Tuesday, February 10, 2009

தனி நபர் வருமானம் பற்றிய பொய்யான தோற்றம்

இந்தியாவின் தனி நபர் வருமானம் கடந்த ஏழு ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துவிட்டதாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. 2000-01 ஆம் ஆண்டு 16688 ரூபாயாக இருந்த தனி நபர் சராசரி வருமானம் 2007-08 ஆம் ஆண்டு 33283 ஆக உயர்ந்து விட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. உலகில் முதல் பத்து பணக்காரர்களில் நன்கு பேர் இந்தியர் என்றும் ஆண்டுக்கு நாற்பதுக்கும் மேல் கார் அறிமுகமாகும் நாடு இந்தியா என்றும், இவை அனைத்தும் இந்தியாவின் வளர்ச்சியை காட்டுவதாகவும் அறிக்கை பெருமை பேசுகிறது. ஆனால் வசதியாக ஓர் விஷயத்தை மறந்து அல்லது மறைத்து விடுகிறது. அதாவது மேலே குறிப்பிட்ட அனைத்துமே இந்தியயாவின் பத்து சதவிகித மக்களை மட்டுமே உயர்த்தியிருக்கிறது என்பதும் உண்மையிலேயே இந்தியாவின் 70 % சதவிகித மக்களின் ஒரு நாள் வருமானம் 80 ரூபாய் மட்டுமே என்பதும், ரூபாய் இருபது கூட ஈட்ட முடியாமல் 70 % மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதும், நாட்டின் முதுகெலும்பாக உள்ள 80 % மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத்துறை முற்றிலும் புறக்கணிக்கப்படுவதால் நாளும் விவசாயிகளின் தற்கொலை அதிகமாகி வந்து 2007 ஒரு வருடத்தில் மட்டும் 16632 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்பதுவும் மிக வசதியாக மறைக்கப்பட்டு இருக்கின்றது.

இன்னொரு வகையிலும் இந்த மார்தட்டல் எத்தனை தவறானது என்றும் பார்க்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள கால கட்டத்தில் விலைவாசி இருமடங்காக உயர்ந்துள்ளது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. 2000 டிசம்பரில் ரூ 16 க்கு விற்ற கடலை பயிறு 2000 டிசம்பரில் ரூ 37 க்கு விற்றதுவும் ரூ 37 க்கு விற்ற கடலை ஆயில் ரூ 77 ஆக உயர்ந்ததுவும், அதேபோல் அனைத்து விலைவாசிகளும் இருமடங்காக உயர்ந்தும் இருக்கும்போது சராசரி வருமானம் இருமடங்காக உயர்ந்தால் அதனை எப்படி உயர்வு என்று ஏற்றுக்கொள்ளமுடியும்? -- தினமணி 7-2-09

No comments: