Tuesday, March 19, 2013

சாத்தான் வேதம் ஓதினால் சந்தேகம் வர வேண்டாமா?

-உ. வாசுகி
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட ஆயுத மோதலில், மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இப் பின்னணியில் இலங்கை அரசு, சர்வதேச அழுத்தத்துக்கு அடி பணிந்து, சுயேச்சை யான, உயர்மட்ட, நம்பகத்தன்மையுள்ள விசா ரணையை நடத்த முன் வர வேண்டும். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மறு பக்கம், இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, மீள் குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு மறு வாழ்வு போன்ற சம கால, எதிர்காலத் தேவை கள் உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில், இந்தியா இத்த கைய வாதத்தை முன் வைத்து, இலங் கைக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என் பதையும் இந்த நேரத்தில் கட்சி வலியுறுத்து கிறது.

இதற்கிடையே, அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை மீறல் குறித்த தீர்மானத் தைச் சுற்றி விவாதம் நடந்து கொண்டிருக் கிறது. தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள், ஒபாமா தலையிட வேண்டும் எனக் கோரு கிறார்கள். அமெரிக்காவை மனித உரிமை பாதுகாவலராகக் கருதி முன் வைக்கப்படும் இக்கோரிக்கை மிக அபாயகரமானது. அமெ ரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டின் அரசி யலை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. வரலாற்றின் வழி நெடுகிலும், மனித உரிமைகளை அப்பட்டமாகக் காலில் போட்டு மிதித்தே வளர்ந்த சக்தி அல்லவா அமெரிக்கா? ஒபாமா, ஜார்ஜ் புஷ், கிளிண் டன், கார்ட்டர், ரீகன் போன்ற தனிநபர்களைத் தாண்டி, ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நோக்கமே ஆக்கிரமிப்பும், அத்துமீறல்களும் தானே? தமது நலனுக்காக ஒப்பந்தங்களைப் போட வைப்பதும், அதே நலனுக்காக போட்ட ஒப்பந்தங்களைக் கிழித்தெறிந்து குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும் ஏகாதிபத்திய நாடு களின் வாடிக்கை தானே? சவுதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நட்பு நாடுகளின் படு மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவோ, ஐரோப்பிய வல்லரசுகளோ இது வரை தீர்மானம் கொண்டு வராத ரகசியம் என்ன? பின்லேடன் போன்ற பலரை, அமெ ரிக்க ஏகாதிபத்தியம், தனது நலன் கருதி வளர்த்துவிட்டு, அவர்களின் வன்கொடுமை களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவித்து, உதவி செய்து, பின்னர் தன் வர்க்க நலனுக்குப் பலனில்லை என்று தெரிந்தவுடன், அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, போட்டுத் தள்ளிய நடவடிக்கைகளை அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரத்தக் கறை படிந்த வரலாறைச் சுருக்கமாகப் பார்ப் பது, ஆடு நனைகிறதே என்று (அமெரிக்க) ஓநாய் ஏன் அழுகிறது என்ற கேள்வியின் நியா யத்தை உணர்ந்து கொள்ள உதவும்.

கொலம்பஸ் போட்ட

ஆக்கிரமிப்பு விதை

அமெரிக்கா மட்டுமல்ல; இன்றுள்ள முன் னேறிய முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் வரலாறுகள் ஆக்கிரமிப்புகளால் ஆனவை தான். கொலம் பசும் அவரது குழுவும், 1492ல் அமெரிக்கக் கண்டத்தில் கால் பதித்தனர். இது தற்செய லானதல்ல. ஐரோப்பிய முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் ஒரு பகு தியாக, செல்வம் தேடி, தங்கம் தேடி, வளங் கள் தேடி அலைந்த பயணக் குழுவாக அதைப் பார்க்கலாம். கொலம்பஸ் குழுவினர், அங் கிருந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடிமைகளாக ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய் தனர். அவர்களது தங்க வயல்களைக் கபளீ கரம் செய்தனர். கொலம்பசும், அவருக்குப் பின் அது போன்று வந்தவர்களும் 2 ஆண்டு களில், தூக்கிலிட்ட, கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய செவ் விந்தியர்களின் எண்ணிக்கை 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. ஐரோப் பிய கண்டத்திலிருந்து வேலை தேடியும் பலர் இப்படி வந்தனர். அமெரிக்க கண்டத் தின் பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை, இனப் படுகொலை செய்து, ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து மற்ற இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.

எது நாகரீகம்?

அட்லாண்டிக் சமுத்திரத்தின் கட லோரம் துவங்கி, பசிபிக் சமுத்திரக் கரை வரை, அத்தனை பூர்வ குடியினரையும் அழித் தொழித்து, அமெரிக்க சாம்ராஜ்யம் ஸ்தாபிக் கப்பட்டது. இதற்கு சுமார் 300 ஆண்டுகள் பிடித்தன. இந்த 300 ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமை கள் மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டன. 1830ல், அமெரிக்க அதிபராக இருந்த ஜாக் சன், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப் பரப்பில் இருந்த காட்டுமிராண்டிகளை வெளியேற்றிவிட்டு, நாகரீகமான வெள்ளை இன மக்களை அடர்த்தியாகக் குடியேற்று வது தான் அமெரிக்காவின் நோக்கம் என்று பகிரங்கமாக அறிவித்தார். அமெரிக்காவின் எல்லை கள் இப்படித்தான் விரிவடைந்தன. விரிவாக்கத் திற் காக, உள்ளூர் மக் கள் மீது படு கொலைகள், உயி ருடன் எரிப்பு, ஏமாற்று வேலை, மோசடி, பெண் கள் மீது சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விட ப்பட்டன. நாகரீகம் சொல்லிக் கொடுக்கி

றோம் என்ற பெயரிலும், உயர்ந்த தத்துவம், நாகரீகம், ஞானம், மனிதாபிமானம், சுதந்திரம், ஆண்மை உடைய உயர் இனம் முன்னேறு வது தான் உலகத்துக்கு நல்லது என்ற பெய ரிலும் கொடுமைகள் நடந்தன. இன்று ஜன நாயகம் சொல்லிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல நாடுகளுக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியம் நுழைவதற்கு, அன்றே அச்சாரம் போடப்பட்டுவிட்டது. அமெரிக்க ஊடகங்கள் மற்றும் வெகுஜன பொதுப் புத்தி யின் ஒரு பகுதியாக இது மாறிவிட்டது. அண்டை நாடுகளை ஆக்கிரமித்து தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கு முத லாளித்துவ வணிக நலனும், லாப நோக்கமும் தான் அடிப்படை காரணமாக இருந்தன. உதா ரணமாக, கியூபாவைப் பற்றிச் சொல்லும் போது, கியூபாவில் 1 கோடி ஏக்கர் செழிப்பான வனப் பகுதி உள்ளது. இங்குள்ள மரங்களின் ஒவ்வொரு அடியும், அமெரிக்காவில் பெரும் லாபம் கொடுக்க வல்லது என்று அமெரிக்க பத்திரிகைகள் எழுதின. அன்றைக்கு நிலம், மரம் போன்ற பொருட்களாக இருக்கலாம், இன்றைக்குப் பெட்ரோலியமாக இருக்கலாம். ஆக்கிரமிப்பின் நோக்கம் ஒன்றே.

பிற நாட்டுத் தலைவர்கள் அரசியல் படுகொலை செய்யப்படுவது

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ, ஏகாதிபத்திய நலனுக்கும், கொள்ளை களுக்கும் விரோதமாக இருக்கக் கூடியவர்க ளுக்கு, குறிப்பாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், கைப்பற்றும் நிலையில் செல்வாக்குடன் இருந்தாலும் அவர்களுக்கு நாள் குறித்து விடும். கடந்த காலத்தில், சிஐ ஏவின் இத்தகைய பல சதிகள் அம்பல மாகியுள்ளன. சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள கூலிப்படைகள், போதைப் பொருள் வியா பாரிகள், சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து, அரசியல் கொலைகளை சிஐஏ அரங்கேற்றும் என்பது ஊரறிந்த ரகசியம். அமெரிக்க அரசு, சிஐஏ, லாப வெறி அமெரிக்க நிறுவனங்களுக்கும் ராணுவத்துக்கும் உள்ள நெருக்கமான பிணைப்பு (இது ராணுவத் தொழில் கூட்டமைப்பு என்று அழைக்கப் படுகிறது) ஆகியவை இதில் மையப் பங்கு வகிக்கின்றன. ஃபிடல் காஸ்ட்ரோ மீது பல முறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. ஈரான் நாட்டு எண்ணய் வளங்களை நாட்டு நலன் கருதி நாட்டுடமையாக்கிய மொஸ் ஸாதெக், காங்கோவின் பேட்ரிஸ் லுமும்பா, டொமினிகன் குடியரசின் ரஃபேல் ட்ரூ ஜில்லோ, சிலியின் ரீனே ஷ்னீடர், புரட்சி யாளர் சேகுவேரா, பின்னாளில் அலெண்டே என்று படுகொலை செய்யப் பட்ட ஏழை நாடு களின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், தேச பக்தர்களின் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது.. இத்தாலியில் இருந்த வலுவான கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைக்க முயற்சித்த குற்றத்துக்காக இத் தாலியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் அல்டோ மோரோ கொலை செய்யப் பட்டார். ஆப்கானிஸ்தானில் டாக்டர் நஜி புல்லா தூக்கிலிடப்பட்டார். அண்மையில் காலமான பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது. முற்போக்குவாதிகளாக இல்லா விட்டாலும் ஏகாதிபத்தியத்துடன் முரண்டு பிடிப்பவர்கள், ஒத்துப் போகாதவர்களும் ஏரா ளமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிற நாடுகளில் உள்ள அரசுகள் ஒத்து வராவிட்டால், அவற்றுக்குப் பல பெயர்கள் சூட்டி, அவற்றைக் கீழே இறக்கி பொம்மை அரசுகளை உட்கார வைப்பதிலும் அமெ ரிக்காவை அடித்துக் கொள்ள யாராலும் முடி யாது. லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெ ரிக்காவின் இந்த அநீதிகளை சகிக்க முடி யாத அளவு சந்தித்திருக்கின்றன. டொமினி கன் குடியரசில் 4 முறை தலையீடு செய்த துடன், 8 ஆண்டுகள் அமெரிக்க துருப்புகள் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டன. ஹைத்தி யில் 1915 துவங்கி 19 ஆண்டுகள் துருப்புகள் நிறுத்தி வைக்கப் பட்டன. 1900- 1933 கால கட்டத்தில் கியூபாவில் 4 முறையும், பனா மாவில் 6 முறையும், குவாதமாலாவில் ஒரு முறையும், ஹோண்டுராசில் 7 முறையும், நிகரகுவாவில் 2 முறையும் ராணுவத் தலை யீடுகள் உட்பட அமெரிக்காவின் தலையீடு இருந்திருக்கிறது. ஆட்சிக் கவிழ்ப்புகளும் அரங்கேறியுள்ளன. இன்றைக்கும், பல நாடுகளில் அமெரிக்க துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை அமெரிக்க அரசின் தலையீடுகளும் பல நாடு களின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர் கின்றன.

தற்போது லத்தீன் அமெரிக்க பிரதேசத் தில், 11க்கும் மேற்பட்ட நாடுகளில் இடது சாரி அரசுகள் அமைந்திருப்பது தற்செயலா னதல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதும், அதன் கைப்பாவை அரசுகள் மீதும் உள்ள மக்களின் கோபம் இந்நிலையை உரு வாக்கியுள்ளது. அதே சமயம், வெனிசுலா அதிபர் சாவேசின் புற்றுநோய் காரணமான மரணத்தை ஒட்டி, லத்தீன் அமெரிக்க பிர தேசத்தில் ஆட்சியிலிருக்கும் இடதுசாரி தலைவர்களில் 4,5 பேருக்குப் புற்று நோய் என்பதிலும் அமெரிக்காவின் கை இருக்குமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. ரசாயன யுத்தத்தில் கை தேர்ந்தது தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதை மறந்து விடக் கூடாது.

சர்வ தேச விதிமுறைகளைக் காலில் போட்டு மிதிப்பது

வியட்நாமின் மீதான அமெரிக்காவின் 30 ஆண்டு கொடூர யுத்தம், ஏஜெண்ட் ஆரஞ்சு உள்ளிட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன் படுத்தி, பல தலைமுறைகளுக்குப் பாதகம் செய்த செயல்கள் எல்லாம் சாதாரண மனித உரிமை மீறல்களா? 5 லட்சம் குழந்தைகள் ஊனமடைந்ததும், ஊனத்துடன் பிறந்ததும் மன்னிக்கக் கூடிய குற்றங்களா? ஜப்பானின் மீது அணுகுண்டுகளைப் போட்டு மனிதப் பேரழிவை ஏற்படுத்தியது லேசான விஷ யமா? கியூபா உள்ளிட்ட நாடுகள் மீது பல் லாண்டு பொருளாதாரத் தடை விதித்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள பாதகங்கள் கொஞ்சநஞ்சமா? ஆனால் வீர வியட்நாம் அமெரிக்காவை விரட்டியடித்தது. சின்னஞ் சிறு சோஷலிச கியூபா, சவால் விட்டு நின்று காட்டியது. ஆனால், அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் இத்தகைய வன்கொடுமைகளை எந்த சர்வ தேச நீதிமன்றம் என்ன செய்ய முடிந்தது? எந்த மனித உரிமை கவுன்சி லால் நடவடிக்கை எடுக்க முடிந்தது? ஐநா சபையால் என்ன தலையீடு செய்யப் பட்டது?

ஆக்கிரமிப்புக்கு ஆதரவு

பாலஸ்தீனத்தை சின்னாபின்னப் படுத்தி, இஸ்ரேல் உருவாகவும், இன்று வரை இஸ்ரேல் நடத்தும் மிகக் கொடுமையான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களுக்கும் அமெ ரிக்க அரசும், இதர சில மேற்கத்திய நாடு களும், பக்கபலமாக இருந்து வருகின்றன. தங்களது சொந்த நாட்டிலிருந்து பாலஸ் தீனிய அரபு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப் பட்டனர். கிட்டத் தட்ட 1 கோடி பேர் வெளியேற்றப் பட்டதாகக் கூறப்படு கிறது. பல்லாயிரக் கணக்கானோர் கொன்று குவிக்கப் பட்டனர். இஸ்ரேல், ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு வெளியேற வேண்டு மென்று பலமுறை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்கள் முன் மொழியப் பட்டன. இது வரை, 39 முறை, அமெரிக்கா தன் மறுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலைக் காப்பாற்றியிருக்கிறது. ஐநா சபையால் என்ன செய்து விட முடிந்தது?

இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேடுவதாக இராக்கில் நுழைந்து, நாசம் செய்து படுகொலைகளை அமெரிக்க அரசு நிகழ்த்தியது. 5 ஆண்டு யுத்தத்தில் 12 லட்சம் இராக்கியர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். இது இராக்கின் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் . பலர் ஊனமுற்றுள்ளனர். 20 லட்சம் பேர் (மக்கள் தொகையில் 13சத விகிதம்) அகதிகளாகி அண்டை நாடுகளில் அவலத்துடன் உள்ளனர். 45 லட்சம் பேர் அனாதைகளாகி விட்டனர். அதே சமயம், பேரழிவு ஆயுதங்களை இஸ்ரேல் வைத் திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தும், அமெரிக்கா கண்டு கொள்ளாமல் இருக் கிறது. தற்போது சிரியாவில் பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்ட கலகக் காரர்களுக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாட்களும் நிதி, ஆயுதம், பயிற்சி என்று சகலமும் அளித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் அப்பாவி சிரிய மக்கள் 60,000 பேர் வரை கொல்லப் பட்டு, 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகப் போய் சேர்ந்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை வளர்த்து விட்டு, தற்போது அவர்களை அழிக்கிறோம் என்ற பெயரில், அமெரிக்கா ஏராளமான துருப்புகளை அங்கு நிறுத்தி வைத்திருக்கிறது. பல்லாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் அப்பாவி மக்கள் தான். 6 சுய அதிகாரம் பெற்ற குடியரசுகள் ஒன்றிணைந்த யூகோஸ்லாவியாவில், சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, ரத்த ஆறு ஓடியதற்கும், இனப் படுகொலைகள் நடந்ததற்கும் அமெ ரிக்க அரசின் பங்களிப்பு பிரதான காரணம்.

விசாரணை என்ற பெயரில் போர் கைதிகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்தும் சித்ரவதைகள் (அபு கிரெய்ப், குவாண்டனாமா சிறைச்சாலைகள் உட்பட) கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு மிருகத் தன்மை கொண்டவை. அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் ஒரு சேர மீறுபவை. இலங்கை மனித உரிமை மீறல்களை விசா ரிக்க வேண்டும் என்று இவர்கள் கூறுவது, சாத்தான் வேதம் ஓதுகிற கதையாகவே உள்ளது.

சர்வ தேசக் கம்யூனிச சதியை எதிர்த்த போர் என்றும், தீய சாம்ராஜ்யமான சோவியத் யூனியனை எதிர்த்த போர் என்றும் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்போது இஸ்லாமிய பயங் கரவாதத்துக்கு எதிரான போர் என்று, ஒவ் வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சூட்டி, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கை களை நியாயப்படுத்திக் கொள்கிறது. உலக நலனுக்காகவே, தான் இதைச் செய்வதாக மக்களை நம்ப வைக்கிறது. கார்ப்பரேட் ஊட கங்கள் முழுமையாக ஒத்துழைக்கின்றன.

ஏகாதிபத்தியத்தின்

இரட்டை முகம்

அமெரிக்காவின் இத்தகைய கொடுஞ் செயல்களை தீரத்துடன் எதிர்த்ததிலும், எதிர்கொண்டதிலும் சோவியத் யூனியனுக்கு மகத்தான பங்குண்டு. இரண்டாவது உலகப் போருக்குப் பின் உருவான அணி சேரா இயக்கமும், அப்போது நிலவிய சர்வதேச நிலைமைகளும், பலாபலன்களும் ஏகாதி பத்திய நடவடிக்கைகளை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தின. சோஷலிச முகாம் என்ற ஒன்று இருந்தது, அமெரிக்க ஏகாதிபத் தியத்துக்குப் பெரும் பிரச்சனையாக இருந் தது என்பது தான் உண்மை. இன்று வலு வான சோஷலிச முகாம் இல்லாத நிலை யில், ஆகப் பெரும் பயங்கரவாதியாக, உலகத் தையே தன் ஆளுகைக்குள் கொண்டு வரும் ஆதிக்கவாதியாக, ஏகாதிபத்திய நாடுகளின் தலைவனாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இறுமாந்து நிற்கிறது.

சர்வ தேச நிதி மூலதனத்தின் கொள்ளை லாபத்துக்காக, உலகை வேட்டைக் காடாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இதர மேலை நாடுகள், முதலாளித் துவத்தைத் தூக்கி நிறுத்த எதை வேண்டு மானாலும் செய்யத் தயாராக உள்ளன. வளரும் நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதும், சந்தைகளைக் கைப்பற்றுவதும் அதற்காக இந்நாடுகளின் இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்வதும், அதிரடி ஆக்கிரமிப்பு நட வடிக்கைகளில் இறங்குவதும் சமகால முத லாளித்துவத்தின் தேவையாக உள்ளன. பிர தேச ஒத்துழைப்பு என்ற பெயரில் இந் நாடுகள் அந்தந்த மண்டலத்தில் ஒரு கூட் டமைப்பை ( போல) உருவாக்குவதைக் கூட ஏற்றுக் கொள்ளாமல், பிரித்தாளும் சூழ்ச்சி யின் மூலம் பலவீனப்படுத்துவதும் ஏகாதிபத் திய மேலாதிக்கத்தின் தேவை. இது குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த தீர்மானம் விரிவாகவே விளக்குகிறது.

பல நாடுகளில் நிலவும் தேசிய இனப் பிரச்சனையில் அமெரிக்காவுக்கு ஒரே நிலைபாடு கிடையாது. நட்பு நாடாக இருந் தால், சிறுபான்மை தேசிய இனத்தின் நியாய மான உரிமை குரல்களுக்கு எதிராக அந் நாட்டு அரசை ஆதரிப்பது; அணி சேரா அல்லது சோஷலிச முகாமுடன் நெருக்க மாக இருக்கும் நாடானால், சிறுபான்மை தேசிய இன உரிமைகளுக்காகவே தான் பிறந்து வளர்ந்தது போன்ற நிலையை எடுப் பது; ஆக இரட்டை நிலைபாடு ஏகாதிபத் தியங்களுக்கு உண்டு.

இலங்கை அமைந்துள்ள கடல் பகுதி, அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு மிக வசதியாக இருக்கும் பகுதியாகும். ஏற் கனவே, திரிகோணமலையில் அமெரிக்கா வின் தளம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஒன்று பட்ட இலங்கை, அமெரிக்காவின் பக் கம் சாய்வது, ஏகாதிபத்தியத்துக்குப் பேருத வியாக இருக்கும். இரண்டாகப் பிரிந்தால் இன்னும் வசதி தான். அணி சேரா நாடாக இருக்கும் இலங்கையைத் தனது முகாமுக்கு ஆதரவாகக் கொண்டு வரும் நோக்கம், அமெ ரிக்காவின் இன்றைய நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கிறது. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை குறித்தோ, மிக மோச

மாக பாதிக்கப் பட்டு நிற்கும் இலங்கை தமிழர் கள் மீதோ அமெரிக்காவுக்கு அக்கறை எது வும் கிடையாது. ஒரு வேளை, எதிர்பார்க்கிற படி இலங்கை அரசு ஏகாதிபத்திய முகா முக்குப் படிந்தால், மனித உரிமை தீர்மானம் காற்றில் பறக்க விடப்படும் என்பதில் எள் ளளவும் சந்தேகமே தேவையில்லை.

எனவே தான், உலக பயங்கரவாதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலை பின் னலுக்கு இரையாகி விடக் கூடாது. அமெ ரிக்க அரசு உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடு களின் அக்கிரமங்களுக்கு எதிராக, வளரும் நாடுகளின் இறையாண்மை பாதுகாக்கப் பட வேண்டும்; அதே சமயம், அந்நாடுகளின் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசுகள் கட்டவிழ்த்து விடும் வர்க்க சுரண்டலுக்கு எதிராக, அங்குள்ள அனைத்து தேசிய இனங் களையும் சார்ந்த தொழிலாளி வர்க்கம், இதர சுரண்டப்படும் மக்களையும் ஒன்றிணைத் துப் போராட வேண்டும். கூடவே, சிறு பான்மை தேசிய இனங்களுக்கு சம உரிமை, சம வாய்ப்புகள், அவர்களது மொழி, கலாச் சாரம் பாதுகாக்கப் படுவது போன்ற ஜன நாயகக் கடமைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும். அதற்காக அனைத்து இனங் களிலும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று படுத்தி, அரசியல் தீர்வுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். இலங்கையிலும் இத் தகைய அணுகுமுறையே பலனளிக்கும்.

இந்தியா தனது ராஜீய உறவைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச மன்றங் களில் குரல் எழுப்ப வேண்டும். அதை விடுத்து, இலங்கை அரசின் பாகுபடுத்தும் கொள்கைகள் ஒரு புறம், இலங்கை ராணு வம், இலங்கையின் பூர்வகுடி தமிழ் மக்கள் மீது நடத்திய கொடுமையான மனித உரிமை மீறல்கள் மறு புறம் உருவாக்கும் நியாயமான கோபத்திலும், வேதனையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் துணைக்கு அழைப்பது அடுப்புக்குத் தப்பி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த கதையாக மாறி விடும்.

(ஆதாரம்: ‘பயங்கரவாதம் வேர்களும், தீர்வுகளும்’ டி.ஞானையா எழுதிய ஆங்கிலப் புத்தகம் - முதல் பதிப்பு 2010- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை ரூ.190)

Tuesday, March 12, 2013

செவி வழியாக பெண்ணின் மனக்குமுறல்கள்

என் பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லுவார்கள். நிறைய கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த கதை என் மனதில் ஆழ பதிந்துவிட்டது. இந்த கதை பல கேள்விகளையும் எழுப்பிவிட்டது. இந்த கதையை நான் என் மகனுக்கும் சொல்லியிருக்கிறேன். சிறிது சேர்த்தும் கோர்த்தும் சொல்லியிருக்கிறேன். இதுதான் கதை. எனக்கு என் பாட்டி சொன்னபடியே...


ஒரே ஒரு காட்டில ஒரு புலியாம். அந்த காட்டுக்கு ஒரு அழகான பெண் சுள்ளி பொறுக்க வந்தாளாம். அப்போ அந்த பெண்ணை புலி பார்த்துவிட்ட‌தாம். "ஆஹா இந்த பெண் எத்தனை அழகா இருக்கிறாள். இவளை கல்யாணம் செய்துகொண்டால் வாழ்க்கை பூரா சந்தோஷமா இருக்கலாமே" என்று நினைச்சதாம். அந்த பெண்ணின் பின்னாலேயே போச்சாம். அந்த பெண்ணும் சுள்ளி பொறுக்கி முடிந்ததும் வீடு நோக்கி போனாளாம். பெண்ணின் பின்னாலேயே புலியும் போச்சாம். காட்டை தாண்டி ஊருக்குள் போவதற்கு முன்னால ஊருக்கு வெளியிலேயே ஒரு வண்ணானை மிரட்டி அவனிடமிருந்து ஒரு சட்டை, வேட்டி, துண்டு எல்லாம் வாங்கி, மனுஷாளைப் போலவே வேட்டி கட்டிண்டு சட்டை போட்டுண்டு தலைப்பா கட்டிண்டு அந்த பெண்ணின் பின்னாலயே போச்சாம். அந்த பெண் ஊருக்குள் தன் வீடு வந்ததும் வீட்டிற்குள்ள போனாளாம். பின்னாலேயே போன புலி அவள் வீட்டின் திண்ணையில உக்கந்துண்டதாம். கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த பெண்ணின் அப்பா வீட்டிலிருந்து வெளியே வந்தாராம். திண்ணையில் யாரோ உட்கார்ந்திண்டு இருக்கிறதை பார்த்துட்டு " நீங்க யாரு? என்ன வேணும்?" ன்னு கேட்டராம். புலியும், தான் அவருடைய பெண்ணை பார்த்ததாகவும், அவளை தனக்கு ரொம்ப பிடித்துவிட்டதாகவும் அவளை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னதாம். இதை கேட்டதும் அந்த பெண்ணோட அப்பாக்கு ரொம்ப சந்தோஷமயிடுத்தாம். "ஆஹா அதுக்கு என்ன. பேஷா போச்சு. என் பெண்ணை உங்களுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி தரேன்" என்று சொல்லி பெண்ணை கல்யாணம் பண்ணி தந்துட்டாராம். அந்த புலியும் தன் பொண்டாட்டிய அழைச்சுண்டு காட்டுக்கு போச்சாம். ரொம்ப தூரம் நடந்து வரவே அந்த பெண்ணுக்கு தாகமாக இருந்ததாம் . "என்னங்க.... தண்ணி வேணும்" ன்னு கேட்டாளாம். ஆனா தண்ணீர் தராம "இன்னும் கொஞ்ச தூரம்தான் போயிடலாம்" ன்னு புலி சொல்லியதாம். இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் இந்த பெண்ணிற்கு பசி வந்துவிடுதாம். "பசிக்கிறது ஏதாவது சாப்பிட தாங்க"ன்னு கேட்டாளாம். இப்பவும் புலி "இன்னும் கொஞ்சம் தூரம்தான் போயிடலாம்"ன்னு சொன்னதாம். இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், "இன்னும் எத்தனை தூரம் போறது? பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாங்க" ன்னு கேட்டாளாம். அப்போது அந்த புலி "சும்மா வரயா சுய ரூபத்த காட்டட்டுமா? ன்னு கேட்டதாம். மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பேசவே அந்த பெண்ணும் "அது என்ன சுய ரூபம் அதையும்தான் காட்டுங்களேன். பார்த்துடலாம்" ன்னு சொன்னாளம். உட்னே புலி தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு புர்ர்ர் என்று சீரியதாம். "ஐயோ ஐயோ புலி"ன்னு கத்திக்கொண்டே அந்த பெண் காட்டுக்குள்ளேயிருந்து ஓடி வீட்டுக்கு வந்து, "ஐயோ அப்பா! யார், என்னன்னு விசாரிக்காமலேயே என்ன ஒரு புலிக்கு கல்யாணம் பண்ணிதந்துட்டீங்கள்ளே" என்று அழுதாளாம். "ஐயோ அப்படியாம்மா" என்று அப்பாவும் அழுதாராம்.

இந்த கதையில் அம்மா எங்கே? இருந்தாளா? இருந்தும் பேசவில்லையா? பேச முடியாத நிலையா? இல்லாமல் போனாளா? பிரசவத்தில் இறந்து போனாளா? பெண்ணுக்கு கிடைத்த மருத்துவ வசதி அவ்வளவுதானா? தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் பெண்ணை வளர்த்தாரா? அப்படி வளர்த்தவறா பெண்ணை இப்படி பாரமாய் நினைத்து பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்? அல்லது அவரும் சராசரி ஆணாக மறுமணம் செய்துகொண்டு, பின்னர் அவளும் பிரசவத்திலோ அல்லது வேறுவகையிலோ இறந்துவிட்டாரா?

இந்த கதை நிச்சயமாக ஒரு கதை அல்ல. என் பாட்டியோ அல்லது அவருக்கு இந்த கதையை சொன்ன அவருடைய அம்மாவோ பாட்டியோ தனக்கு நேர்ந்த‌தையோ அல்லது அவர் பார்த்து மற்றொருவருக்கு நேர்ந்தயையோதான் கதையாக கூறியிருக்கிறார். ஆக என் கேள்விகளெல்லாமே சம்பந்தமுள்ள நியாயமான கேள்விகளே. இந்த கதை செவி வழியாகவே அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு சொல்லப்பட்டு வந்துள்ளதாகவே நினைக்கின்றேன். என் மகனுக்கும் இந்த கதை நினைவில் உள்ளது. அவன் வளர வளர இந்த கதையின் ஆழம் அவனுக்கு பிடிபடும். அப்படி நேராதபடி நிலைமை மாறிடுமா?

குழந்தையாயிருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்ட தர்மபுரி குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி தொடர நியாயம் கிடைக்க அகில உலக மகளிர் தினத்தன்று இந்த கதையை சமர்ப்பிக்கின்றேன்.

தருமபுரி தரும் செய்தி என்ன?


பி.எஸ்.கிருஷ்ணன்

இந்திய ஆட்சிப் பணியில் 1956ல் என் பணியைத் தொடங்கிய நாளிலிருந்து 22 ஆண்டு களுக்கு முன் பணி ஓய்வு பெற்ற நாள் வரை சமூக நீதிக்கான என் பணி தொடர்ந்தது. நான் பணியாற்றிய போது இச்சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக நிறைய திட்டங் களை என்னால் முன்னெடுக்க முடிந்தது. இத்திட்டங்களுள் முதன்மையானது, எஸ்.சி. மக்களுக்காக உரு வாக்கப்பட்ட சிறப்புக்கூறு திட்டமும் பழங்குடி யினர் நலனுக்காக உரு வாக்கப்பட்ட பழங்குடி யினர் துணைத்திட்ட மும் ஆகும். இத்திட்டங் கள் உண்மையிலேயே மானசீகமாக நடை முறைப்படுத்தப்பட்டிருந் தால், இந்திய அரசியல் சாசனம் வகுத்த சமத் துவம் இந்நாட்டில் என்றோ நிஜமாகியிருக்கும். ஏற்கெனவே வளர்ச் சியின் பயன் அனைத்தை யும் தமதாக்கிக் கொண்டிருக்கும் உயர் சமூக வகுப்பினர் அள வுக்கு இவர்களும் ஓரளவு முன் னேற்றம் கண் டிருப்பர். பிற்படுத்தப்பட்டோ ருக்கு மத்திய அர சுப் பணிகளில் இடஒதுக்கீடு பெற்றுத்தரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றியபோது, 1980 ஜனவரி முதல் தேதி யன்று என்னுடைய கையெழுத்தோடு மண் டலக் குழு அமைக்கப்பட்ட அறிக்கை வெளி யானது.இதனைத்தொடர்ந்து, அப்போதைய பிரதமர் வி.பி.சிங், சமூக நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், இவர்களோடு துறைச் செய லாளராக நானிருந்த காலத்தில் மண்டல குழு வின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தது.
நீண்ட காலம் பல்வேறு காரணங்களால் பல் வேறு சக்திகளால் தடை செய்யப்பட்டு வந்த மண்டல குழுவின் பரிந்துரைகள் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 மற்றும் 9ஆம் நாளன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பதினொன்றாம் திட்டத்தில் (2001) உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை அதி காரப்படுத்தும் பணிக்குழுவின் தலைவர் என்ற முறையில், பிற்படுத்தப்பட்டோர் முழுமையான வளர்ச்சிக்காக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து ஓர் அறிக்கையைத் தயாரித்தவன் என்று எடுத் துரைப்பதிலும் மகிழ்வடைகிறேன். மேலே என்னைப்பற்றி நானே சொல்லுகின்ற விசயங் களெல்லாம் என் சுய புகழ்பாடுவதற்காக கூறப் பட்டவை அல்ல. ஏற்கெனவே 60 ஆண்டுகள் இந்தியச் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நோக்கி என் பணியை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். இத்தனை காலம் இவ்வளவு பணியாற்றிய எனக்கு அண்மையில் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்வுகள் மிகப் பெரிய கவலையையும் ஆதங்கத்தையும் தந்துள் ளது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக் குப்பின்பும், எஸ்.சிக்களும், பழங்குடியினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் இச்சமூகத் தில் தாம் பெற வேண்டிய நியாயமான பங்கினை இன்னும் முழுமையாகப் பெறாத நிலையில் இவ் வகுப்பினரின் ஒற்றுமை இன்றைய காலக்கட் டாயம் என்ற நிலையில் இவர்களிடையே காணப்பெறும் மோதல் போக்கு கவலை தரும் செய்தியாகும்.
தமிழகத்தில் இக்குழுவினரிடையே ஒற் றுமை ஏற்பட பல முன்முயற்சிகள் நடந்ததை அனைவரும் அறிவர். ஆனால் அண்மையில் தருமபுரியில் நடந்த நிகழ்வுகள் இந்த நம் பிக்கையைச் சிதைத்துவிட்டது எனலாம்.வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையிலான காதல் திரு மணத்தையொட்டி தலித் மக்கள் வாழும் மூன்று கிராமங்களில் 300 வீடுகள் நொறுக்கப்பட்டதாக வும் அவர்தம் சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக வும் கேள்விப்படுகிறேன். இந்த நிகழ்ச்சி, 2005இல் அரியானா மாநி லத்தில் சோனபெட் மாவட்டத்தில் கோஹனா என்ற ஊரில் நடந்தேறிய நிகழ்வை நினைவு படுத்துகிறது. இக்கிராமத்தில் 55 தலித் மக் களின் வீடுகள் முழுமையாகத் தீ வைத்து எரிக் கப்பட்டன. 97 வீடுகள் சிதைவுக்குள்ளாயின. வீடுகளிலிருந்த பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அரியானா மாநிலத்தின் பெரும்பான்மை வகுப்பைச் சேர்ந்த ஒருவரை தலித் வகுப்பினுள் பால்மிகிஸ் பிரிவைச் சார்ந்த ஒருவரால் கொலை செய்யப்பட்டார் என்ற நிகழ்வுதான் இக்கோரத்தின் பின்புலமாகும். இம் மாநிலத்தின் இத்தாழ்த்தப்பட்ட வகுப்பினர் காலங்காலமாய் இந்த ஆதிக்க சாதியின் மேலாண்மைக்கு அடிபணிந்து வாழ்ந்தவர்கள்; கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வந்தவர்கள். ஒரு கொலை வழக்கை நடத்த வேண்டிய சட்டமுறை என்ன? குற்றவாளியை அல்லது குற்றவாளியென சந்தேகப்பட்டவரை கைது செய்தல்; விசாரணை மேற்கொள்ளல்; உரிய நீதிமன்றம் முன் நிறுத்துதல்; இவையெல் லாம் புறந்தள்ளி, பெரும்பான்மையினர் என் பதாலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகு திக்குள் அத்துமீறி நுழைந்து, அவர்களது வீடு களையும் சொத்துக்களையும் அழித்தல் என்ன நியாயம்.
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இருக்கும் நாட்டில் ஒரு கொலை வழக்கை நடத்தவும் சில சட்ட முறையைக் கையாள வேண்டாமா? நான் கோஹனாவிற்கு சென்றிருந்தேன். தாழ்த்தப்பட்ட பால்மிகிஸ் பிரிவினரில் 25 சத வீதம் பேர் மலம் அள்ளும் தொழில் செய்வதை விட்டுவிட்டனர். இவ்வூரில் வாழும் மக்களில் பெரும்பாலோர் மெட்ரிக் படிப்புக்கு முந்தைய வகுப்பு தேறியவர்கள்; இடஒதுக்கீடு மூலம் வேலை கிடைக்க இவர்களுக்குக் கல்வித் தகு தியில்லாத போதும், இவர்களைக்கேவலமாக கருத வைத்திருந்த தொழிலைவிட்டு இவர்கள் விரும்பியவாறு வேறு தொழிலை ஏற்றுக்கொண் டிருந்தனர். இவர்களின் கடுமையான உழைப் பால், இவர்கள் நல்ல முன்னேற்றம் கண் டனர். சுதந்திரமாகச் செயல்பட்ட இம்மக்களின் போக்கு பெரும்பான்மை சாதியினரை ஆத்திர மூட்டியது.1991 ஆகஸ்ட் 6ம் தேதி ஆந்திர மாநிலத்தில் சுண்டுருவில் நடந்த நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. ஆகஸ்ட் 11ம் நாள் இவ்வூருக்குச் சென்றேன். இங்கும் தலித் மக்கள் பெற்றிருந்த பொருளாதார வளர்ச்சியும், விவசாயத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை தலித் மக்கள் தேர்ந்துகொண்டதும் உயர் சாதியினருக்கு எரிச்சலைத் தந்தது; தாழ்த்தப்பட்ட மக்கள் இடஒதுக்கீட்டின் மூலமும் உழைப்பின் மூலமும் பெற்ற சிறிய அளவு அந்தஸ்து உயர் வைக்கூட பக்கத்தில் வாழ்ந்த பிற்படுத் தப்பட்டோரால் சகிக்க இயலவில்லை. நாளும் தம்மிடம் வளர்த்துக்கொண்ட இந்த வெறுப் புணர்வு பெரிய அளவிலான தாக்குதலுக்கு வழி வகுத்தது.மத்தியப்பிரதேசம் சிவபுரியில் சில ஆண்டு களுக்கு முன் மேற்கண்டவாறே தாக்குதல்கள் நடந்தன. இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பெறும் இத்தாக்குதல்களில் ஒரு ஒற்றுமை காணப்படுவதைப் பார்க்கலாம். நாட்டின் பெரும் பகுதியில் வாழும் தாழ்த்தப் பட்ட மக்கள் விவசாயத்தை நம்பி, விவசாயக் கூலிகளாகவும், வேறு தொழில் செய்யும் தொழி லாளர்களாகவும் உள்ளனர். குறைந்த எண்ணிக் கையில் உள்ளோரே தேச அளவில் இவர்கள் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட சில வளர்ச்சித் திட்டங்களாலும், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் கிடைத்த ஒதுக்கீட்டுப் பயன்களாலும் முன்னேறியவர்கள், இவர்களின் வளர்ச்சியின் வெற்றி இடஒதுக்கீட்டைச் சார்ந் தது என்று கூற முடியாது. இவர்களின் தளரா உழைப்பே இவர்களின் வளர்ச்சிக்குக் காரணம். தருமபுரியில் சிதைக்கப்பட்ட 3 கிராமங்களில் இந்த நிலையைப் பார்க்க முடிந்தது. தலித் சமூக இளைஞர்கள் கட்டிட வேலை செய்யும் தொழி லாளர்களாக, பெங்களூரு போன்ற நகர்களுக் குச் சென்று கடுமையாக உழைத்து மிஞ்சிய பணம் கொண்டு இவர்கள் நம் வீடுகளுக்கு வாங்கிய பொருட்களும் இவர்கள் ஈட்டிய பணமும் அருகாமை சாதியினருக்கு வெறுப் பைத் தந்தது.தாழ்த்தப்பட்டவர் அல்லாத ஏனைய சமூ கத்தினர், இம்மக்களின் சிறிய வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். அவர்களைப் பாராட்டவேண்டும்.
இன்னும் இம்மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும். அவர்கள் சமூகத் தில் சமத்துவ நிலையை எட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழ வேண்டும்.இந்தியாவில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட சமூ கத்தினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் கடுமையான உழைப்பாளிகள்தாம். ஆனால் இம்மக்கள் தீண்டாமை எனும் வன்முறையி லிருந்து விடுபட்டவர்கள், உடல் ரீதியான வன்முறைகளுக்கும் தாக்குதல்களுக்கும் இவர்கள் ஆட்படுவதில்லை. இந்நிலை தமிழ் நாட்டிற்கும் பொருந்தும். நம்மை ஆண்ட வெள் ளையர்கள் இலங்கையின் தேயிலை தோட்டங் களில் வேலை செய்ய தமிழகத்திலிருந்து தலித் மக்களையும் வன்னியர்களையும் அழைத்துச் சென்றனர். பிற்படுத்தப்பட்டவர்களும் சிறப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் அனைத்து நிலைகளிலும் உரிய வளர்ச்சி அடைய வேண் டும் என்பதற்காகவே பிற்படுத்தப்பட்டோரை அதிகாரப்படுத்தும் நோக்கில் பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் செயற்பாட்டுக் குழு உருவானது.மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்கள் இருவருமே சமநீதி மறுக்கப்பட்டவர் கள், அரசின் அதிகாரத்தில் இன்னும் இவர் களின் பங்கு மிகக்குறைவே. இவர்களுக்குரிய நீதி இவர்கள் ஒன்றிணையும் போதுதான் சாத் தியம் என்பதை இவர்கள் உணர வேண்டும்.1980களில் வன்னியர் சமூகத்தினர் இட ஒதுக்கீட்டு உரிமைகளுக்காக போராடியதை நான் அறிவேன். பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இடஒதுக்கீடு மூலம் பெறும் உரிமைகளை வன்னியரும் பெற உரிமை உண்டென்றாலும், சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோடு இவர்கள் போட்டியிட முடியவில்லை என்பதே உண்மை. வன்னியர்களின் இக்கோரிக்கை நியாய மானதே. வன்னியர்கள் முன்னெடுத்த போராட் டத்தின் விளைவாக பிற்படுத்தப்பட்டவர் களைப் பிற்படுத்தப்பட்டவரென்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்றும் பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கென்று தனிக்கோட்டா ஒதுக் கித்தரப்பட்டது. இந்தப் பிரிவின்போது, இப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பணியாளர்கள் என்னிடமும் யோசனை கேட்டனர். என் யோ சனைகளும் இப்பிரிவுக்கு உதவியாய் அமைந் தது. இங்கு நடந்த துரதிருஷ்ட நிகழ்வுகள் என்னவென்றால், பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டில் எந்த பொறுப்பும் இல்லாத தலித் மக்கள் திருச்சி, தென்னாற்காடு மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் தாக்கப்பட்டது தான். இம்மாவட்டங்களில் நான் நேரடியாகச் சென்று விரிவாக ஆய்வு செய்தேன். தலித் மக்கள் தாம் வாழும் பகுதியில் தமக்கென காலங்காலமாக உயர் சாதி என்று கருதப் படுவோரால் ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய மறுத்தமைதான் இத்தாக்குதலுக்கு காரணம். இக்காலகட்டத்தில் கலப்பு திரு மணம் ஒரு பிரச்சனையாக எழவில்லை. என் னிடம் அப்போதெல்லாம் ஆலோசனை பெற வந்தவர்களிடம் தாக்குதலை நிறுத்தக் கேட்டுக்கொண்டேன். இரு பிரிவினருமே ஒதுக்கப்பட்டவர்தாம் என்பதால் இரு பிரி வினரும் இணைந்து உரிமைகளைப் பெற போராட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.சாதிய தாக்குதல்களுக்கு இப்போது கலப் புத்திருமணங்கள் அதாவது தலித் / தலித் அல் லாத பிற சாதியினரிடையே நிகழும் கலப்புத் திருமணங்கள் காரணங்களாய் அமைகின்றன. சாதி மறுப்புத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் சாதியத்திற்கு எதிரான திரு மணங்கள் என்பதுதான் உண்மையாக இருக்க, இத்திருமணங்களுக்கு எதிராக தாக்குதல்கள் நிகழ்வது வருத்தம் தரும் செயற்பாடாகும்.
சாதி யம் நம் சமூகத்தின் அனைத்து அவலங்களுக் கும் மூலம் என்றும் ஒடுக்கலுக்கும் சுரண்டலுக் கும் முதல் காரணிகள் என்றும், சம நீதி விரும் பும் பெரும்பான்மை மக்களின் ஒருமித்தக் கருத் தாக இருந்து வந்திருக்கிறது. சாதியத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஈடேற்றத்திற்கு சமூக நீதிக்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வும் குறிப்பாக கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வும் வேண்டிய தேவையினை சமத்துவம் விரும்புவோர் வேண்டினர். மகாத்மா பூலே, நாராயணகுரு, டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றோரெல்லாம் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் சமத்துவ நீதிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடினர். தமிழ்நாட் டைப் பொறுத்தவரையில் பெரியார் சாதி யொழிப்புப் போரில் மிகப்பெரிய பெற்றி பெற்றார் என்று சொன்னால் அது மிகையில்லை. இத்தருணத்தில், டாக்டர் ராமதாசும் அவரின் ஆதரவாளர்களும் என்னைக் கௌர வித்த இரண்டு நிகழ்வுகளை நினைவுகூருவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். 2002ஆம் ஆண்டு வெளியான அரசியல் சாசன செயற்பாட்டின் மறு ஆய்வு தொடர்பான அறிக் கையின் போது நடந்த நிகழ்வு. இந்த ஆணை யத்தின் தலைவராக இருந்தவர் நீதியரசர் வெங் கடசெல்லையா அவர்கள். இவர் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான நீதியில் பெரும் அக்கறை கொண்டவர். இவ்வாணைய அறிக்கையின் பத்தாவது அத்தியாயத்தை வரைவு செய்யும் பணி என்னிடம் தரப்பட்டது. இந்த அத்தியாயம் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் முதலானோர் தொடர்பானது. இந்த அத்தியாயம் பற்றியும், இதன் பின்னணிக் குறிப்பையும் நான் எழுதிய நுஅயீடிறநசiபே னயடவைள கடிச நஅயீடிறநசiபே ஐனேயை; ஹ சுடியன ஆயயீ (ஆயயேம ஞரடெiஉயவiடிn, னுநடாi 2009) என்ற நூலின் பின்னிணைப்பில் பார்க்கலாம். என்னு டைய வரைவில் தரப்பட்ட ஒவ்வொரு வார்த் தையும் ஆணையத்தின் தலைவர் அவர்களால் நுணுகி ஆராயப்பட்டு விரிவான விவாதத் திற்குப்பின் ஆணையத்தால் அப்படியே ஏற் றுக்கொள்ளப்பட்டது. இவ்வறிக்கையில் மிக வும் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய குறிப்பை முதன் முதலாகப் பார்த்தவர் டாக்டர் ராமதாசு அவர்கள்தான். என்னுடைய இப்பங்களிப்பு பற்றி அறிந்த ராமதாசின் பணியால் ஈர்க்கப் பட்ட ஓர் அமைப்பு என்னைப் பாராட்ட ஒரு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் டாக்டர் ராமதாசும் ஆணையத் தின் ஒரே தலித் உறுப்பினரான நீதியரசர் புன் னையாவும் கலந்துகொண்டனர். பாராட்டுவிழா நிகழ்வின்போது நான் சாதி மறுப்பு/ கலப்புத் திருமணம் செய்து கொண்டவன் என்ற செய்தி வெளியாயிற்று. இச்செய்தி கேட்டு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் டாக்டர் இராமதாசும் மகிழ்ந்தனர். பாராட்டிக் கை தட்டினர். இக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும் பான்மையோர் வன்னியர் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் காட்டிய ஆர வாரம் சாதிமறுப்புக்கு கலப்புத் திருமணத்திற்கு ஆதரவானது என்பது நிரூபணமாகியது.இன்னொரு நிகழ்வையும் இங்கு நினைவு கூர விரும்புகிறேன். மத்திய அரசின் கல்வி நிறு வனங்களில் இடஒதுக்கீட்டை ஏற்கெனவே எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு அளிக்கப்பட்டு வந்ததைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அளிக்கப்பெற வேண்டும் என்ற சட்டம்-2006ஐ சரிதான் என்று நான் நியாயப்படுத் தியபோது என்னுடைய நிலைப்பாட்டை டாக் டர் ராமதாசு உணர்ந்து கொண்டார். இந்த இட ஒதுக்கீட்டிற்கான நியாயத்தை அன்றைய சொலி சிட்டர் ஜெனரல் சிறப்பு வழக்குரைஞர் பராசுர னுக்கு எடுத்துரைத்ததையும் ராமதாசு அறிவார். பல மாநில அரசுகள் இதில் கட்சிக்காரராக சேர்ந் திருந்தன. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் போது தினமும் நான் அங்கிருந்து வழக்கிற்கு வேண்டிய செய்திகளையும் கருத்துக்களையும் தந்து கொண்டிருந்தேன். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் 2008ல் அளித்த தீர்ப்பிற்கு பிறகு என் னையும் ராமதாசையும் பாராட்டும் வகையில் பாராட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.சமூகத்தின் சில பிரிவினரும் கட்சிகளும் கூட வன்கொடுமைத் தடைச்சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இம்மாதிரி கோரிக்கைகள் இச்சட்டம் இயற்றப்பட்ட போதும் எழுந்தது. 1990ல் இந்திய பிரதமரால் கூட்டப்பட்ட கூட்ட மொன்றில் ஒரு மாநில முதல்வர் இம்மாதிரி யான கோரிக்கையை எழுப்பினார். நான் அப் போது சமூக நலச் செயலாளராக இருந்தேன். இந் தக் கோரிக்கை என்றுமே வெற்றிப்பெறப் போவ தில்லை.தருமபுரி மற்றும் வச்சாத்தி வன்முறைகள் தமிழ்நாடு மக்களின் மனசாட்சியை உலுக்க வேண்டும். அம்பேத்கரும், பெரியாரும், மேலும், பல சமூகத் தலைவர்களும் மற்றும் இந்திய அர சியல் சாசனம் கண்ட கனவும் நனவாக வேண் டும் என்பதே என் அவா.
கட்டுரையாளர், இந்திய அரசின் முன்னாள் செயலர் மற்றும் 60 வருடங்களுக்கு மேலாக சமூக நீதிக்காக தொடர்ந்து பணியாற்றுபவர்.

தீக்கதிர்  18-02-13

Friday, March 1, 2013

Hounding Aaron Swartz to His Death




Prabir Purkayastha

AARON Swartz, an activist for free information, a precocious talent who had designed and developed a whole host of tools that we all use today, committed suicide on January 11. He was facing 35 years in jail and One million dollars in fines. Incidentally, David Hadley being tried in the US also faces a similar length of sentence that Aaron was facing. Killing hundreds or freeing information that is being privatised by big corporations are seen by the US government as similar crimes.

At 26, Aaron leaves behind what very few people can achieve even in a lifetime. Aaron in his young life, had not only developed RSS feed, helped to set up the Creative Commons license, was a co-founder of Reddit, set up Demand Progress, a digital rights group and was behind the hugely successful online protests that lead to defeating the Stop Online Piracy Act (SOPA) last year.

Aaron joins those that the US government, the supposed champion of freedom on the internet, is prepared to hound ruthlessly, if need be to their deaths. Bradley Manning, Julian Assange and Aaron are all victims of a society where stealing billions of dollars of public money does not earn even a gentle rap on the knuckles, but freeing information is seen to be a danger for all that the US stands for. Clearly, the US government believes that the ethical hacker community – those who write computer code to help the common good – are suspect in activities such as Wikileaks. In hounding Aaron, they were sending a message to this community.

Aaron was facing 35 years in jail and One million dollars in fines for trying to download the archives of JSTOR, the online repository of scientific and social sciences journals using the MIT network. His family in a statement has held the US prosecutors responsible for his death, “Aaron's death is not simply a personal tragedy. It is the product of a criminal justice system rife with intimidation and prosecutorial overreach. Decisions made by officials in the Massachusetts US Attorney's office and at MIT contributed to his death. The US Attorney's office pursued an exceptionally harsh array of charges, carrying potentially over 30 years in prison, to punish an alleged crime that had no victims. Meanwhile, unlike JSTOR, MIT refused to stand up for Aaron and its own community's most cherished principles."

TRIBUTES TO
AARON
The digital commons and the internet community are paying their tribute to Aaron in different ways. Some like Tim Berners-Lee, widely regarded as the father of the internet, have mourned his passing, “Wanderers in this crazy world, we have lost a mentor, a wise elder”; others have condemned the bullying prosecutors for hounding Aaron to his death. Lawrence Lessig, the founder of Creative Commons wrote, “Aaron was always and only working for (at least his conception of) the public good. He was brilliant, and funny. A kid genius. A soul, a conscience, the source of a question I have asked myself a million times: What would Aaron think? That person is gone today, driven to the edge by what a decent society would only call bullying.” Lawrence Liang of the Alternate Law Forum, in an interview with Newsclick, described Aaron as the first martyr for freeing information.

“Aaron did more than almost anyone to make the internet a thriving ecosystem for open knowledge, and to keep it that way," wrote Peter Eckersley of Electronic Frontier Foundation.

Others have decided to take up the cause of digital freedom more directly. Micah Allen, a researcher in the fields of brain plasticity, cognitive neuroscience, and cognitive science called for dumping research papers in public domain, "A fitting tribute to Aaron might be a mass protest uploading of copyright-protected research articles," Allen wrote on Reddit. "Dump them on Gdocs, tweet the link." Already, people are using the hashtag #pdftributeaaronswartz or #pdftribute to upload such texts.

Anonymous has defaced MIT's webpages for its role and called his prosecution, "a grotesque miscarriage of justice”. It also called for “this tragedy to be a basis for reform of copyright and intellectual property law, returning it to the proper principles of common good to the many, rather than private gain to the few.”

Aaron was convinced that knowledge and information should not be the property of a few corporations and hidden behind pay-walls. In his manifesto, written in 2008, he wrote, “Information is power. But like all power, there are those who want to keep it for themselves. The world’s entire scientific and cultural heritage, published over centuries in books and journals, is increasingly being digitised and locked up by a handful of private corporations. Want to read the papers featuring the most famous results of the sciences? You’ll need to send enormous amounts to publishers like Reed Elsevier.

That is too high a price to pay. Forcing academics to pay money to read the work of their colleagues? Scanning entire libraries but only allowing the folks at Google to read them? Providing scientific articles to those at elite universities in the First World, but not to children in the Global South? It’s outrageous and unacceptable.”

Aaron called on people not just to campaign for a free information system but also argued that we should fight back by “liberating” such protected knowledge. He refused to accept this “privatisation of knowledge” by large corporations, who have bought off the governments. He called this as Guerilla Open Access and identified this to be in the grand tradition of civil disobedience.

MORAL
IMPERATIVE
For Aaron, liberating knowledge behind pay-walls was a moral imperative. He, as his wont, plunged into this activity head-on. First, he took on PACER, the database of US Court judgements or case law. PACER charges 10 cents a page for what is effectively public domain information. He single handedly “liberated” 20 per cent of PACER's documents. While his activities were put under the scanner, ultimately the US law authorities decided not to press charges.

His next brush was with MIT and JSTOR, the online store of academic articles. JSTOR has over 4.2 million articles, which is accessible only through paid subscriptions. There has been an ongoing battle over academic publications; the entire content, review, selection and even editing is done by the academic community free of any charge. But access to such material is only through paid copies or online subscriptions. Even though Open Access Journals have made some headway, the bulk of advanced journals are expensive and available only in the libraries of institutes and universities that can afford such high prices. Aaron decided to do something direct; he downloaded almost the entire JSTOR collection using a laptop connected to MIT's network.

Once this was discovered, the US Attorney's office swung into action. For them, it did not matter that JSTOR did not press charges and has even taken a decision a few weeks back to release into public domain a large part of its archives. They went after Aaron for violating the Computer Fraud and Abuse Act passed in 1984. What the US government is protecting is information and knowledge as private property, also the core of SOPA.

Behind this harsh prosecution of Aaron lies a bigger fear that the US government has. More the information that is digitised within the government, more the potential of its becoming public.  What Bradely Manning could take out from his computer and his network on a few CD's would have taken a number of trunks if they were hard copy documents. It is this digitised information that is now vulnerable to access using computer networks and even the internet. As also all copyrighted material.

For the US government, this was therefore a test case of how far the Computer Fraud and Abuse Act could be stretched and the government’s ability to prosecute hackers. Freedom of the internet is a welcome goal everywhere else, but not in the US. Remember how vigorously the US supposedly “fought” for internet freedom in the recent ITU conference in Dubai?

Various legal experts have already stated that the US government was wrongly converting a civil case into a criminal case by claiming that violation of the terms of access or terms of use of a web site is computer fraud. Pressing criminal charges that could mean 35 years jail for an act of civil disobedience was far beyond what could be even remotely construed as commensurate with the “crime”. It cannot be understood unless we understood the message that the US government is delivering – freeing information whether in government or private hands through privatisation of public knowledge – are now to be considered “heinous” crimes equivalent to mass murder.

With Aaron's death, we have all lost a valued comrade in our fight for the digital commons. We cannot match his brilliance in creating new tools for the digital commons. But collectively, we can all fight the good fight for liberating information and knowledge. This should be our tribute to Aaron. As also fighting for a just society that does not penalise those who fight for public good, while lauding those who steal from the public.

Peoples Democracy dt 27th January 2013