நீர் வற்றிக் கொண்டிருக்கும் காலங்களில் முதலைகள் வேட்டையாட நீருக்குள் காத்திருக்கும்.
வெளியில் இருக்கும் நிலம் வாழ் விலங்குகளுக்கோ உள்ளே முதலை இருப்பது தெரியும்.
தெரிந்தாலும் எத்தனை காலம்தான் தாகத்துக்கு நீர் குடிக்காமல் இருப்பது.
ஆனது ஆகட்டும் என்று நீர் குடிக்க வரும் போது காத்திருந்த முதலைகள் அவைகளை வேட்டையாடிவிடும்.
ஒழுக்கத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணின் தனிமனித அடிப்படை உணர்வுகளை ஆசைகளை நுணுக்கமாக கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்க உலகம்
அப்பெண்ணின் ஆசைகளை கடக்க உதவி செய்யும் புறக்காரணிகள் இல்லாமல் போகும் போது “எப்போது இந்த பெண் சமூக ஒழுக்கத்தை மீறுகிறாள். எப்போது பிடித்து அவமானப்படுத்தலாம்” என்று முதலைகள் போல் காத்திருக்கிறது.
அவளுக்கான தனிமனித தேவைகளை தனிப்பட்ட அளவில் தேடி போகும் போது அதை சுட்டிக் காட்டி சமூக பிரச்சனையாக சமூகத்தில் சித்தரித்து அவமானப்படுத்துவது மட்டுமில்லாது
“ஐயோ நாம் தவறிவிட்டோமோ” என்ற குற்ற உணர்வையும் அப்பெண்ணிடமே ஏற்படுத்தி விடுகிறது இந்த ஆணாதிக்க சமூகம்.
இதிலிருந்து எல்லாம் மீண்டு ஒருவர் அறிவியலில் சாதித்து மனித குலத்துக்கு நல்லது செய்திருக்கிறார் என்றாலது எப்பேற்பட்ட விஷயம்.
மேரி கியூரி என்றால் பிரபல பெண் விஞ்ஞானி.
அவர் அறிவாளி என்று நிறைய விஷயம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் அவர் வாழ்க்கையில் நிறைய சோகங்கள் உள்ளன.
அதில்லாமல் சமூகம் அவரை அவமானப்படுத்த பலமுறை துடித்திருக்கிறது.
தனக்காக தன் ஆராய்ச்சியையே கைவிட்டு உதவி செய்ய வந்த காதல் கணவர் பியரி கியூரியை மேரி அதிகம் நேசித்தார்.
நோபல் பரிசு பெற்ற அதே ஆண்டில் மேரி தன் கணவரோடு சாலையை கடக்க முயற்சி செய்யும் போது பியரி ஒரு குதிரை வண்டியில் அடிபட்டு இல்லாமல் ஆகிறார்.
கணவரின் இந்த இழப்பு மேரி கியூரியை அழ வைக்கிறது. கதறிவிடுகிறார்.
அவர்கள் இருவரும் வேலை செய்த ஆராய்ச்சி கூடத்துக்கு சென்று மேரியால் வேலை செய்ய முடியவில்லை.
Anhedonia என்ற மனநோயால் மேரி கியூரி பாதிக்கப்படுகிறார்.
Anhedonia என்றால் எந்த வேலை அதிகம் பிடிக்குமோ அதே வேலை மேலேயே வெறுப்பு வரும் மனநிலையாகும். அல்லது இன்பத்தை நுகரமுடியாத மன அழுத்தம் என்றும் அதை சொல்கிறார்கள்.
அதாவது hedonia வின் எதிர்பதம்.
ஆனாலும் மேரி பல்லை கடித்துக் கொண்டு வேலை செய்வதை நிறுத்தவே இல்லை.
கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கிறார்.
இதற்கிடையில் மேரி நோபல் பரிசு பெற்றவராக இருந்தமையால் அவர் வீடு மற்றும் அலுவலகத்துக்கு வெளியே எப்போதும் போட்டோகிராபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கணவனை இழந்த பிரபலம் நிச்சயமாக வேறு யாருடனாவது தொடர்பு வைப்பார் அதை பத்திரிக்கை செய்தி ஆக்கலாம் என்பது அவர்கள் எண்ணம்.
ஆனால் மேரியோ அவர்களிடத்தில் மிக கவனமாக இருந்தார்.
ஒரு பெண்ணோ ஆணோ தன் உடல் மற்றும் மனத்தேவைக்காக இன்னொருவரிடம் தொடர்பு கொண்டே ஆக வேண்டும் என்ற கணக்கில் மேரி தன் கணவரின் மாணவர் ஒருவரிடத்தில் காதல் வயப்படுகிறார்.
அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள்.
கடிதங்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
அந்த கடிதத்தை கைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் பேப்பரில் “நோபல் பரிசு பெற்ற சீமாட்டியின் காம தாகம்” ரீதியில் செய்திகளை போட்டு மேரியை அவமானப்படுத்துகிறார்கள்.
மொத்த மக்களும் மேரியை அவமானப்படுத்துகிறார்கள்.
கேலியாக சிரிக்கிறார்கள்.
மேரியோ மனதளவில் உடைந்து விடுகிறார். அவருக்கு தற்கொலை எண்ணம் வருகிறது.
இருப்பினும் சாகக்கூடாது என்று தன் மன அழுத்தம் முழுவதையும் ஆராய்ச்சி கூடத்திலேயே இருந்து புதிதாய் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்.
மேரி அந்த காலப் பெண் ஆனதால் தன் மறை காதல் பற்றி நிறைய குற்ற உணர்வு கொள்கிறார்.
தன் கணவருக்கு துரோகம் இழைத்து விட்டதாகவே நினைக்கிறார். தன் மகள் கணவர் பெயரை போட்டு தன் பெயரை கடித்தத்தில் குறிப்பிடும் போது “மகளே அம்மாவுக்கு ஒரு நன்மை செய்வதாய் இருந்தால் அப்பா பெயருடன் என் பெயரை போடாதே. அதற்கு தகுதியானவள் நானில்லை. அவருக்கு துரோகம் செய்தவள் நான் “என்று உருகுகிறார். அவரைப் பொறுத்தவரை அதை தவறாக நினைக்கிறார்.
பின் தன் மறைக்காதலை விட்டு மேரி விலகுகிறார்.
மீண்டும் மீண்டும் அறிவியலிலேயே தன் மனதை திருப்புகிறார்.
ஆனால் சமூகம் அவரை கிண்டல் செய்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில் மேரி கியூரி 1911 ஆம் தன் இரண்டாம் நோபல் பரிசை பெறுகிறார். இது எந்த பெண்ணும் சாதிக்காத உலக சாதனையாகும்.
மேரியின் சாதனையைப் பார்த்த சமூகம் அமைதியாகிறது.
அதோடு மேரி விடவில்லை.
முதல் உலகப்போரில் ப்ரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. ஒவ்வொருவரையும் எக்ஸ்ரே எடுக்க பாரீஸுக்கு எடுத்து வர வேண்டியதாய் இருக்கிறது.
ஒருவேளை எக்ஸ்ரே மிஷின் போர்களத்திலேயே இருந்தால் வசதியாய் இருக்கும் என்று அவர்கள் கருதினர்.
ஆனால் எக்ஸ்ரே மிஷினை எப்படி போர்க்களத்துக்கு எடுத்து செல்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. மேரி கியூரி அந்த எக்ஸ்ரே மிஷினை கொஞ்சம் மாற்றி வடிவமைத்தார்.
பெரிய ட்ரக் வண்டி இருபது வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தார். எக்ஸ்ரே மிஷினை தூக்கி ட்ரக்கில் வைத்தார். அப்படி இருபது வண்டிகள் தயார் செய்தார்.
அதை ஓட்ட இருபது பெண்களை தயார் செய்தார். வண்டி நின்றுவிட்டால் அதை மறுபடியும் ஓட்ட வைக்க மோட்டார் மெக்கானிசம் கற்றுக் கொண்டார்.
”எட்றா வண்டியை” என்று நகரும் எக்ஸ்ரே மிஷினோடு ப்ரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு சேவை செய்ய போய்விட்டார்.
இதனாலேயே சின்ன சின்ன அறுவை சிகிச்சையை டாக்டர்களால் களத்திலேயே செய்ய முடிந்தது. அதனால் பல வீரர்கள் குணமடைந்தனர்.
முதலாம் உலகப்போரில் ப்ரான்ஸ் வெற்றி பெற மேரி கியூரி அப்படி உதவினார்.
சமூக மேரி கியூரிக்கு கொடுத்தது என்னவோ அவமானமும் கேலியும்தான்.
ஆனால் மேரி சமூகத்துக்கு கொடுத்தது அன்பையும் தியாகத்தையும்தான்.
மேரி கியூரியின் முதல் நோபல் பரிசுக்கும் இரண்டாம் நோபல் பரிசுக்கும் இடைப்பட்ட அந்த 5 வருடங்களும் அவருக்கு வந்த பிரச்சனை வேறு யாருக்காவது வந்திருந்தால் அவர்கள் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் மேரி கியூரி தாக்குபிடித்து திரும்ப அடித்தார்.
அந்த அடியை எதிர்மறையாக அடிக்காமல் சமூகத்துக்கு நன்மை செய்யும் நேர்மறை அடியாக அடித்தார்.
க்ரேட் இல்ல...
மேரி கியூரியிடம் இருந்து சோர்வடைந்த உள்ளங்கள் கற்றுக் கொண்டு புத்துணர்வடைய ஏராளம் இருக்கிறதுதான்.
இன்று நவம்பர் 7 மேரி கியூரியின் பிறந்தநாள் ஆகும்.
Vijay Bhaskarvijay பதிவு
No comments:
Post a Comment