நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு நாதஸ்வர கச்சேரி துவங்கியது. நேற்று இஞ்சிக்குடி சகோதரர்கள் வாசித்தார்கள். மிக மிக நன்றாக இருந்தது. பிஸ்மில்லா கான் போல பர்வீன் சுல்தானாவின் கிரிதர கோபால பாடலை இஞ்சிக்குடி சுப்ரமணியன் வாசித்தார். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஷெனாய் போலவே இருந்தது. அடுத்த கச்சேரி வாசித்த காசிம் பாபுவும் அதேபோல் ஒரு பாடலை ஷெனாய் பாணியில் வாசித்தார்கள். இப்போதைய போக்கு இப்படி ஷெனாய் போன்ற வாசிப்பை வாசிக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் நல்லதுதான். பத்தொன்பதாம் தேதி முதல் பெத்தாச்சி ஆடிடோரியத்தில் நடைபெற இருக்கும் நாதஸ்வர கச்சேரியில் முதல் கச்சேரி இஞ்சிக்குடி சகோதரர்களுடையதுதான். இருபத்துஎட்டுவரை நடைபெற இருக்கும் அந்த நாதஸ்வர விழாவிலும் இப்படியான அற்புதமான பாடல்களை கேட்கலாம்.
No comments:
Post a Comment