Thursday, October 8, 2009

அக்டோபர் ஏழாம் தேதி நடை பெற்ற விலைவாசி எதிர்ப்பு உணவு உரிமை மாநாடு

ஒரு பெண் மீன் பிடிக்கப்போனாளாம். உயிருள்ள மீன் கிடைத்ததாம். அதை எடுத்துக்கொண்டு மீன் சமைக்க தேவையான பொருள்களை வாங்க போனாளாம். பொருள்களின் விலையைக்கேட்டதும் மயக்கமே வந்துவிட்டதாம். பிறகு சமாளித்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தாளாம். இந்த விலையில் பொருள்களை வாங்கி மீன் சமைக்க முடியாது. ஆகவே இந்த் மீனை தண்ணீரிலேயே விட்டுவிடலாம் அதுவாவது பிழைத்துப் போகட்டும் என்று மீனை தண்ணீரில் விட்டு விட்டாளாம். அந்த மீனும் சந்தோஷமாக நீந்திக்கொண்டே சோனியா வாழ்க, கருணாநிதி வாழ்க என்று கத்திக்கொண்டே போனதாம். விலைவாசி உயர்வு எதிர்ப்பு, உணவு உரிமைக்கான மாநாட்டில் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் சொன்னது.

No comments: