுதியில் மட்டும் சீனா தனது படைகளை நிலைநிறுத்திக் கொண்டது.சீனத்துடன் இந்தியா போரிட்டுக் கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்றிக் கொள்ள திட்டமிட்டதாகவும், இந்த முயற்சியை கென்னடி பாகிஸ்தானை தடுத்து நிறுத்தியாகவும் புரூஸ் ரீடல் எழுதியுள்ளார்.


இந்திய- சீனப் போர் ஒரு மாதம் நடந்தது.

நீண்ட தூரம் சீனா ஊடுருவி இருந்தது.

தானாகவே, போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.மக்மோகன் எல்லைக் கோடானது  "எல்லைக் கட்டுப்பாட்டு கோடால்" அலுவலகப் பூர்வமாக அகற்றப் பட்டுவிட்டது.


1967 இல் நடைபெற்ற மோதல்

___.                          ____


இந்தியா, சீனா இடையே 1967 இல்

 நாது லா  மற்றும் சோ லா (Nathu La and Cho La) பகுதிகளில் மீண்டுமொரு பெரிய மோதல் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் 140 பேர் இறந்தனர். சீனத் தரப்பிலும் ஏராளமானோர் இறந்தனர்.இதற்குப் பின்னர்  தற்போது 2019 இல் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.


இதற்கு முன்பும், பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுமையான மோதல் விளிம்பில் இரு தரப்பும் நின்றனர்.

ஆனால், நல்வாய்ப்பாக இரு தரப்பும் நிதானத்துடன் நடந்து கொண்டதால் பெரிய மோதல்கள் தவிர்க்கப் பட்டன.



1993 ஒப்பந்தம்

_______


தவறான புரிதல்கள், எதிர் பாராத நிகழ்வுகள் போன்றவற்றால் ஏற்பட்டுவிடக் கூடிய நேரடி மோதல்களைத் தவிர்ப்ப தற்காக "எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை பராமரிப்பதற்கான" சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.  எல்லையில் ஏற்படும் தகராறுகளுக்கு

படைபலத்தை பிரயோகிக்காமல், பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண்பதென இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.எல்லைக் கட்டுப்பாடு கோடு நெடுகிலும் படைபலத்தையும் குறைத்துக் கொண்டன.

1996,2005 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மேலும் கூடுதலாக எல்லை ஒப்பந்தங்கள் ஏற்பட்டது இருதரப்பு நம்பிக்கையை பலப்படுத்தியது.


ஆனாலும், எல்லைகள் தீர்க்கமாக வரையறுக்கப்படாத காரணத்தால், சிறு சிறு மோதல்களும் நடைபெற்றன.

எனினும், கடந்த 35 ஆண்டுகளாக துப்பாக்கி சூடு நடக்கவில்லை. மோடியின் தீவிர தேசியவாத அரசின் வருகை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதட்டநிலைச் சூழல் ஏற்பட்டது.இந்திய எல்லைப் பகுதியில் சாலைகள் அமைத்தல், அக்சாய் சின் அருகில் உள்ள லடாக்  பகுதியில் விமான நிலைய மேம்பாட்டு பணிகள் போன்றவற்றால் சீனா எச்சரிக்கை அடைந்தது.


1996 இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனை நடத்தியதை நியாயப் படுத்தும் விதமாக சீனாவை கேந்திரமாக எதிரியாக அடையாளப் படுத்தியதை சீனா ஒரு போதும் மறக்காது.அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில்," எமது எல்லைகளில் 1962 இல் ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திய, வெளிப்படையான அணு ஆயுத சக்தி கொண்ட நாடு எமது அண்டை நாடாக உள்ளது.கடந்த சில பத்தாண்டுகளாக அந் நாட்டுடன் உறவு மேம்பட்டுள்ள போதிலும்,

இறுதி செய்யப்படாத எல்லைப் பிரச்சினையால் அவநம்பிக்கை நிலவுகிறது" என்று அணுகுண்டு சோதனைக்கு அப்பட்டமாக சீனா  காரணமாக கூறப்பட்டிருந்தது.



அடுத்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்து ஆண்டு கால ஆட்சியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பெரிய பிரச்சினைகள் ஏதுமில்லை.இருப்பினும், அந்தக் காலத்தில்தான் இந்திய- சீன எல்லை சாலைகள் அமைக்கும் திட்டம் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன.இந்தியா சீனா கருத்து வேறுபாடு கொண்டிருந்த 73 எல்லைச் சாலைகள் போடப்பட்டன.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சீனா தொடர்பான அயலுறவு கொள்கையில் ஐ.மு.கூ. அரசு (2) அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமாக சென்றது.


சீனாவைக் கட்டுக்குள் வைப்பதற்கான சீனாவை சுற்றி வளைப்பதற்காக அமெரிக்கா ராணுவ முன்னணி மையத்தை ( Military Pivot) தொடங்கிய போது இந்தியா அதில் விருப்பமான பங்குதாரராகச் சேர்ந்தது.இந்தியா சீன எல்லையில் உட்கட்டமைப்புகளை இந்தியா பலப்படுத்தி -ஆசிய- பசிபிக் மண்டலத்தில்  தங்களுடன் இணைந்து செயல் படுவதற்கான கப்பல் படையையும் பலப்படுத்த அமெரிக்கா விரும்பியது.  


டோக்லாம் மோதலுக்குப் பின்னர், மோடியின் அரசு சாலைப் பணிகளை விரைவுபடுத்தியது.காரகோரம் மற்றும் திபெத்- ஜிங் ஜியான் நெடுஞ்சாலை அருகில் உள்ள டார்பக் -சாயோக் - தௌலத் பேக் சாலையை இந்தியா அமைந்ததே கல்வான் மோதலுக்கான முக்கிய காரணமென்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.



மோடியின் பங்கு

_.   ‌‌.     ___

மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்திய-சீன உறவுகள் மோசமடடைய ஆரம்பித்தது.இதுவரை இல்லாதவாறு மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டில் செயல்படும் திபெத் அரசுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

தேர்தல் பிரச்சாரங்களில், காங்கிரஸ் கட்சி சீனாவுக்கு எதிராக வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டதாக மோடி குற்றம் சாட்டினார்.


2014 இல் ஜி ஜின்பிங் இந்திய வருகைக்கு பின்னர் உறவுகள் மீண்டும் சீரடைந்தது.

ஆனாலும், 2017 இல்  இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த டோக்லாம் நிகழ்வு சீனாவுக்கு ஆச்சரியமேற் படுத்தியது.இந்தியா, பூடான் மற்றும் சீனாவின் எல்லைகள் ஊடறுக்கும் பகுதியாகும் டோக்லாம்.பின்னர் இந்தியா, சீனா அந்தப் பகுதியில் இருந்து பின்வாங்கின.

 பூடான் முடியாட்சி சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு  தனிப்பட்ட முறையில் முயற்சிகளைத் துவக்கி உள்ளது.டோக்லாம் சம்பவத்திற்குப் பின்னர்,2028 இல் வூகானில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் மோடியும், ஜி ஜின்பிங் கும் எல்லைப் பகுதிகளில்  ஏற்படும் பதட்டங்கள் நிலைமை மோசமடைவதை தவிர்க்க தங்களின் ராணுவங்களுக்கு  வழிகாட்டுதலை வழங்க ஒப்புக் கொண்டனர்.இரண்டு தலைவர்களும் மீண்டும் 2019 இல் சென்னையில் சந்தித்தனர். இரு நாடுகளும் மண்டல மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டன.


ஆனால், கடந்த இரண்டு ஆண்டு களிப்பெல்லாம்,  உலகின் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட ஆறு மாதங்களுக்குள்ளாக ஒன்றுமில்லாமல் மாயமாகி விட்டது.



ஜீன் 15 கல்வான் நிகழ்வு இருந்து இந்திய வீரர்களின் உயிரிழப்பில் முடிந்துள்ளது.

இந்தியாவின் உணர்ச்சி வசப்பட்ட நிலை இன்னும் நீடிக்கிறது.  எனினும், இரு நாடுகளும்  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதட்டத்தை குறைப்பதற்கான தொடர் பேச்சு வார்த்தைகளை துவக்கி உள்ளன.இதைத் தொடர்ந்துசீன ராணுவம் சில பிரச்சினைக்குரிய முனைகளில் இருந்து வாபஸ் பெற்றுள்ளது.மோதலுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் ஆளில்லா விமானங்களை இயக்குவதில்லை. பதட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒரு மாதம் இருதரப்பு மே கால்நடை ரோந்துப் பணியை மேற்கொள்வதில்லை என்று ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் உயர்மட்ட படைத் தலைவர்கள் மட்டத்தில் இதுவரை நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.


சீனா கடந்த ஆண்டில் இருந்தது போன்ற நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா கோருகிறது.இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜுலை மூன்றாவது வாரத்தில் லடாக் சென்ற போது, உடன்பாடு ஏற்பட சிறிது காலமாகலாம் என்று தெரிவித்துள்ளார்.


இரு தரப்புமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் அடிப்படையில்,  எல்லைப் பிரச்சினைக்கு முழுமையான உடன்பாடு காண்பதே நீடித்து நிலைக்கும் அமைதியைக் கொண்டு வரும் என்பது இருதரப்புக்கும் தெரியும்.


_____________ 

ஃப்ரண்ட்லைன் ஆக.14,2020



தமிழில் ம.கதிரேசன்