Saturday, October 27, 2012

நீயா .. நானா ..? - ஒரு கரும்புள்ளி

ஒரு நீயா .. நானா? நிகழ்ச்சியில், பழைய தொழில் சார்ந்த வியாபாரிகள், புதிய தொழில் சார்ந்த வியாபாரிகள் என்று இரு குழுக்களுக்கு நடுவிலான ஒரு விவாதம் நடந்தேறி வந்தது. அதன் கடைசி பாகத்தில் நகர சுத்திகரிப்பாளர்கள் நால்வரையும், அதில் ஒருவரின் மகளையும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் ஐவரையும் மதுரை சமூக ஆர்வலர் முத்துக் கிருஷ்ணன் எங்களூரிலிருந்து அழைத்து வந்திருந்தார்.

அந்த ஐவரையும் ஒரு பக்கம் நிறுத்தி அவர்களிடம் கேள்விகளை கோபிநாத் கேட்டுக் கொண்டிருந்தார். நான் தங்க்ஸிடம் ஏன் இவர்களை மட்டும் தனியே நிற்க வைத்துக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களை உட்காரவைத்து பேச வைக்கக்கூடாதா என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இது என் முதல் ஏமாற்றம். 

அந்த ஐவரில் ஒரு இளம்பெண். மலம் அள்ளும் ஒருவரின் குழந்தை. மிக மகிழ்ச்சியாக தான் முதுகலை முடித்து (M.Sc., B.Ed. ??) முடித்து இப்போது கணினியில் ஒரு டிப்ளமா கோர்ஸ் படிப்பதாகச் சொன்னார். தன் தந்தையின் தொழிலை எங்கும், யாரிடமும் மறைப்பதில்லை என்றும் கூறினார். அவரை அப்படி மகிழ்ச்சியாகப் பார்த்தது நன்றாக இருந்தது. அவர் படிப்பு, ஆர்வம், வேலை பார்க்கும் எண்ணம் பற்றி அங்கிருந்த புதிய தொழில் சார் மக்கள் யாரேனும் கேள்வி கேட்டு அவருக்கு அங்கேயோ வேலையளிக்க முன் வருவார்களோ என்று நான் எதிர்பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை.  அவர்கள் எல்லோருமே வியாபாரிகள் தானே!  .. இல்லையா?! . இது என் இரண்டாவது ஏமாற்றம். 

வந்திருந்த மற்ற நால்வரில் இருவர் பெண்கள். அதில் ஒருவர் தான் சொல்ல வந்ததை மிகக் கோர்வையாக, வெகு இயல்பாக எடுத்துச் சொன்னார். அடுத்தவர் பேசவில்லையே என்று நினைத்த போது, அவர் கோபிநாத்தைப் பார்த்து, நீங்களும் கூட எங்களை நிற்க வைத்து தானே பேசுகிறீர்கள்; எங்களை இங்கே உட்காரவைக்கவில்லையே என்று நேருக்கு நேர் கேட்டார். இதன் பிறகு கூட கோபிநாத் அவர்களை அங்கே உட்கார வைக்கவில்லை.  வேகமாக வந்து நீங்க என் அக்கா என்றெல்லாம் கோபி சொல்லி அப்பெண்ணை அணைத்து ஈடு கட்டியது ... ஹூம் .. “பப்பு வேகவில்லை”!  அவரும் அவரது குழுவும் மிகவும் மோசமாக இடறிய இடம் இது. இது மூன்றாவது ஏமாற்றம். ஏமாற்றம் மட்டுமல்ல மிகக் கொடுமை.

 மரியாதையை கேட்காமல் கொடுத்திருக்க வேண்டும். கேட்டும் கொடுக்க மனமில்லையெனில் அது மிகக் கொடுமையே. ஒருவேளை அங்கே ஏற்கெனவே உட்கார்ந்திருந்தவர்களோடு இவர்களை உட்கார வைத்தால் அவர்கள் கஷ்டப்படுவார்களோ என்று நினைத்திருப்பார்களோ? என் பார்வையில் அங்கு உட்கார்ந்திருந்த பல பெண்களை விட நிற்க வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட சுத்திகரத் தொழிலாளிப் பெண்கள் இருவரும் மிகவும் நன்றாக இருந்தார்கள். They were more presentable that many in the audience. பின்னும் ஏனிந்த நடைமுறை?

ஊடகங்களில் சாதி இந்துக்கள், தலித்துகள் என்று பிரித்து எழுதுவது வழக்கம். ஒரு வேளை நீயா நானாவில் சாதி இந்துக்கள் மட்டும் தான் உட்காரவைத்து மரியாதை செய்யப் படுவார்களோ? இது போன்ற நல்ல நிகழ்வுகளிலேயே இந்த சாதிய முறை இப்படிப் பட்டவர்த்தனமாகப் பார்க்கப்படுமாயின் நாம் வேறே எங்கே போய் முட்டிக் கொள்வது?

2012/10/21 ramiah narayanan <mrajaramiah@yahoo.co.in

Wednesday, October 10, 2012

Only CPI(M) can take such a fair stand


கர்நாடகம் மட்டும் இந்தியா அல்ல; மாண்டியா மட்டும் கர்நாடகம் அல்ல
சிபிஎம் மாநிலச் செயலாளர் ஸ்ரீராமரெட்டி விமர்சனம்

பெங்களூரு, அக். 9-கர்நாடக மாநிலத்தில் பாசனத் துயரங்களை களைவதற்கு ஆட்சி யாளர்களிடம் அரசியல் உறுதி இல்லை. ஆனால், காவிரி நீர் விவ
காரத்தில் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களாக செயல்படுகிறார் கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலச் செய லாளர் ஸ்ரீராமரெட்டி சாடினார்.கோலாரில் திங்களன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் தண்ணீர் பற்றாக் குறை தொடர் பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு, விவசாயிகளி டையே ஸ்ரீராமரெட்டி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், தற்போது நிலவிவரும் காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில் நுட் பமான அணுகுமுறை தேவை. இந்த விஷயத் தை சில விஷமச் சக்திகள் கையில் எடுத்துக்கொண்டு தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகின்றன எனக் குற்றம் சாட்டினார்.தமிழகத்திற்கு காவிரி நீரை கர் நாடகம் திறந்துவிட வேண்டும் என் கிற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யாவிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபடுவோம் என சில தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் கள். இந்த அறிவிப்பை வெளியிட்ட தலைவர்கள் நாட்டின் உயர் அரசி யலமைப்பு சட்ட நிர்வாகத்திற்கு மிரட்டல் விடுகிறோம் என்பதை உணர வேண்டும் என ஸ்ரீராம ரெட்டி கூறினார்.மாண்டியா மாவட்டம் சிக்பல்ல பூர் மற்றும் கோலார் ஆகிய மாவட் டங்களைக் காட் டிலும் மிகச்சிறந்த பாசன வசதி பெற்று உள்ளது. ஆனால் இதர மாவட்டங் களில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. உணர்ச்சிமயமான விஷயமாக காவி ரிப்பிரச்சனை உள்ள நிலையில் சில அரசியல் தலை வர்கள் அதனுள் புகுந்துவிட்டனர். ஹைதராபாத்-கர் நாடகம், மத்திய கர்நாடகம் ஆகிய பகுதிகளில் நிலவுகிற மக்கள் பிரச் சனையைப் பற்றி யாரும் பேசவில்லை என்றும் ஸ்ரீராமரெட்டி கூறினார்.தமிழகத்திற்கு தண்ணீர் பங்கீடு செய்வதில் நியாயமான நிலைப்பாடு கள் உள்ளன. தமிழக விவசாயிகளும் இந்தியர்கள்தான். கர்நாடகம் மட்டும் இந்தியா அல்ல. மாண்டியா மட்டும் கர்நாடகம் அல்ல. கர்நாட கத்தில் தண்ணீர் பிரச்சனை கடுமை யாக உள்ளதாக கூறப்படும் மாண் டியாவில் காவிரி நீரை அம்மாநிலத் தின் 45 சதவீத மக்கள்தான் சார்ந்துள் ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழகத்திற்கு ஒவ்வொரு முறை யும் தண்ணீர் திறந்துவிடும் போது எதிர்ப்பு காட்டுவதைக் காட்டி லும், மாநில அரசு அபரிமிதமான தண் ணீர் இருக்கும் போது சேமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத் தினார்.

நன்றி: தீக்கதிர் 10-10-201