Sunday, April 18, 2021

மார்க்சீய இடது சாரிகளின் சிந்தனைக்கு

 

தேர்தல் முடிந்துவிட்டது. மக்கள் ஜனநாயகத்தை இலக்காக கருதும் மார்க்சீய இடது சாரி மனப் போக்குள்ளவர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்கு. விடைதேடுவது அவசியம்

 நாடாளுமன்ற அரசியல் சாக்கடையாக ஆகிவிட்டதை சுத்தப்படுத்துகிற யுக்திகளை தேடப் போகிறோமா அல்லது குறுக்குவழியில் அதில் விழுந்து பதவிசுகம் பெறும் வழியிலேயே போகப் போகிறோமா என்ற கேள்விகளுக்கு பதில் அவசிமாகிறது  

  70வருட மாக நாடாளுமன்ற ஜனநாயகம் படிப்படியாக தரமிழந்து தனிநபர் கையில் அதிகாரத்தை குவியவைத்துவிட்டது. இன்று மோடி அரசால் பிரிட்டீஷ் ஆட்சிகாலத்து அதிகார குவியல் நடைமுறைகள் புதுப்பிக்கப்பட்டு நமது அரசியல் சாசனத்தை முடக்கிவிட்டது.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் .சட்டமன்றங்கள் ,நாடாளுமன்றம் அனைத்தும் குதிரை வியாபார சந்தையாகிவிட்டன.. அதிகாரிகளின் கையிலேயே அதிகாரங்கள் குவிக்கப் பட்டுள்ளன இடது ஜனநாயக இயக்கங்களின் நிர்ப்பந்தம் காரணமாக உருவான பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் அதிகார வர்க்கத்தின் பிடியில் இருப்பதால் ஜனநாயக விரிவாக்கத்திற்கு பயன்படவில்லை.

 சட்டமன்றம் முதலமைச்சரின் தர்பாராகிவிட்டது. மாநகராட்சி சட்டமும் தனிநபரின்கையில் அதிகாரத்தை கொடுத்துவிட்டது .

 இந்த சூழலில்தான் 2021 தேர்தல் நடந்துள்ளது. சட்டமன்றத்திறகான தேர்தல் என்பதைவிட பணக்காரர்களின் பணச் செலவில் நடந்த திருவிழா எனலாம். வேலையில்லாமல் தவிக்கும் கோடான கோடி இளைஞர்களுக்கும் கலை இலக்கிய நவீன தகவல் தொழில்நுட்ப  துரையினருக்கும்  கூலியாக  வருவாய் வந்தது. கொரான கொடுத்த கடன் சுமையை இறக்கிவைக்க சிலருக்காவது உதவியிருக்கலாம்.

 இதனால் நமது அரசியல் சாசனத்தை மதித்து மக்களுக்கு சேவை செய்யும் சட்டமன்றம் உருவாகுமா என்றால் இல்லை என்றே உறுதியாக கூறலாம். இந்த தேர்தலில் நின்ற பெரும்பாலான வேட்பாளர்களுக்கு அப்படி ஒரு அரசியல் சட்டம் இருப்பதுவே தெறியாது.

 இரட்டைஇலையோ, உதய சூரியனோ தாமரையோ பெரும்பாலான சட்டமன்ற வேட்பாளர்கள் தொகுதிமக்களின் மனதிலே இடம் பிடித்தால் போதும் என்ற பார்வை கொண்டவர்களாக இருந்தனர் என்பதை தேர்தல் பிரச்சாரங்களே காட்டின. இவர்கள் சட்டமன்றத்திற்குள்ளே போனால் தலைவரின் மனதிலே இடம்பிடிக்கவே முயல்வரே தவிற அரசாங்க செயலை அதிகாரிகளின் நடத்தையை கண்காணிக்கும் கடமையை உணரமாட்டார்கள்.இதைத்தான் அணுபவம் கூறுகிறது. 


   சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 1971 தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று  சென்னை நகர ஆறுகளை தூய்மைபடுத்துவதாகும். 51வருடங்கள் கடந்த பிறகும்  நிறைவேறவில்லை. 21 வருடங்களுக்கு முன்னால் சென்னை நகரை சிங்கப்பூராக்குவேன் என்ற வாக்குறுதி கொடுத்தே ஸ்டாலின் மேயரானார். அதுவும்  நிறைவேறவில்லை.


 வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டமன்றம் அரசியல் நிர்ணயசட்டப்படி இயங்கி அதிகாரவர்க்கத்தை கண்காணிக்க தவறியதால் வாக்குறுதிகள் காற்றிலே பறந்தன. அல்லது ஊழலில் மாட்டிக் கொண்டன.

 புதிதாக அமைய இருக்கும் ஆட்சியின் தலைவிதி மோடி அரசின் சூழ்ச்சியை சந்திக்கும் முறையை பொறுத்தது.


 இன்று மோடி அரசின் அரசியல் பொருளாதார கொள்கைகளே  விலைவாசி உயர்விலிருந்து. விவசாயம்- தொழில் நெருக்கடி வரை  மக்களை வதைக்கின்றன. அதற்கெதிராக மக்களை திரட்டும் பாதையை விட்டு மதசார்பின்மை என்ற போர்வையில் தொகுதி உடன்பாடு என்ற பழைய பாதை இடது சாரிகளை அழித்துவிடும்.     

   Com V Meenakshi Sundaram in face book