அறிவியலையும் மதத்தையும் கலக்கக் கூடாது
பாரத ரத்னா விஞ்ஞானி சி.என்.ஆர் ராவ் கருத்து

பாரத ரத்னா விஞ்ஞானி சி.என்.ஆர் ராவ் கருத்து
பெங்களூரூ ஜன.10-
அறிவியலையும் மதத்தையும் ஒன்று கலக்கக்கூடாது; நம் பிக்கையை அறிவியலோடு சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.சி.என்.ஆர்.ராவ் இந்தியாவில் பல பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக பணியாற்றி ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். சிறந்த அறிவியலாளருக்கான பாரத ரத்னா விருது பெற்றவர்.பெங்களூரில் மோடியின் அறிவியல் கொள்கை மற்றும் மதம் ,சகிப்பின்மை குறித்து பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் கூறியுள்ள தாவது:தனி நபர் ஒருவரோ அல்லது அமைச்சகத்தில் உள்ள எந்த ஒருவரோ தனியாக அறிவியலின் அல்லது சமூகத்தின் பிரச்சனை களை தீர்த்து விட முடியாது.அறிவியலைப் பயன்படுத்தி உலக நாடுகளுடன் போட்டி யிட்டு கொண்டே வறுமை போன்ற கடினமான பிரச்சனை களை தீர்க்கலாம். இதற்கு பிரதமர் மோடிக்கு சரியான அறிவியல் ஆலோசகர்கள் அமைய வேண்டும். அப்போதே முதன்மை யான பிரச்சனை எது என்பதை அறிய முடியும். அறிவியலுக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சிறிய அளவு நிதியான ரூ.10-20கோடிகளும் தற்போது நிறுத் தப்பட்டுவிட்டது. எனவே மோடி அரசு நல்ல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச நிதியாவது ஒதுக்க வேண்டும். மோடி அரசு சில பிரச்சனை களுக்கென தனியான அறிவியல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் . தரமான விதைகளை உருவாக்கவும்,பாதுகாப்பான குடிநீருக்காகவும், கல்வியின்மை யை ஒழிக்கவும் மலேரியா போன்ற நோய்களை ஒழிக்கவும் அறிவியல் திட்டங்களை உருவாக்கி நிதி ஒதுக்க வேண்டும்.மோடி அரசுக்கு தேவைப் பட்டால் நான் பணிபுரியத்தயார்.அறிவியல்தான் அனைத் திற்கும் அடித்தளமாகும். அறிவியல் வளர்ச்சி இன்றியோ உயர் கல்வியின் வளர்ச்சியின்றியோ இந்தியா எப்படி உலகிற்கு தலைமையை அளிக்க முடியும்?நான் அற்புதங்களில் நம்பிக்கை வைப்பவன் அல்ல.
ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் மதம், நம்பிக்கை, மூட நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தையும் போட்டு குழப்பிக் கொள்வது நடக்கிறது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறியது போன்று, யாரும் நம்பிக்கைகள் இன்றி இருக்கமுடியாது. நீங்கள் ஏதாவது மதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதைவாழ்க்கையின் பிற விசயங் களோடு இணைத்துக் கொள்ளக் கூடாது. இயற்பியல் விதிகளுக்கு மாறாக நடக்கும் விசயங்களை நம்பக்கூடாது. அந்த வகையில் அறிவியலையும் மதத்தையும் ஒன்றாக கலக்கக்கூடாது.இவ்வாறு ராவ் கூறியுள்ளார்.(பிடிஐ)
No comments:
Post a Comment