Thursday, January 14, 2016

உயர்கல்வி - யாரால்? யாருக்காக?



நாட்டின் கதவுகளை அகலத் திறந்துவிட்டு, வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு புகுந்து வந்து, தங்கள் பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் தாராளமாக, எப்பொழுது வேண்டுமானாலும் நிறுவலாம். எந்த அனுமதியும் தேவையில்லை. எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்கலாம்.
(உயர்கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்’ என்ற பொருளில் 5.11.15 அன்று சென்னையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட தொடக்க உரை)
இந்திய நாட்டின் மிகப் பெரும் தோல்வி, இமா லயத் தோல்வி கல்வியில்தான். கல்வி அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் இந்தத் தோல்வி இந்தியாவின் உயிர் குடித்துக் கொண்டிருக் கிறது. உலகிலேயே மிகக் கொடிய ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பை இந்தியா உருவாக்கி, அதன் பெரும்இழப்புகளை அனுபவித்துக் கொண்டிருக் கிறது.
நாட்டின் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு பெரும் துரோகம் இழைக்கும் கல்வி; அறிவு வளர்ச்சி, விஞ்ஞானக் கண் ணோட்டம், சமூக ஈடுபாடு, விமர்சன - பகுத்தறிவுப் பார்வை, மனிதநேயம், ஜனநாயக நெறிகள், மதச்சார்பற்ற விசாலப்பார்வை , படைப்புத்திறன், இவை எதையுமே அளிக்கத் தவறும் கல்வியை நம் குழந் தைகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனிதனை மனிதன் விழுங்கும் கொடூரப் போட்டி உலகத்திற்குள் தள்ளப்பட்டு, குழந்தைகள் குழந்தைப் பருவத்தையே இழந்துவிட்டனர். மிகப் பெரும்பாலான குழந்தைகளை, இளைஞர்களை , வாய்ப்பு வட்டத்தினின்று வெளியே தள்ளி, சமுதாயத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் ஒருசிலருக்கே அனுகூலங்களை அளிக்கும் கல்வி, தனியார்மய மாக்கப்பட்டு மார்க்கெட்டில் விலை போ கும் பண்டமாக மாற்றப்பட்டிருக்கும் கல்வி, நவீன தாராளமயக் காலம்தொடங்கியதிலிருந்து இந்தப் போக் குகளெல்லாம் தீவிரமடைந்திருக்கின்றன. நாடே பலியாகிக் கொண்டிருக்கிறது.இன்று நாம் எடுத்துக் கொண்டிருப்பது உயர்கல்வி மட்டுமே. இங்கு நாம் கூடியிருக்கும் இந்நேரம் ‘டீஉஉரயீல ருழுஊ’, ‘யுஜிசியை முற்றுகை இடுவோம்’ என்ற இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. மற்றமட்டங்களில் போலவே உயர் கல்வியும்பெரும் சவால்களை , பெரும் தாக்குதல் களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மோசமான வணிகமயம், தனியார்மயம், தன் அடிப்படைப் பொறுப்புகளை உதறித்தள்ளும், கார்ப்பரேட்டுகளின் கையில் கல்வியை அடகு வைக்கும் அரசு. அத்துடன் இன்றைய அரசின் அபாயகரப் போக்கான காவிமயமாகும் கல்வி. இவ் வாறு பல சம்மட்டி அடிகளை உயர் கல்வி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.புதியக் கல்விக் கொள்கை ஒன்று உருவாக்கப் போவதாக இந்திய அரசு அறிவித் திருக்கிறது. அது எப்படி இருக்கும் என்றுநம்மால் யூகிக்க முடியும். அதனை உருவாக்க நியமிக்கப்பட்டிருக்கும் குழுவில் அனைவரும் (ஒருவர் தவிர) அரசு செயலர் கள் . இந்நாட்டின் சிறந்த கல்வியாளர்கள் அதில் இருக்க வேண்டியதில்லை என்று அரசு முடிவு செய்திருக்கிறது.
1. முதல்பிரச்சனை, கல்வி சந்தைப் பொருளாக , வணிகப் பண்டமாக ஆக விடலாமா? அரசுக்குக் கல்வியில் பொறுப்பில் லையா? தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, கைகழுவி விட அனுமதிக்கலாமா?உலகம் முழுவதும், அனைத்து வளர்ச்சியடைந்த நாடுகளிலும், முன்னணி வளரும் நாடு களிலும்கல்வி அரசின் பொறுப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனைவருக்கும் இல வசக் கல்வி அளிக்கப்படுகிறது. இது ஏதோசோசலிச நாடுகளில் மட்டும் என்று நினைத்து விடக் கூடாது. மக்கள் நல அரசுக் கொள்கைகளை (றுநடகயசந ளவயவந யீடிடiஉநைள) ஏற்றுக் கொண்ட நாடுகளி லும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ மார்க்கெட் பொருளாதார அமைப்பு களைக் கொண்ட நாடுகளிலும் (னநஎநடடியீநன அயசமநவ நஉடிnடிஅநைள) கூட கல்வி அரசின் பொறுப்பில்தான் அளிக்கப்படுகிறது. இதுஅடிப்படைப் பள்ளிக் கல்வியில் மட்டு மல்ல, உயர்கல்வியும் இலவசமாக அல்லது பெரும் மானியத்துடன் அளிக்கப்படு கிறது. சமீபத்தில், ஒரு பத்து நாட்களுக்கு முன்தான், ஜெர்மனியில் உயர் கல்வி முழுவதும் இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாமோஎதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இது வீழ்ச்சிப் பாதையன்றி வேறு என்ன?கல்வி அரசின் முழுப் பொறுப்பாக ஏற்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன? கல்வி அளத்தற்கரிய , எல்லையில்லா பெரும் நலன்களைப் பயப்பது; சமுதாயத்தின் பொது சொத்து; மனித வளர்ச்சிக்கு அத்தியாவசியமான , மொத்த மனிதவளத்தின் பயனை சமுதாயம் அறுவடைசெய்வதற்கு ஆன சமூக முதலீடு; சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான கருவி; வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும் அளவு கோல். இவ்வாறு ஒரு சமுதா யத்தை நிறுவும், நிர்மாணிக்கும் இந்த ஆதாரத் தேவையை மார்க்கெட் பூர்த்தி செய்ய இயலாது. மார்க்கெட்டிடம் விடப் பட்டால் சமுதாயத்தின் தேவைக்கு மிகக் குறைவாகத்தான் முதலீடு செய்யப்படும். இந்த ஆழ்ந்த அறிவும், புரிதலும்தான் கல்வி அரசின் கையில் , அரசின் முழு நிதிஒதுக்கீட்டில், அனைவருக்கும் இலவச மாக அளிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் ஞானத்தை உறுதிப்படுத்திற்று.உயர்கல்வி இன்று ஒரு அவசியத் தேவை. அதிலும், உலகமயமான, தொழில் நுட்ப சகாப்தத்தில், தன்பிரஜைகளில் மிகப்பெரும்பாலோர் உயர் கல்வி பெறாமல் ஒரு நாடு முன்னேற்றம் காண்பது இயலாது. அத்துடன்,பின் தள்ளப்பட்ட , நலிந்த பிரிவினர் வாழ்வில் உயர்வதற்கு உயர் கல்வி ஒன்றே வழி. ஆகவேதான், வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடே உயர்கல்வி கற்ற மக்கள் செல்வம் என்று கருதப்படு கிறது. அதிலும், ஏழ்மையில் ஆழ்ந்து கிடக்கும் நம் நாட்டில், அரசு முழுப் பொறுப் பேற்பதும், மார்க்கெட்டை அண்ட விடா மல் தடுப்பதும் கல்விக் கொள்கையின் அடிப்படையாக இருக்க வேண்டும்.நம் நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் சதவிகிதம் (ழுசடிளள நுசேடிடஅநவே சுயவiடி(ழுநுசு) வெறும் 18 சதவீதம் உலக நாடுகளின் சராசரி 30 சதவீதம்உயர் கல்விஇலவசமாகக் கிடைத்தாலன்றி விடப்பட்டிருக்கும். இந்தப் பெரும் மக்கள் திரள் பயனடைய இயலாது. விடப்பட்டோரில் மிகப்பெரும் பகுதி, எஸ்.சி, எஸ்.டி. சிறுபான் மையினோர், குறிப்பாக அவற்றில் பெண்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. கொள்ளை அடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களால் இப்பெரும் சமூகப்பொறுப்பை ஏற்றுக் கொள்வது கொஞ்ச மும் இயலாது.
2. இன்றைய அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெருமளவு குறைத்துக் கொண்டிருக்கிறது. கல்விக்கான மொத்தபட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 82,771 கோடியி லிருந்து, ரூ.69, 074 ஆகவும், திட்ட ஒதுக் கீட்டில் 25 சதவீதமும் குறைத்திருக்கிறது. பள்ளிக் கல்வியில், எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களுக்கும், உயர் கல்வியில், பல் கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கு 48 சதவீதமும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆராய்ச்சி மிகக் குறைவாக நடக்கும் நிலையில், இன்று மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது . `டீஉஉரயீல ருழுஊ’ போராட்டத்தைப் பற்றிக் குறிப் பிட்டேன். ஆய்வு மாணவருக்குக் கொ டுத்துவரப்பட்ட நெட் (சூயவiடியேட நுடபைibடைவைல கூநளவ, சூநுகூ) அல்லாத உதவித் தொகை நிறுத்தப்பட்டு விட்டது. ஒரு ஆராய்ச்சி மாணவருக்குக் கொடுக்கப்பட்டது. வெறும்ரூ.5000 தான். ஆராய்ச்சி நிறுவனங் களுக்கான நிதி கடுமையாக வெட்டப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஆர் நிறு வனங்கள் , ஐஐடிகள் அனைத்திற்கும் தங் களுக்கு வேண்டிய நிதியை அவர்களே கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தகைய ஆய்வுகளுக்கு நிதி அளிக்கும்? தங்களுக்கு அதிக லாபம் அள்ளித் தரக் கூடிய ஆராய்ச்சிகளுக்குத்தான் நிதி அளிக் குமே அன்றி , அறிவியல் வளர்ச்சிக்கோ, சமூகத் தேவையான ஆய்வுகளுக்கோ உதவும் நிதி அவைகளிடமிருந்து பெற இயலாது.
3. ‘அறிவு’ என்பதே மோசமான திரிபுகளுக்கு உள்ளாக்கி இருக்கிறது .அறிவு என்பதன் பொருள்தான் என்ன? அறிவுக்கு அர்த்தம் கூறுவது, இலக்கணம் வகுப்பது யார் பொறுப்பு? மனித வரலாறு முழுவதும் அறிவியலாளர்கள், பல்துறை அறிஞர்கள், சமூகத் தலைவர்கள் , தேச நிர்மாணத்தில் அக்கறை கொண்டோர், இவர்கள்தான் அறிவுக்கு இலக்கணமும், இலக்குகளும் வகுத்தவர்கள். இன்று அந்தப் புனிதப் பொறுப்பை , உள்ளூர், வெளியூர் கார்ப்ப ரேட் முதலாளிகள் அபகரித்துக் கொண்டுவிட்டனர். அவர்களது ஒரே குறிக்கோள் லாபப் பெருக்கம். அதற்குத் தேவை யான திறமைகளை அளிப்பது மட் டுமே கல்வியின் நோக்கம். அவர்கள் தான் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டு மென்று விதிக்கின்றனர். நமது பல்கலைக்கழகங்களும் அக்கட்டளைகளை சிரமேற்று, அவசர அவ சரமாகத் தங்கள் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கின்றனர் தங்கள் மாணவருக்கு வேலை பெறும் தகுதியை அளித்துவிட்டோம் என்று பெருமையுடன் பறை சாற்றுகின்றனர். மனிதகுல வரலாறு நெடுகிலும் ஆராதிக்கப் பட்ட அறிவின் அர்த்தத்தில் இது ஒரு ஆழிச்சுழற்சி.
4.அடுத்து, கல்வியை காவிமயமாக் கும், துவேஷம் வளர்க்கும் கல்வி யைத் திணிக்கும்திட்டம். அனைத்து உயர் நிறுவனங்களிலும், இந்துத் வாவாதிகள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். பல நிறுவனங் களின் புகழ் பெற்ற தலைவர்கள் நிர்ப்பந் தத்திற்குத் தள்ளப்பட்டு, ராஜினாமா செய்திருக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நாளந்தா பல்கலைக் கழகத்தில் தொடர முடியாது என்று வெளியேறினார். குடைஅ யனேகூநடநஎளைiடிn ஐளேவவைரவந டிக ஐனேயை (குகூஐஐ), தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிநிறுவனம் (சூயவiடியேட ஊடிரnஉடை டீக நுனரஉயவiடியேட சுநுளநயசஉh யனே கூசயiபேiபே (சூஊநுசுகூ), இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் (ஐனேயைn உடிரேஉடை கடிச ழளைவசடிiஉயட சுநளநயசஉh (ஐஊழசு), நேரு நினைவு நூலகம் (சூநாசர ஆநஅடிசயைட டுiசெயசல), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், இந்திய கலாச்சார உறவுக் கழகம் (ஐனேயைn ஊடிரnஉடை டிக ஊரடவரசயட சுநடயவiடிளே ). தேசிய புத்தக நிறுவனம் (சூயவiடியடே க்ஷடிடிம கூசரளவ), ஏளைஎநளஎயசயலய சூயவiடியேட ஐளேவவைரவந டிக கூநஉhnடிடடிபல, ஊநவேசயட க்ஷடியசன டிக குடைஅ ஊநசவகைiஉயவiடிn, ஞசயஉhயச க்ஷhயசயவாi முதலான பல முதன்மை நிறு வனங்கள் இந்துத்வவாதிகளின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.பாடத்திட்டங்களில் மத துவேஷத்தை, சிறுபான்மையினர் விரோதத்தை விதைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்தியவரலாறு சொல்லொண்ணா திரிபுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்தியா ஆயிரம்ஆண்டு காலம் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது என்று சொல்லி, இஸ்லாமி யர்களை அந்நியராகவும், முகலாயர் காலத்தை அந்நிய ஆட்சி என்றும் பாடம் போதிக்கப்படுகிறது. இந்தியா ஐயா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மகோன்னத இந்து கலாச்சாரத்தை நிறுவி வெற்றி கண்டது. இந்துக்கள் விண்வெளியில்கிரகங்களுக்கிடையில் பயணிக்கும் மகிமை கொண்டிருந்தனர்; ஞடயளவiஉ ளரசபநசல யும் பநநேவiஉ வநஉhnடிடடிபலயும் அன்றேஅவர்களுக்குக் கைவந்த கலை, என்றெல் லாம் எந்த ஆதாரமுமற்ற, நகைப்புக்குரிய கட்டுக் கதைகள் வரலாறு என்று கூசாமல் சொல்லப்படுகின்றன. இந்தியா இந்து நாடு, மற்ற மதத்தினர் அந்நியர் என்பதை வலியுறுத்த வரலாறு என்ற களம் பயன்படுத்தப்படுகிறது.

5. இவை அனைத்துடனும் இன்று புதியஅபாயங்கள் காத்திருக்கின்றன. நம் நாட்டின் உயர்கல்வியை உலக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கும் அபாயம் இன்று நம் முன்னால் நிற்கிறது. உலகவர்த்தக மையம்-சேவைத் துறைகளில் வர்த்தகம் செய்வதற்கான பொது உடன்படிக்கை (றுகூடீ-ழுஹகூளு) என்கின்றபெரும் பூதங்களின் வடிவில் இந்த அபாயம் நம்மை விழுங்கக் காத்திருக்கிறது. உயர் கல்வி முழுக்க முழுக்க ஒரு மார்க்கெட் பண்டமாக, சந்தைப் பொருளாகமாறும் அபாயம், உயர் கல்வியில் நாடுதன் இறையாண்மையையே இழக்கும் அபாயம். நாட்டின் கதவுகளை அகலத் திறந்துவிட்டு, வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இங்கு புகுந்து வந்து, தங்கள் பல்கலைக்கழகங்களையும், கல்லூரி களையும் தாராளமாக, எப்பொழுது வேண்டுமானாலும் நிறுவலாம். எந்த அனுமதியும் தேவையில்லை. எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக் கலாம். நம் நாட்டுக் கல்வி நிறுவனங் களுக்கு நம் அரசு அளிக்கும் மானியம், உதவித் தொகை , மற்ற சலுகைகள் ஆகிய அனைத்தும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இந்தஅந்நிய நிறுவனங்களைக் கட்டுப்படுத் தும் எந்த அதிகாரமும் இருக்காது. எந்தச் சட்டங்களும், விதிமுறைகளும் , இடஒதுக்கீடுகளும், சமூக நீதி நெறிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தாது. நமது நாட்டு நீதிமன்றங்களுக்கும் அவற்றின் மேல் எந்த அதிகாரமும் இருக்காது. நினைத் துப் பார்க்கவும் இயலா. இந்த அராஜகம் வெகு தூரத்தில் இல்லை, நண்பர்களே. வரும் டிசம்பர் மாதமே நைரோபிநகரில் றுகூடீவின் அதிகாரப் பூர்வ உயர் மட்ட அமைப் புக் கூட்டத்தில் இந்தியாவின்தலைவிதி நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இந்திய அரசு ஏற்கெனவே ழுஹகூளு கட்ட மைப்புக்கு உள்ளாக வரத் தயார் என்றுஏற்பளித்திருக்கிறது. கொடுத்திருக்கும் அந்த தற்கொலைப் பத்திரம், சுய மரண சாசனம் திரும்பப் பெறுவதற்கு நைரோபி மாநாட்டில் இறுதி வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன் படுத்தத் தவறிவிட்டால் அந்தக் கடுமை யான உலக கார்ப்பரேட் ஆதிக்கத்தி லிருந்து மீள வழியில்லை. அதை அனுமதிக்கப்போகிறாமா என்பது நம் முன் இருக்கும் புதிய, பிரம்மாண்ட சவால்.(பின்குறிப்பு: இந்த உரை 2015 நவம்பர் மாதம் நடைபெற்ற உயர்கல்வி குறித்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட தொடக்க உரை. இதற்குப் பின் 2015 டிசம்பரில் நைரோபியில் நடைபெற்ற றுகூடீ மாநாட்டில் உயர் கல்வி குறித்த முடிவுகள்எடுக்கப்பட்டனவா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட வில்லை. அப்படியென்றால், அபாயம் விலகிவிட்டது என்பதல்ல பொருள். அடுத்து விரைவிலேயே நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டில் இது விவாதத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.)கட்டுரையாளர்:மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர்

தீக்கதிர் 14/01/2016

No comments: