Friday, May 1, 2009

மே தினம்

உழைப்பின் சிறப்பு:
கரையான் தான் வாழ புற்றை கட்டுகிறது. கரையானை உண்ண வரும் பாம்பு கரையானை தின்ற பிறகு அங்கேயே தஙகிவிடுகிறது. பார்ப்பவர்கள் அந்த புற்றை கரையான் புற்று என்று கூறுவதில்லை, பாம்பு புற்று என்று கூறுகிறார்கள். பாம்பை நல்ல பாம்பு என்றும் கூறுகிறார்கள். அத்தோடு நில்லாமல் அந்த பாம்பிற்கு பாலும் வார்க்கிறார்கள். உழைப்பைச் சுரண்டி சேர்த்ததுதான் முதல். இரண்டாவதாக வந்த ஒன்றை முதல் என்று அழைக்கும் வினோதம் ஒரு புறம் இருக்கட்டும்.அந்த முதலுக்கு யார் சொந்தக்காரன் என்று கேட்டால் முதலை உருவாக்கிய உழைப்பாளியை கூறுவதில்லை, உழைப்பைச் சுரண்டிய முதலாளிதான் அதற்கு சொந்தக்காரன் என்று கூறுகிறார்கள். உழைப்பவனை அவன் உருவாக்கிய உற்பத்திச் சாதனத்திலிருந்து அன்னியப்படுத்திவிட்டு முதலாளியை பிரதான இடத்தில் வைக்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன? உழைப்பில்லாமல் முதல் இல்லை. ஆனால் முதல் இல்லாமல் உழைப்பு இருக்கும். முதல் உழைப்பைச் சார்ந்துதான் இருக்கும். ஆனால் உழைப்பு முதலைச் சாராமல் இருக்கமுடியும். இதனை எடுத்து உரைப்பதுதான் மே தினம்.

No comments: