உடைமை வர்க்கம் தனது நலனை மேலும் மேலும் பாதுகாத்துக்கொள்ள தேவையான ஏற்பாடுகளை வெட்கமில்லாமல் வெளிப்படையாகவே செய்துகொள்ளுகிறது என்பது மீண்டும் மீண்டும் தெரிய வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு இயற்றப்பெற்ற பினாமி நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லையாம், அதற்கு இன்னும் விதிகள் எழுதப்படவில்லையாம். அதன் காரணமாக சத்யம் கம்ப்யூட்டர் ராஜுவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை எழுதமுடியவில்லையாம். எகனாமிக் டைம்ஸ் ஜன 19 மேற்கோள் காட்டி தீக்கதிர் (24-01-09) பத்திரிகை கூறுகிறது. தானே முன்வந்து குற்றங்களை ஒத்துக்கொண்டால் கூட அவரை கைது செய்ய முடியாது என்று போலீஸ் கூறுகிறது. ஆக பினாமி நடவடிக்கைகள் மூலமாக ஊழல் செய்துகொள்ளுங்கள், மாற்று ஏற்ப்பாடு வரும் வரை அதனை கண்டுகொள்ள மாட்டோம் என்று ஆளும் உடைமை வர்க்க தலைமை தனது வர்க்கத்தினருக்கு வெளிப்படையாகவே தெரிவிக்கிறது.
அதுமட்டுமா, தடயவியல் தணிக்கைமுறை மூலமாக ஊழல்களை மிகச் சுலபமாக கண்டுபிடித்து விடலாமாம். ஆனால் அதற்கான பயிற்சி பெற்ற தணிக்கையாளர்கள் மிக மிக குறைவாகவே உள்ளார்களாம். 6000 பேர் தேவையாக உள்ள நிலையில் வெறும் 400 பேர்தான் உள்ளார்களாம். இவர்களால் சராசரி 480 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளை மட்டுமே தணிக்கை செய்ய இயலுமாம். தொழில் அதிபர்களால் செய்யப்படும் ஊழலின் வேகத்த்திருக்கு இது போதவே போதாதாம். வருடத்திற்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறதாம். அரசாங்கமே தனது செலவில் தடயவியல் தணிக்கையாளர்களை பயிற்றுவிக்க பயிற்சி நிறுவங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவினால் தகுந்த பலன் கிடைக்கும் என்று தினமணி பத்திரிக்கையில் (2-2-09) அப்படி பயிற்சி அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் மயூர் ஜோஷி கூறுகிறார். மேலே கூறியபடி ஆளும்உடைமை வர்க்கத்தின் தலைமை இதனை செய்ய முன் வருமா?
ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? உத்திர பிரதேசத்தில் ஒரு ஆறு வயது சிறுமி 250 ரூபாய் திருடிவிட்டதாக கூறிக்கொண்டு அந்த ஒன்றரை அடி உயர சிறுமியை சுற்றி ஆறு போலீஸ்காரர்கள் நின்று கொண்டு அவளை முடியை பிடித்தும் காதை பிடித்தும் தூக்கி அடித்து கொடுமை படுத்தி உள்ளார்கள் ( தீக்கதிர் 4-2-09). வெட்கம் கெட்ட மானமில்லாத அதிகார வர்க்கம் சாதரண மக்களுக்கு எதிராக செயல்படவே நாங்கள் இருக்கின்றோம், ஊழல் புரியும் உடைமை வர்க்கத்தினருக்கு எதிராக செயல்பட அல்ல என்று தெளிவாகவே கூறுகிறார்கள்.
அதுமட்டுமா, தடயவியல் தணிக்கைமுறை மூலமாக ஊழல்களை மிகச் சுலபமாக கண்டுபிடித்து விடலாமாம். ஆனால் அதற்கான பயிற்சி பெற்ற தணிக்கையாளர்கள் மிக மிக குறைவாகவே உள்ளார்களாம். 6000 பேர் தேவையாக உள்ள நிலையில் வெறும் 400 பேர்தான் உள்ளார்களாம். இவர்களால் சராசரி 480 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளை மட்டுமே தணிக்கை செய்ய இயலுமாம். தொழில் அதிபர்களால் செய்யப்படும் ஊழலின் வேகத்த்திருக்கு இது போதவே போதாதாம். வருடத்திற்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறதாம். அரசாங்கமே தனது செலவில் தடயவியல் தணிக்கையாளர்களை பயிற்றுவிக்க பயிற்சி நிறுவங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவினால் தகுந்த பலன் கிடைக்கும் என்று தினமணி பத்திரிக்கையில் (2-2-09) அப்படி பயிற்சி அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் மயூர் ஜோஷி கூறுகிறார். மேலே கூறியபடி ஆளும்உடைமை வர்க்கத்தின் தலைமை இதனை செய்ய முன் வருமா?
ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? உத்திர பிரதேசத்தில் ஒரு ஆறு வயது சிறுமி 250 ரூபாய் திருடிவிட்டதாக கூறிக்கொண்டு அந்த ஒன்றரை அடி உயர சிறுமியை சுற்றி ஆறு போலீஸ்காரர்கள் நின்று கொண்டு அவளை முடியை பிடித்தும் காதை பிடித்தும் தூக்கி அடித்து கொடுமை படுத்தி உள்ளார்கள் ( தீக்கதிர் 4-2-09). வெட்கம் கெட்ட மானமில்லாத அதிகார வர்க்கம் சாதரண மக்களுக்கு எதிராக செயல்படவே நாங்கள் இருக்கின்றோம், ஊழல் புரியும் உடைமை வர்க்கத்தினருக்கு எதிராக செயல்பட அல்ல என்று தெளிவாகவே கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment